Thursday, April 11, 2013

குடுவையிலிருந்து வெளி கிளம்பி நிசி முழுக்க துள்ளி நிறையும் மீன்கள்


Thanks :  http://thenpakirvukal.blogspot.in/2013/04/blog-post.html

நவீனம், புதுமை இந்த இரண்டு வார்த்தைக்கும் ஏறக்குறைய வித்தியாசம் அதிகம் இல்லையென்றாலும் உபயோகப்படுத்தும் இடம் பொருள் வெவ்வேறாகத்தான் இருக்கிறது இன்றளவும். புதுமை என்பது ஒரு சாத்தியமாதலுக்கான உருவமாகவும், நவீனம் என்பது ஒரு நிகழ்ச்சி சாத்தியமாதல் சாத்தியமா என்றதான ஒரு விளிம்பில் நிற்கும் உருவமாகவும் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. மீன்கள் துள்ளும் நிசி முழுதும் இவ்விரண்டு வகையின் உருவத்திற்கான விதைகள் கவிதைகள் வழி நிறைய தூவப்பட்டிருக்கின்றன.


எப்பொழுதானாலும் நம்மில் இரண்டில் ஒருவருக்கு கனவுருப்புனைவு எனும் ஒற்றை சொல்லை ஒவ்வொரு உருவத்திலும் தேடும் நிலை நிரந்தரமாக மனதில் உச்சியேறி அமர்ந்து கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது நிச்சயமாக மிகையில்லை. அத்தகையான தனி உலகங்களுக்கு கனவுருப்புனைவு மூலம் நம்மை விரல் பிடித்து அழைத்துச் சென்று நம்மையே வாழ் வைத்து ரசிக்க விடுகிறார் நிலாரசிகன். புதுமை, நவீனம் என்னும் இவ்விரு சொற்களின் கொக்கியை மிக நீண்ட வளையமாக நமக்கு வளைத்துத் தரும், நாம் காணும் நவீன கவிஞர்களுள் சமீப காலமாக நிலாரசிகன் மிக முக்கியமான இடம் பிடித்திருக்கிறார். இந்த 'மீன்கள் துள்ளும் நிசி' தொகுப்பு அவரின் நவீன கவிதை வரிசையில் 'வெயில் தின்ற மழை' தொகுப்புக்கு அடுத்தபடி வெளிவந்துள்ள இரண்டாமது தொகுப்பு.

சமீபமாக நவீன கவிதைகள் வரிசையில், கவிதை புத்தகங்களின் எண்ணிக்கை சற்று கூடியிருப்பது மிகவும் மகிழ்ச்சியான ஒரு நிகழ்வாக மனதில் படிந்து விட்டது. ஒவ்வொரு கவிதை நூலும் ஒவ்வொரு விதமான உலகை நமக்கு அறிமுகம் செய்து விடுகிறது. இந்த தொகுப்பிலும் அப்படியான ஒரு உலகின் கூறுகளையும், உலகின் மையத்தில் புனைபாத்திரங்களையும் உலவ விட்டு உலகின் விளிம்பில் நம் ரசனையை சிறகடித்து பறக்க விடுகிறார் நிலாரசிகன். காலங்களை நிற்க செய்வதும், காலங்களூடே பின்னோக்கி பயணிப்பதும், காலத்தையே கொஞ்சம் முன்னோக்கி உருள விடுவதும் மிக இலகுவாக வாய்த்து விடுகிறது இவருக்கு. உதாரணமாக, இத்தொகுதியின் முதற்கவிதையே சற்று நம்மைக் காலத்தோடு விளையாட வைக்கிறது.

