Tuesday, May 13, 2008

கவிதை நூல் வெளியீடு (ஒரு பட்டாம்பூச்சியின் கனவுகள்)


நண்பர்களுக்கு வணக்கம்.
என்னுடைய மூன்றாவது கவிதை நூல் "ஒரு பட்டாம்பூச்சியின் கனவுகள்"
கடந்த ஞாயிறன்று வெளியானது.
விஸ்டம் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளார்கள்.

இணையம் மூலமாக பெற இங்கே சொடுக்குங்கள்

சென்னையில் இப்புத்தகம் கிடைக்குமிடங்கள்:

New Book Lands
#52C Basement
North Usman Road
T. Nagar
Chennai - 600017
Landmark: Opp ARR Complex,Near Panagal Park
Phone: 044-28158171, 28156006

2.Hikkin Bothams

3.AnyIndian Book shop,T.nagar

4.New Century book shop

5.Wisdom Educational Service
10/8, Dr.Nammalvar Street,
Triplicane,
Chennai-600005
Phone:044-28447476
Mobile:9382181319,9841162927
Email:wisdomedu2003@yahoo.co.in

LIST OF NEW CENTURY BOOK HOUSE (P) LTD., BRANCHES:


  1. NEW CENTURY BOOK HOUSE (P) LTD.,

NO.156/786, ANNA SALAI,

CHENNAI – 600 002.

PHONE: 044 – 2852 8351.

CONTACT PERSON: MR.A.AVUDAIAPPAN

MANAGER / 94449 08351.

  1. NEW CENTURY BOOK HOUSE (P) LTD.,

NO.25-26, MARUDEESWARAR TEMPLE COMPLEX,

THIRUVANMIYUR, CHENNAI – 600 041.

PHONE: 044 – 2440 4873.

CONTACT PERSON: MR.N.GOPINATHAN

SR.MANAGER / 94440 14162.

  1. NEW CENTURY BOOK HOUSE (P) LTD.,

79-80, WEST TOWER STREET,

MADURAI – 625 001.

PHONES: 0452 – 2344 106 / 2350 271.

CONTACT PERSON: MR.A.KRISHNAMURTHY

ZONAL MANGER / 94430 44106.

  1. NEW CENTURY BOOK HOUSE (P) LTD.,

NO.4, PERIYAR BUS STAND,

BHARATHI STATUE (SOUTH SIDE),

TIRUNELVELI – 627 003.

PHONE: 0462 – 2323 990.

CONTACT PERSON: MR.A.MURUGESAN

MANGER / 94434 96955

  1. NEW CENTURY BOOK HOUSE (P) LTD.,

NO.35, MAIN ROAD,

DINDIGUL – 624 001.

PHONE: 0451 – 2432 172.

CONTACT PERSON: MR.KRISHNAKUMAR

MANGER / 94427 63247

  1. NEW CENTURY BOOK HOUSE (P) LTD.,

NOS.3 & 4, NEHRU STADIUM, V.O.C.PARK,

COMBATORE – 641 018.

PHONE: 0422 – 2380 554.

CONTACT PERSON: MR.N.A.AZEES

MANGER / 94423 44708

  1. NEW CENTURY BOOK HOUSE (P) LTD.,

NO.165/A, CHERRY ROAD,

SALEM – 636 001.

PHONE: 0427 – 2450 817.

CONTACT PERSON: MR.A.GANESAN

MANAGER / 94433 24508.

  1. NEW CENTURY BOOK HOUSE (P) LTD.,

OLD BUS STAND (NEAR SELECT HOTEL),

HOSUR – 635 109.

PHONE: 04344 – 245726.

CONTACT PERSON: MR.KUMAR / INCHARGE.

  1. NEW CENTURY BOOK HOUE (P) LTD.,

CHERRING ROAD,

OOTY – 643 001.

PHONE: 0423 – 2441 743.

CONTACT PERSON: MR.N.A.AZEES / MANAGER.

  1. NEW CENTURY BOOK HOUSE (P) LTD.,

NO.42/7, SINGARATHOPPU,

TRICHY – 620 008.

PHONE: 0431 – 2700 885.

CONTACT PERSON: MR.S.SARAVANAN

ZONAL MANGER / 94433 31371.

  1. NEW CENTURY BOOK HOUSE (P) LTD.,

NO.66, CUDDALORE ROAD,

C.P.I.SHOPPING COMPLEX,

MUDALIYARPET,

PONDICHERRY – 605 004.