மழைவழிப்பயணம்

அவர்கள் மழைப்பாதையில் பயணித்து
இங்கே வந்திருக்கிறார்கள்.
மொத்தம் மூன்று பேர்.
சிறுமி,
நாய்க்குட்டி,
சிறுமியின் குடுவை மீன்.
ஏழாம் நூற்றாண்டை சேர்ந்தவர்கள்
நாங்கள் என்கிறாள் அச்சிறுமி.
மழை வழியே இந்த நூற்றாண்டிற்குள்
எதற்காக இவ்வருகை என்பதை
அறியும் முன் சிறுமியும் நாய்க்குட்டியும்
அடுத்த நூற்றாண்டிற்குள் நுழைந்துவிட்டார்கள்.
அழுக்கற்ற அன்பைத் தேடி இப்பயணம்
என்றது குடுவை மீன்.
முடிவற்ற பயணமிது என்றபடி தவறவிட்டேன்
குடுவையை.

ஒரு நூற்றாண்டிலிருந்து மற்றுமொரு நூற்றாண்டிற்கு மழையின் வழி ஒரு சிறுமி, ஒரு நாய்க்குட்டி, ஒரு குடுவை மீன் பயணித்து வருவதாய் சொல்லி, அதுவும் அவர்கள் அழுக்கற்ற அன்பைத் தேடி பயணிப்பதாயும் சொல்லி இறுதியில் நம்மையும் நம் ஒரு வகையில் தவற விட வைத்து விடுகிறது காலம். காலங்கள் மட்டுமா விளையாட அழைக்கிறது!! நிலமும் பருவமும் கூட நம்மை விளையாட அழைக்கத்தான் செய்கின்றன. ஒரு பாலை நிலத்தில் உருவாகும் மழைக்குப் பின்னுள்ள ஒரு சிறிய கதை புனைந்த ஆளுமையைக் காண பிரமிப்பாக உள்ளது.

முதல் துளி

சைக்கிளின் முன் இருக்கையிலிருந்து
கடந்து செல்லும் மரங்களிடம் பேசியபடி
வருகிறாள் சிறுமி.
மரங்களின் மொழியை அவளுடன்
பயணிக்கும் தட்டான்களுக்கு கற்றுத்தருகிறாள்.
அவளிடம் கற்ற மொழியுடன்
மரத்தின் இலையில் அமர்கின்ற
தட்டான்களின் சிறகில் ஒளிர்ந்து
நகரும் வெயில் மரமொழியை
கற்றுக்கொண்டு மறைந்து போகிறது.
கொதிக்கும் பாலையின் வெயிலுக்குள்ளிருந்து
முளைக்கும் மரக்கன்று
சிறுமியின் மொழியில் தலையசைத்து
தலையசைத்து பேசத் துவங்குகிறது
பாலையின் முதல் துளியிடம்.

சிறுமி - மரங்கள் - தட்டான் - வெயில் - பாலை - துளி, இச்சொற்களுக்குள் பயணிக்கும் பொழுது யதார்த்தமான ஒரு நிகழ்கால தேவை புரிகிறது. நிச்சயமாக நிதர்சனமான உண்மைதான். ஆனால் அதை புனைந்த விதம் சிறுமியின் மொழி கொண்டு அதைக் கோர்த்த புதுமைதான் அக்கவிதையின் சாராம்சத்தை வெகு நேரமாய் நம்மை ஆழ்ந்த புரிதலுக்கு உட்படுத்துகிறது. இந்த கவிதையில் தெள்ளத்தெளிவாகத் தெரியும், இத்தொகுதிக் கவிதைகளின் புனைவுகளின் மறைவில் கொஞ்சம் யதார்த்தமான சுற்றுப் புரிதலும் இருக்குமென்பது. அதற்கு இன்னுமொரு உதாரணம் - நகரம் என்னும் பதினேழாவது கவிதை, அக்கவிதையைப் பற்றி ஏதும் கூறாது அவரவர் மனதிற்குள் அதைச் செலுத்திப் பார்த்தல் நல்லதென்பதாக உணர்கிறேன் நான்.

இன்னுமொரு கோணத்திற்குச் செல்வோம், கீழே குறிக்க பெற்றிருக்கும் கவிதையில், இப்படியொரு புனைவை இத்தகையானதொரு தருணத்திற்கு ஈடாகச் சொல்ல முடியுமாவென மீண்டும் மீண்டும் உள்ளுக்குள் ஒரு போராட்டமே நடந்து முடியும் நொடிகளில், அந்த பெண் என்ன அவதிக்கு உள்ளாகிறாள் என்பதை மிக ஆழமாக நம்மால் உணர முடிந்தால் இக்கவிதை அதன் பாதையில் தெளிவாக முன்னேறுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்

உடலுக்குள் பயணிக்கும் கப்பல்

மடித்துக்கட்டியிருக்கும் காவி நிற
உடையில் வியர்வை பூக்க ஆரம்பித்தபோது
கைகளில் வைத்திருந்த கிளி பொம்மையை
இறுக பற்றிக்கொள்கிறாள்.
இறுக்கம் தாளாத கிளி
தன் தலையை விடுவிக்க முயன்று
அங்குமிங்கும் அசைக்கிறது.
கிளியின் கழுத்திலாடும் சிறுமணியில்
ஒன்று சப்தமின்றி விழுந்து சிதறிய
கணம்
அவளுடலை திறந்து உள்நுழைகிறது
கருமை நிற கடல்.
அங்கே,
நீரைக் கிழித்து பயணிக்கும் கப்பலின்
நிழலில் மிதந்துகொண்டிருக்கிறது
கிளியின் சடலம்.

முக்கியமாக ஜூலி கவிதைகளைப் பற்றி நினைப்பதானால், கொஞ்சம் ஆழ்ந்த மனமும் ஆரத்தழுவும் விழிகளும் நிச்சயம் தேவையாகின்றன. ஒவ்வொரு ஜூலி கவிதையும் நம்மை ஒவ்வொரு உலகுக்கு ஒசை படாமல் துரத்தி மெல்ல தனிமையில் விட்டு சிரிக்கிறது பின்புறம் நின்று. ஓர் ஆழ்ந்த தருணத்தில் சொற்கள் மிகுந்திருக்கும் நாளில் மெலிதாய் விரல்களோடலாம் ஜூலி கவிதைகளில். நட்சத்திரா வண்ணவண்ணமாய் மனம் முழுக்க நிறைந்து விடுகிறாள், ஜுலியுடன் கைகோர்க்கும் நம் விரல் பிடித்து அவளுன் நடக்கத் துவங்கி விடுகிறாள், அவள் கடந்து வந்த பாதையை மிக மெலிதான குரலில் நம் காதுகளில் வெகு இயல்பாக பாட ஆரம்பித்து விடுகிறாள்.

நட்சத்திராவின் வானம்

கைகள் நிறைய பூக்களுடன் நின்றிருந்தாள்
நட்சத்திரா.
கதவு திறந்து உள் அழைத்தேன்.
சிறு சிறு பூக்களால் அறை நிரப்பினாள்.
பின்,
விரல்கோர்த்துக்கொண்டு
மடியிலமர்ந்து கதைகள் ரசித்தாள்.
அனைத்து கதைகளிலும் பறவைகளே
அவளை அதிகம் கவர்ந்தன.
விடைபெறும் தருணம்
அவளிடம் வானமும்
என்னிடம் சிறகுகளும் இடம் மாறியிருந்தன.

பொம்மையாதல் கவிதையை விட தெளிவாக ஒரு குழந்தையின் வனப்பு மிகுந்த வாழ்வை எப்படி சொல்லி விட முடியும்? அச்சு அசல் நம் கண் முன் வந்து போகின்றனர் தெய்வங்கள் சில நொடிகள், தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தை அப்படியே நிலைத்து விடுகிறது நம் கண்களில். இன்னும் பல கவிதைகள் - மார்புக்காலம், கதை சொல்லி, முத்தவடிவினள், சாவுக்குருவி, நதிக்கரையில் நீந்தும் சிறுமீன், அழகன் கழுதை சரித்திரம் என பல கவிதைகள், மனம் முழுக்க நம் எண்ணச்சிறகுகளை வெகு உயரத்தில் படபடக்க வைக்கின்றன.