PHONE: 0413-2357 403.

CONTACT PERSON: MR.P.V.SUNDAR

MANAGER / 94433 22387.

  1. NEW CENTURY BOOK HOUSE (P) LTD.,

SHOP NOS.1 & 43, MUNICIPAL NEW SHOPPING COMPLEX,

VELLORE – 632 004.

PHONE: 0416 – 2234 495.

CONTACT PERSON: MR.ESURAJ / 94433 54495.


LANDMARK LIMITED BRANCHES IN CHENNAI :

1. LANDMARK LIMITED

APEX PLAZA,

NO.3, NUNGAMBAKKAM HIGH ROAD,

CHENNAI – 600 034.

2. LANDMARK LIMITED,

SPENCER PLAZA,

MOUNT ROAD,

CHENNAI – 600 002.

3. LANDMARK LIMITED,

CHENNAI CITI CENTRE,

NO.3 & 4, DR.RADHAKRISHNAN SALAI,

MYLAPORE, CHENNAI – 600 004.


தமிழகத்தில் உள்ள அனைத்து ஹிக்கிங் பாதம்ஸ் மற்றும் நியூ சென்சுரி புக் ஹவுஸிலும் கிடைக்கும்.

உங்களது மேலான விமர்சனங்களுக்காக காத்திருக்கிறேன்.

அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.


Monday, May 12, 2008

ஒற்றைச் சிறகு..



வளர்த்துவந்த பிரியங்களை
வீதியில் வீசிவிட்டு
முகமில்லாமல்
திரும்பிச் செல்கிறாய்...
புள்ளியென மறைந்துவிட்ட
பின்னரும் உன் கையசைப்புக்காக
காத்திருக்கிறது
பழக்கப்பட்ட இதயம்.
பிரிந்திருந்த பொழுதுகளைவிட
பிரிகின்ற பொழுதின்
கனம் அதிகமானதாகவே இருக்கிறது
எப்போதும்.

பொட்டிழந்த உன் நெற்றிக்கென
நான் கொணர்ந்த குங்குமம்
அந்தி மழையில் கரைய,
வீடு நோக்கி நடக்கின்றன
உணர்வற்ற என் கால்கள்.

Wednesday, May 07, 2008

நேயா பெண்கள் மாத இதழில் என் கவிதைகள்.


நண்பர்களுக்கு,
நேயா பெண்கள் மாத இதழில்(மே 08 இதழ்) என்னுடைய மூன்று கவிதைகள் வெளியாகியுள்ளன.

இத்துடன் வெளியான இரண்டு கவிதைகளை இணைத்துள்ளேன்.


நட்புடன்,

நிலாரசிகன்.

Tuesday, May 06, 2008

குட்டிக் கவிதைகள் - பாகம் 3



1. அம்மாவின் புகைப்படத்திற்கு
மாலையிடும் அப்பாவின்
சட்டையில் குங்குமம்.

2. பேனா முனை உடைத்தவுடன்
எழுதப்படுகின்றன எனக்கான
தீர்ப்புகள்.

3.கரையவில்லை மஞ்சள்;
குளக்கரை படிக்கட்டில்
கால்வழுக்கிய தடம்.

4.முல்லை மலர்ந்தும்
வரவில்லை மல்லிகை
வாடியது மலர்.

Friday, May 02, 2008

மொழியில்லாத் தருணங்கள்...



தளர்ந்த விரல்பிடியை நடுநிசியில்
இறுக்கிக்கொள்ளும் குழந்தையில்..

வெகுநாட்கள் கழித்து வீடுதிரும்புகையில்
கால்சுற்றும் நாய்க்குட்டியின் பார்வையில்..

தேங்கிய மழைநீரில் மிதக்கின்ற
வாடிய மல்லிகைப்பூக்களில்...

தொலைதூர பயணத்தின் வழியனுப்புதலில்
வழிகின்ற கண்ணீர்த்துளியில்...

புணர்ந்த களைப்பில் நெஞ்சிலுறங்கும்
துணையின் மூச்சுக்காற்றில்...


மொழியில்லாத் தருணங்களிலும்
பிறக்கத்தான் செய்கின்றன
கவிதைகள்..

Tuesday, April 22, 2008

கல்லெறியப்பட்ட கனவுகள்...