புத்தகத்தில் சில தவறுகளையும் காண நேர்ந்தது, ஒன்று நடுநிலைத்திணை என்னும் கவிதை இரு முறை ஆறாவதாக ஒரு முறையும் இருபத்தி ஐந்தாக ஒரு முறையும் பதிவாகி இருக்கிறது. அடுத்து இருபத்தி ஆறாம் கவிதைக்கும் இருபத்தி ஏழாம் கவிதைக்கும் தொடர்ச்சி விடும்படியாக அமைந்துள்ளது. இது எனக்கு மட்டும் வந்த ஒரு புத்தகத்திலா? இல்லை முதல் பதிப்பு அனைத்து புத்தகங்களும் இப்படியா என நான் அறியேன்.

படித்து முடித்த தருணத்தில் யதார்த்தத்தை மீறிய ஒரு சுகம் முழுக்க முழுக்க நனைத்திருப்பதை உணராமல் இருக்க முடிவதில்லை. மிக அருமையான தொகுதியை படித்த ஒரு திருப்தியுடன் மூடி வைக்கலாம் புத்தகத்தை. இலகுவாய் பிரிந்து விட இயலாது புனையப்பட்ட உலகங்கள். மெல்ல மெல்ல அந்த உலகங்களுக்குள் சிறிது காலம் இருக்க வேண்டி வரும், இருப்பின் சுகம் உணர அவ்வுலகங்களில் படபடக்கத் துவங்கி விடும் கற்பனை சிறகுகள்.

(மீன்கள் துள்ளும் நிசி – நிலா ரசிகன் – புது எழுத்து பதிப்பகம் – முதல் பதிப்பு டிசம்பர் 2012 - ரூ.60)

[தேனு [ thenuthen@gmail.com]]

Thursday, April 04, 2013

கவிதைகள் ஐந்து

1.தனியனின் உலகம்

திரைப்படம் பார்த்துவிட்டு வெளியே
வருகையில் அவன் அழுததை
யாரும் கவனிக்கவில்லை.
கொஞ்சமாய் அவனுக்கு அந்த
புதுமுக நடிகையை பிடித்திருந்தது.
அவளுடன் பேசவும் தோன்றியிருக்கலாம்.
எதிரே இருந்த பெட்டிக்கடையில்
தொங்குகின்ற வாரயிதழின் அட்டையில்
சிரித்துக்கொண்டிருப்பவளை கண்டான்.
கண்கள் உருட்டி தலைசாய்த்து
அவள் தோன்றும் காட்சி மீண்டும் மீண்டும்
மனதின் ஒருபக்கத்திலிருந்து மறுபக்கம் வரை
ஓடிக்கொண்டே இருந்தது.
பிடித்த பாடலொன்றை முணுமுணுத்தபடி
அறை நோக்கி நடக்க துவங்கினான்.
கடந்து செல்லும் வாகனங்கள்
அனைத்திலிருந்தும் அவள் எட்டிப்பார்ப்பதாய்
எண்ணிக்கொண்டு பேரானந்தத்துடன்
அறைக்குள் நுழைந்து உடை மாற்றினான்.
அவள் யாரைப்போலுமில்லை என்பது
ஆசுவாசம் தந்தது.
அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்துப்பார்த்தான்.
அவள் மறுப்பேதும் சொல்லவில்லை.
மீண்டும் ஒரு முத்தம்.
விடியலில் அறையெங்கும் சிதறிக்கிடக்கும்
முத்தத்தின் மேல் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தான்
அந்த நாற்பத்தி ஏழு வயது தனியன்.


2.அப்புக்குட்டன் துபாய்க்கு போகிறான்

தேரிக்காட்டில் பட்டம் விட்டுக்கொண்டிருந்தார்கள்
பதின்ம வயது சிறுவர்கள்.
பட்டத்திலொன்று அறுந்து காற்றின் வேகத்தில்
மிக வேகமாய் திசைதப்பியது.
அறுந்த பட்டத்தை பிடிக்க நான்கு கால்கள்
ஓடிய கணத்தில் மேலும் இரண்டு கால்கள்
அந்த ஓட்டத்தை முந்திச்சென்றன.
ஆம் அப்புக்குட்டனின் அறிமுகம்
இப்படித்தான் ஆரம்பம்.
பனை மரத்தில் சிக்கிய பட்டத்தை கிழிந்துவிடாமல்
மெதுவாய் எடுத்து வெற்றிச்சிரிப்புடன்
இறங்க துவங்கியபொழுதுதான் முதன்முதலாய்
அந்த விமானத்தை பார்த்தான் அப்புக்குட்டன்.
அன்றிலிருந்து மூன்று நாட்களாய்
திறந்த வாயும் விரிந்த கண்ணுமாய்
அலைந்தவனை அவனது
நாய்க்குட்டிகள் பயத்துடன் பார்த்தன.
தன் பத்தொன்பதாவது வயதின்
இரவொன்றில்
நெல்லை எக்ஸ்பிரஸ்ஸில் டிக்கெட் எடுக்காமல்
பயணித்தவர்களில் இவனும் ஒருவன்.
மீனம்பாக்கத்தில் இரண்டு நாட்கள்
சட்டை கிழிந்த பைத்தியக்காரனுடனும்
மஞ்சள் கறை பற்களுடன் சிரிக்கும்
பிச்சைக்காரனுடனும் சுற்றிக்கொண்டு
தலைமீது கடக்கும் உலோக பறவைகளை
ரசித்து லயித்து திரிந்தான்.
கிழவியின் பாம்படம் முதல் கிழவரின்
வெள்ளி அரைக்கொடி வரை விற்ற பணத்தில்
துபாய்க்கு போகும் டிக்கெட்டை இவன்
கைகளில் திணித்தார்கள்.
மந்திரித்து விட்டவனாய் மின்சார ரயிலில்
சுற்றியவன் கடவுச்சீட்டை
தொலைத்ததும்
திறந்த வாயும் விரிந்த கண்ணுமாய்
புலம்பித்திரிந்ததும் அப்புக்குட்டனின்
கறுப்புச் சரித்திரத்தின் தரித்திரபக்கங்கள்
என்பதால் இத்துடன் அப்புக்குட்டனின்
விமானக்கனவு முற்றுப்பெறுகிறது


3.முகநூல் காதல் அல்லது கருமம்

எதையோ அவனது கண்கள்
மிக வேகமாய் தேடுகின்றன.
குழந்தையொன்றின் புகைப்படத்தை கடந்து
அன்று வெளியான திரைப்படத்திற்கான
விமர்சனத்தை விரைவாக வாசித்து
நகர்கின்றன.
சிறுபெட்டியில் முகமன் சொல்லும்
சினேகிதனை மறுதலித்து மேலிருந்து
கீழ்நோக்கி நகருமவன் எதைத் தேடுகிறோம்
என்பதை அறியாதவனாய் இருக்கிறான்.
பின்னிரவு வரை தேடி ஒன்றும் கிடைக்காத
விரக்தியில் மீண்டும் மேலிருந்து துவங்குகிறான்.
ஒரு புன்னகையுடன் எட்டாயிரம் மைலுக்கு
அப்பால் அவனது பதற்றத்தை உணர்ந்துகொள்ளுமவள்
வேறு ஒருவனின் காதல் குறித்த
நிலைத்தகவலுக்கு விருப்பம் தெரிவிக்கிறாள்.
முகமற்றவளை முகநூலில் அதீதமாய்
நேசித்தவன் உடைந்தழுகிறான்.
இரவு தன் கணித்திரையின் கண்களால்
அவனை உற்று நோக்குகிறது.
யாருமற்ற அந்த அறையில் அவனது
கைகள் எதையோ
மிக வேகமாய் தேடத் துவங்குகின்றன.