கதவிடுக்கில் சிக்கிய விரலென உன் பிரிவில் நசுங்கிய என் காதலில் வழிகிறது ஞாபகரத்தம்..


உனக்குத் தந்த முத்தங்களை மறக்கடித்துவிட்டது காலம். காதோரம் முணுமுணுக்கிறது முத்தமிட்டபோது காற்றில் கலந்த சிணுங்கல்சப்தம்.


கடல்போன்றது நம் காதல் என்று நீ சொன்னபோது புரியவில்லை,நீந்தத்தெரியாதவன் நானென்று.


இந்த பின்னிரவில் ஜன்னலோர தென்னைமர கீற்றில் விழுந்துதெரிக்கும் மழைத்துளிகளின் சப்தங்கள் வருடம் பல கடந்துவிட்ட காதலை நினைவூட்டுகிறது.


ஒரு ஆத்ம நேசிப்புக்காக ஏங்கித் தவித்த பொழுதில் தலைகோதும் மென்விரல் தந்து நெஞ்சோடுஅணைத்து காதல்தீபம் ஏற்றினாய்.

நீ ஏற்றிய தீபத்தில் சாம்பலானது மட்டும் என் கனவுகள்...


நெடுஞ்சாலையில் வேகமாய் பயணிக்கும் உனக்கு, சாலையோரம் வீழ்ந்த பூக்களின் நலம்விசாரிக்கும் என்னை அடையாளம் தெரிய வாய்ப்பில்லை.


கண்ணாடித்தொட்டிக்குள் நீந்துகின்ற தங்கமீனுக்கும் எனக்கும் அதிகம் வித்தியாசமில்லை.


எப்பொழுதும் என் நினைவுகளில் நீ இல்லை என்பது நிஜம். எப்பொழுதெல்லாம் உன் பூமுகம் நினைவில் மலர்கிறதோ அப்பொழுதெல்லாம் வாடிவிடுகிறேன் நான்.


இலையுதிர்காலத்திலும் செழித்து பூக்கள் சொரிந்த மரமாக நின்றிருந்தேன் அருகில் நீ இருந்தபோது.

இன்று வசந்தகாலத்திலும் பட்டமரமாய் வேர்களின்றி விழுந்து புலம்புகிறேன்.


நினைக்க மறக்காதே,மறக்க நினைக்காதே என்று நீ எழுதிய கடிதங்களை நினைத்து அவ்வப்போது சிரிக்கவும் செய்கிறேன்.உனக்கென் நன்றிகள்.


சாதியும்,மதமும் எதிரியாக வந்திருந்தால்கூட வென்றிருப்பேன். உன்னை தோற்கடித்து காதலில் ஜெயிக்க சொன்னாய் நீ.


யுத்தமிட்டு ஜெயிக்க இது தேசமல்ல. நேசம் என்று சொல்லிவிட்டு திரும்பிவந்தேன்.வீதியெங்கும் இறைந்து கிடக்கின்றன காயப்பட்ட என் கனவுகளின் மிச்சங்கள்...

Thursday, April 17, 2008

பேச்சிலர் கவிதைகள்...




1.கொடுக்கல் வாங்கலின்
திருப்தியின்மையை
மெளனத்தால் பேசுகிறான்
அறைத்தோழன்.

2.கலைத்துப்போட்ட அறையிலும்
கலையாமலிருப்பது நிறைய
கனவுகளும் ஒருத்தியின்
நினைவுகளும்.

3.சலவைக்கு போய்வந்த
சட்டைக்குள் ஒளிந்திருக்கும்
மறந்த ரூபாய் நோட்டில்
வெண்மையாகிறது ஒரு
கறுப்பு விடியல்.

4.நேர்முகத்தேர்வில்
தோற்று திரும்பும்பொழுதெல்லாம்
மனசுக்குள் சத்தமிடுகிறது
அம்மாவின் பிராத்தனையும்
அப்பாவின் மெளனக்கண்ணீரும்.

Monday, April 14, 2008

பட்டம்

பக்கத்து தெரு
கோவிலுக்கு போனதில்லை
பாட்டி.

அடுத்த ஊர்
மாதச்சந்தையை கனவில்
மட்டுமே கண்டுமகிழ்ந்தாள்
அம்மா.

சினிமாவில் மட்டுமே
சென்னை ரசித்தாள்
அக்கா.