4.ஒரு நகரவாசியின் ஞாயிற்றுக்கிழமை மதியப்பொழுது

திடீரென்று கதவு தட்டப்படும்
ஓசை கேட்டவுடன் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
உச்சிவெய்யிலிலும் தேநீர் தயாரித்தும்
முறுக்கு அல்லது சிப்ஸ் கொஞ்சமும்
எடுத்துவைக்க தெரிந்திருக்க வேண்டும்.
ஆதாம் கால செய்தி முதல்
அடுத்த தெரு பசு, கன்று ஈனியது வரையிலான
உரையாடல்களை புன்னகையுடன் கவனிக்கவும் வேண்டும்.
மதிய தூக்கத்திற்கான கொட்டாவியை
கெட்ட ஆவிகளென துரத்திவிடல் நன்று.
திருட்டுத்தனமாக கடிகாரத்தை இரண்டு
நிமிடங்களுக்கு ஒருமுறை பார்க்கவும்
பயின்றிருத்தல் அவசியம்.
நான்கு அல்லது ஐந்து மணியைக் கடந்தும்
வெளியேறவில்லையெனில்
உங்களது இருசக்கர வாகனத்தை
எடுத்துக்கொண்டு கடற்கரை அல்லது
பூங்காவிற்கு சென்று விடல் உத்தமம்.
காய்ந்த ரோஜாவொன்றை கையில்வைத்துக்கொண்டு
புதிய காதலையோ அல்லது
தொலைந்து போன இருபத்தி ஏழாவது
காதலையோ தேடி அலையலாம்.
எதுவும் அமையாத துக்கத்தில்
இரவு ஏழு மணிக்கு வீடு திரும்புகையில்
வாசற்படியில் செருப்புகள் கிடப்பின்
அதிலொன்றை எடுத்து
தலையில் அடித்துக் கொண்டு
ஒன்றும் நடந்துவிடாத பாவனையில்
உங்களது விருந்தினருக்கு ஒரு
ஏக்கப் புன்னகையை பரிசளிக்கவும்
தெரிந்திருந்தால் உங்களுக்கு
நகரவாசி என்று பெயர்.


5.அங்காடிக் கண்கள்

கண்ணாடிக்கதவை திறந்தவுடன் உடல்தொடும்
குளிர்காற்றை ஒரு கணம் கண்கள் மூடி
ரசித்து உள்ளே ஓடுகிறது குழந்தை.
அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள்
ஒவ்வொன்றையும் எடுத்துவிடும் வேகத்துடன்
கை நீட்டுகிறது.
குழந்தைக்கு பின் ஓடும் இளம் தாய்
அழகான கரும்பச்சை நிற சுடிதார் அணிந்திருக்கிறாள்.
அவள் உடையிலிருக்கும் சின்னஞ்சிறு
பூக்கள் குழந்தையையும் அந்த பெரிய
அங்காடியின் பொருட்களையும் ஆச்சர்யத்துடன்
பார்த்துக்கொண்டு தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன.
நான்
குழந்தையின் கண்கள் வழியே
பொருட்களையும்
பொருட்களின் கண்கள் வழியே
பூக்களையும்
பூக்களின் கண்கள் வழியே
அந்தப் பெரும் அங்காடியையும்
பார்த்துக்கொண்டிருந்தேன்.
இளம் தாயின் கண்கள்
யாரும் இல்லா மூலையொன்றில்
படபடத்த கணம்
என் டிஜிட்டல் கண்களில் மிக
அழகாய் நிரந்தர பதிவானாள்.
 