குடும்பத்தில் முதன்முதலாய்
படித்தவன் என்கிற
பட்டத்துடன்,
கடல்கடந்து பறக்க எத்தனிக்கிறேன்
பெண்ணடிமை விலங்குகளை
உடைக்க முயற்சிக்காத
ஆணாக.

Thursday, April 10, 2008

புலம்பெயர்ந்தவனின் விதி!




காற்றில் அடித்த
சன்னல்க்கதவுகளின் பேரோசையில்
திடுக்கிட்டு விழித்தழுகிறது
தொட்டில்குழந்தை...

அடைமழை நாட்களில்
தூரத்து இடியோசைகேட்டு
நாற்காலியின் அடியில்
ஓடி ஒளிகின்றாள்
நான்குவயது மகள்...

கதவு தட்டப்படும்
போதெல்லாம்
நடுங்க ஆரம்பிக்கிறது
பாட்டியின் தேகம்..

ஆயிரம் மைல்களுக்கு
அப்பால் புலம்பெயர்ந்த
பின்னும்
தொடர்ந்துகொண்டே இருக்கிறது
ஈழத்தின் அதிர்வலைகள்.

Wednesday, April 09, 2008

உன் திருமண அழைப்பிதழ்

ஒரு சிற்றெறும்பென‌
உன் ஞாபகங்களை
சேமித்துவைத்திருந்தேன்.
மழையாய் வந்து
நீ அழித்துச்செல்லும்வரை!

Sunday, April 06, 2008

சலசலப்பற்ற நதியை
உணர்வுகளின்றி நகரும்
உச்சிவெயில்பொழுதுகள்
நினைவூட்டுகின்றன...

இரவின் நீட்சியை
காற்றில் கையசைத்து
குறைத்திட முயன்று
தோற்கிறது தென்னைமரக்கீற்று..

குழந்தைமை மாறா சிரிப்புக்குள்
மறைந்துகொள்கிறது
மூளைவளர்ச்சியற்ற கன்னியொருத்தியின்
ஆடைவிலகிய அங்கங்கள்...

எழுத்தில் வடிக்காவிட்டாலும்
எங்காவது எழுதப்பட்டுக்கொண்டே
இருக்கின்றன கவிதைகள்...

Wednesday, April 02, 2008

மனித உருவில் ஒரு மிருகம்!

ஆண் என்கிற ஒரே காரணத்திற்காக தன் மனைவியை,தன் உயிரின் மறுபாதியை தன் இஷ்டப்படி 25 ஆண்டுகளாய் கொடுமைப்படுத்திய ஒரு கொடூரனைப் பற்றிய கட்டுரை இன்று படிக்க நேர்ந்தது.

இவர்களுக்கெல்லாம் என்ன தண்டனை கொடுப்பது!!! இறைவனின் படைப்புப்பிழை இந்த மனித மிருகங்கள்...

கட்டுரை:
(நன்றி : ஜீனியர் விகடன்)




''ரத்தம் கொட்டினாலும் அவரோட 'பசி'யை தீர்த்தாகணும்...'' ''தலைக்காயத்துக்கு சர்க்கரையும் டீத்தூளும்...''
இந்திராணியின் இல்லற வாக்குமூலம்

'பின்னால இருந்து தலையில மல்லிகைப் பூ வச்சிவிட்டு தாடை யில விரல்பதிச்சு செல்லமாய் முகத்தைத் திருப்பி புருஷன் புன்னகை பூப்பான். அப்ப வெக்கத்துல, 'நான் மொதல்ல சிவக்குறேனா... நீ முதல்ல செவக்குறியா'னு ரெண்டு கன்னத்துக்கும் போட்டியே நடக்கும்!''- சக பெண்களுக்கு கிடைக்கும் இந்த சுகம் தனக்கும் கிடைக்கும் என்று நம்பித்தான் கும்பகோணத்தில் வாக்கப்பட்டாள் இந்தி ராணி. அந்த பதினேழு வயசில் அவளுக்குள் பதினேழாயிரம் ஆசைகள்.

முதல் ராத்திரியில்...

பால் சொம்புடன் மல்லிகை மணம் கமழ இந்திராணி கணவன் காலில் விழப் போகிறாள்... அவளைப் பார்த்து கணவன்,

'என்னடீ... பெரிய இவளாட்டம் பாலைத் தூக்கிட்டு வந்துட்டே? எங்கடீ கல்யாணத்துல வசூலான மொய்ப் பணம்? உன்னோட குடும்பத்துக்காரனுகளே

தூக்கிட்டுப் போயிட்டானுங்களா? சொல்றீ... சொல்லித்தொலை...' - திட்டிக்கொண்டே இந்திராணியின் தலையைப் பிடித்து சுவரில் அவன் இழுத்துமோத... புருஷன் தன்னை இப்படித்தான் மயக்கப் போகிறான் எனத் தெரியாமல் தலையில் ரத்தம் வடிய பொத்தென விழுந்து மயங்கினாள் இந்திராணி.

இப்படித் துவங்கிய முதலிரவுக்குப் பின் இருபத்தைந்து வருடங்கள் உருண்டோடி விட்டன. இப்போது இந்திராணி மொட்டை போட்டிருக்கிறார். தலை முழுக்க, 'கஜினி' படத்தில் சூர்யாவின் தலையில் கிடக்குமே ஒரு தழும்பு, அதுபோல் பதினாறுக்கும் அதிகமான தழும்புகள். எல்லாமே கணவன் என்ற மிருகத்தின் காணிக்கை. கால் நூற்றாண்டுகால மணவாழ்க்கையில் தலையில் எத்தனை தழும்புகளைத்தான் தாங்குவது? வெடித்துவிடும் அளவுக்குத் தலை வலித்ததால் சாமியிடம் வேண்டிக்கொண்டு மொட்டை அடித்துக்கொண்டார் இந்திராணி.

இந்திராணியின் மொட்டைத் தலையைப் பார்த்து அதிர்ந்து போனார் அவருடைய தோழியும் கன்னியாஸ்திரியுமான லீமாரோஸ். 'என்னம்மா இது?' என கேட்க, அப்போதுதான் கணவனின் கொடுமைகளை இறக்கி வைத்திருக்கிறார் இந்திரா. லீமாரோஸ் மூலம் நம் கவனத்துக்கு வந்தவர் தன் துயரக் கதையை நேரடியாக நம்மிடம் சொன்னார்.

''முதல் ராத்திரிலருந்தே கொடுமைதாங்க. இவ்வளவுக்கும் இடையில மூணு பொண்ணு, மூணு பையன் மொத்தம் ஆறு பிள்ளைங்க. சின்ன வயசிலேயே கல்யாணம் ஆனதால எந்த நல்லது கெட்டதும் தெரியலை. கட்டின புருஷனை எதுத்து ஏதும் செய்யக் கூடாதுங்கிறதால கம்முன்னு இருந்திட்டேன். இதை அவரு பயன்படுத்திக்கிட்டு தன் இஷ்டப்படி எல்லாம் என்னை ஆட்டிப் படைச்சாரு. காட்டுமிராண்டி மாதிரி அடிப்பாரு. ரத்தம் கொட்டோ கொட்டுன்னு கொட்டினாலும் அதை சட்டையே பண்ணாம அவரோட 'பசி'யை தீர்த்துக்குவாரு. அவரு உக்காரச் சொன்னா உக்காரணும். படுக்கச் சொன்னா படுக்கணும். அவர் தூங்குற வரைக்கும் சத்தம் போட்டுக்கூட அழக் கூடாது. அவர் அடிச்சு தலையில காயம் வர்றப்ப எல்லாம் டீத்தூளையும் சர்க்கரையையும் கலந்து மருந்தா போட்டுக்குவேன்'' என இந்திராணி சொல்லச் சொல்ல அதிர்ந்து போனோம்.

''தலையில அடிச்சாதான் நல்லா உறைக்கும்னு சொல்லிச் சொல்லி தலையிலேயே அடிச்சதால தலை முழுக்க தழும்பாப் போச்சு. சமயத்துல காயம் ஆறாம சீழ் வச்சிடுச்சு. என்னோட பெரிய பையன் கூலி வேலைப் பார்த்து எனக்கு வைத்தியம் பார்ப்பான்.

என் பிள்ளைகளுக்கு அப்பான்னு இவர் வேணும். புருஷன் இல்லாம வாழ்றது ஊரு உலகத்துக்கு சரியா வராதேனு எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு இருந்தேன். மூத்தப் பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. ஒரு பையனை அங்க இங்க கடன் வாங்கி வெளிநாட்டுக்கு அனுப்பிட்டேன். மத்த இரண்டு பசங்களும் கூலி வேலைக்குப் போறாங்க. பொண்ணுங்க படிக்கிறாங்க. பெரிய பையன் 'இனிமேயும் இந்த அப்பா நமக்கு வேணாம்மா! நீ மட்டும் நல்லாயிருந்தா போதும். அவருக்கு சோறு போட்டு கவனிக்காதே. எங்களோட தனியா வந்துடு'ன்னு திட்டுறான். என் மனசுதான் கேட்க மாட்டேங்குது.

கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி இவரு குடிச்சு குடிச்சே குடலு வெந்து கிடந்தப்ப, அவன்தான் காசு செலவு பண்ணி தன் ரத்தத்தையும் கொடுத்துக் காப்பாத்தினான். கொஞ்சம் குணமானதும் மறுபடியும் குடிக்கிறதும் என்னையும் பிள்ளைகளையும் போட்டு அடிக்கிறதுன்னு பழைய வேலையை ஆரம்பிச்சுட்டாரு. இப்போ எனக்கு அடிக்கடி தலைவலி வருது. கொஞ்ச நேரம் வேலை பார்த்தாலே தலை சுத்துது. தலைவலி தீரணும்னுதான் கோயில்ல வேண்டிக்கிட்டு மொட்டை போட்டுக்கிட்டேன். மிச்சமிருக்கிற காலத்துக்கு தலையில பெரிசா ஏதும் பாதிப்பு வந்திருக்கக் கூடாதுன்னு வேண்டிக்கிட்டு இருக்கேன். நான் வேறென்ன பண்ண முடியும்?'' - வெடித்துக் கிளம்பிய அழுகையோடு சொல்லி முடித்தார் இந்திராணி.

கன்னிகாஸ்திரி லீமாரோஸ் நம்மிடம், ''ஒவ்வொரு தழும்பும் 3 இன்ச்-சிலிருந்து 4 இன்ச் நீளத்துக்கு இருக்கு. எப்படித்தான் இந்திராணி இந்த சித்ரவதையை தாங்கிக்கிட்டு இவ்வளவு நாள் இருந்தாங்களோ தெரியலை. ஸ்கேன் எடுத்துப் பார்த்தாத்தான் தலையில என்னென்ன பாதிப்பு இருக்குன்னு தெளிவா சொல்ல முடியும். இந்திராணிக்கு மேலும் கொடுமை நடக்காதபடி நாங்க பார்த்துக்கிறோம். இவரை மாதிரிதான் அநேகம் கிராமத்துப் பொண்ணுங்க அறியாமையாலும், அடிமைத்தனத்தாலும் பல கொடுமைகளுக்கு ஆளாகுறாங்க. சமூக நலத்துறையும் பொதுநல அமைப்புகளும் கைகோத்து செயல்பட்டால்தான் இந்தக் கொடுமைக்கெல்லாம் தீர்வு கிடைக்கும்'' என்றார்.

'உங்க கொடுமைக்கார கணவர் ஊர் - பேரைச் சொல்லவே இல்லியே... அவர் இப்போ எங்க இருக்காரு?'- இந்திராவிடம் கேட்டோம்.

'வீட்டுக்காரர் பேரை சொல்றதா...? எங்காச்சும் விழுந்து கெடப்பாரு. அவர் பேரு... வேணாமே! ' யோசித்து யோசித்து கடைசியில் சொன்னார் இந்திராணி - ''கிருஷ்ணமூர்த்திங்க...''

அதன்பிறகு கிருஷ்ணமூர்த்தி எங்கிருப்பார் என்று இந்திராணி யூகித்துச் சொன்ன சில இடங்களிலும் கிருஷ்ணமூர்த்தியைத் தேடினோம். கிடைக்கவில்லை. ஒருவேளை, கட்டுரை வெளியான பிறகு கிருஷ்ணமூர்த்தி தன் தரப்பாக எதையும் சொல்ல விரும்பி தெரிவித்தால் அதனையும் பிரசுரிக்கத் தயாராகவே இருக்கிறோம்.

வெளிச்சத்துக்கு வராமல் இன்னும் எத்தனையெத்தனை இந்திராணிகள் இப்படி துன்பக் கேணியில் உழன்று கொண்டிருக்கிறார்களோ?
-சி. சுரேஷ்
படங்கள்: எ.பிரேம்குமார்

Tuesday, April 01, 2008

குறைப்பிறவி


உயிர்த்தெழுதல் சாத்தியமற்று
தூசிக்குள் புதைந்துகிடக்கிறது
அரங்கேறா கவிதைகள் சில..

கவிதைகளின் மெல்லிய
விசும்பல்சப்தம்
செவிக்கருகில் ஒலித்து
ஓய்கிறது தினமும்...

ஓடித்திரியும் பிள்ளையைவிட
ஊனப்பிள்ளைமீதே
தாய்பாசம் அதிகமென்று
உணர்த்த இயலாமல்
தோற்கிறேன் நான்.

Monday, March 31, 2008

சொற்கள் தீர்ந்த பொழுதில்...




பின்னிரவின் நீளம்
குறைத்திட முயன்று
தோற்றுக்கொண்டிருந்தேன்..

இருள் சூழ்ந்த
மரத்தடியில் உருவமற்ற
அரவமொன்றின்
நெளிதல் சத்தம் கதவிடுக்கின்
வழியே கசிந்துகொண்டிருந்தது...

ஒரே இரவில்
வறண்டு பாலையென
காட்சியளித்தது
என் கடல்..

சொற்கள் தீர்ந்த ஏதோவொரு
உலகில் என் இறுதிச்சுவடுகள்
பதிந்திருக்கக்கூடும்.

Thursday, March 27, 2008

எழுத்தாளர் சைலஜா அவர்களின் விமர்சனம்

என்னுடைய "மயிலிறகாய் ஒரு காதல்" கவிதை நூலிற்கு எழுத்தாளர் சைலஜா அவர்களின் விமர்சனம்.

இங்கே கேட்கலாம் : http://tamil.sify.com/audio/shylaja/fullstory.php?id=14629661

Wednesday, March 26, 2008

பள்ளி குழந்தைகளுக்கு உதவி தேவை

நண்பர்களே,

சென்னையில் உள்ள சைவேட் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். மேலதிக விபரங்களுக்கு இந்த சுட்டியை சொடுக்கவும்.

http://www.helptolive.org/projects_detail.asp?id=64

உங்களது நண்பர்களுக்கும் இதனை தெரிவிக்கலாம். நாளைய நம்பிக்கை விதைகளுக்கு நீருற்ற உதவிக்கரம் நீட்டுங்கள்.

நன்றி.

Tuesday, March 25, 2008

அம்மா


காய்ச்சலில் நெற்றி
தொடும்போதும்,
மழையில் நனைந்து
தலைதுவட்டும் போதும்
தோல்விகளில்
தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்த
ஆளில்லாதபோதும்,
நினைவுகளில் நிழலாடுகிறது
அம்மாவின் அன்புக்கை.
(இந்தக் கவிதை ஏழு வருடங்களுக்கு முன்பு எழுதியது)

Monday, March 24, 2008

கறை

வேட்டியின் கிழிசலால்
விழுந்தது அடி.

வலியை மறைத்துக்கொண்டு
தைத்துக்கொடுத்தாள்.

கட்சிக்கூட்டம் நோக்கி
மெல்ல நகர்ந்தது
கறைபடிந்த ஆண்மை.

இழந்த சுயத்தால்
இருளில் கரையத்தொடங்கியது
பெண்மை.

Wednesday, March 19, 2008

வினை எச்சம்


படுக்கை நனைத்த‌
மகனை அடித்துவிட்டு
வாசல் வந்தேன்.
உச்சந்தலையில் எச்சமிட்டு
பறந்தது காகம்.

Monday, March 17, 2008

கவிதை : நட்புத் துளிகள்... பாகம்-1





1.பிரிந்தென்னை
சிலுவையில்
அறைந்துபோனாய்
உயிர்த்தெழுகின்றன உன்
ஞாபகங்கள்...


2. புள்ளியாக நீ
மறையும் வரையில்
நின்றழுதேன்.
புள்ளியில்லாக் கோலமாக
மாறிப்போனது
நம் நட்பு.

3.நண்பர்கள் பிரியும்
பொழுதெல்லாம் அழுகிறான்
இறைவன்,
மழையுருவில்.


4.காரணமின்றி பிரிதலும்
பின்னுணர்ந்து தோள்சேர்தலும்
நட்பில் மட்டுமே
சாத்தியம்.


5.தினம் திட்டும் அப்பாவின்
வார்த்தைகளைவிட
திட்டாமல நகரும்
நண்பனின் மெளனம்
கொடியது.