  -நிலாரசிகன்.

Monday, March 11, 2013

கவிதைகள் ஆறு

1.பதினெட்டாவது தளத்திலிருந்து குதிப்பவன்

வானில் தன் தலையை உரசியபடி நிற்கும்
இந்த பெரும் கட்டிடத்தில் நேற்று அதிகாலை
நான்கு முப்பதுக்கு அவன் நுழைந்தபோது
ஆழ்ந்த அமைதி நிலவியது.
ஏழாவது தளத்தில் என்பது மட்டுமே
அவன் அறிந்திருந்தான்.
அந்த அதிகாலை குறுஞ்செய்தியில்
வேறெதுவுமில்லை.
ஒவ்வொரு அறையின் முன்பும்
இரண்டு நொடிகள் நின்று, நகர்ந்தான்.
சட்டை நனைத்திருக்கும் வியர்வையில்
மெல்லியதாய் நடுங்கிய உடலை
திடப்படுத்திக்கொண்டான்.
ஏழாவது தளத்தின் எந்தவொரு அறையும்
திறக்கப்படவில்லை.
ஐந்து நாற்பதுக்கு அறை எண்
ஏழுநூற்றி இருபதிலிருந்து வெளிப்பட்டவள்
கறுப்பு நிற உடை அணிந்திருந்தாள்.
ஆறு மணிக்கு சிவப்பு நிறமான
உடை அருகே அமர்ந்திருந்தான்.
ஆறு முப்பதுக்கு பதினெட்டாவது தளத்திற்கு
வந்தவன் இப்பெரு நகரத்தின் மீது
மூன்று முறை உமிழ்ந்துவிட்டு
தடுப்பைத் தாண்டி குதித்தான்.
ஏழாவது தளத்தை கடக்கும் கணத்தில்
அவன் இறந்திருக்கக்கூடும் என்ற
குறுஞ்செய்தியை ஆசுவாசத்துடன்
நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள்.


2.முத்துநகர் எக்ஸ்பிரஸ் - எஸ்.நான்காவது மற்றும் மூன்றாவது பெட்டிகள்
இரவின் நடுவே விரையும் முத்துநகர்
எக்ஸ்பிரஸ்ஸின் எஸ்.நான்காவது பெட்டியில்
தன்னுடைய மடிக்கணினியை திறக்கிறான்
பச்சை நிற சட்டைக்காரன்.
கணித்திரையில் புன்னகைக்கும் அவனது
எதிர்கால மனைவியை தன்
செல்பேசியில் புகைப்படமெடுக்கிறான்.
பின்
ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு
எஸ் மூன்றாவது பெட்டியின்
கதவருகே நிற்கிறான்.
சட்டைப்பைக்குள்ளிருந்து
செல்பேசியை வெளியே எடுத்து
ஆங்கில முதல் எழுத்தின் வரிசையில்
அவளைத் தேடுகிறான்.
அனுவின் அறையில் ஒலிக்கிறது
செல்பேசி.
அனுவின் கண்ணீரை கொஞ்சமாய்
பருகியபின் பாதி குடித்த சிகரெட்டை
தூர எறிகிறான்.
அது ரயில் கடக்கும் பாலத்தின்
அடியில் விழுகிறது.
நாயொன்று ஓடிச்சென்று முகர்ந்து பார்த்துவிட்டு
நகர்ந்து செல்கிறது.
அப்பர் பெர்த்தில் நிம்மதியாய்
உறங்கத் துவங்குகிறான்.
செல்திரையில் நாற்பது மிஸ்டுகால்களாய்
உருமாறிக்கிடந்தாள் அனு.


3.தீராகனவில் உலவும் விஷக்கன்னி
கைகளில் சர்ப்பக்குட்டியை சுற்றிக்கொண்டு
ஒரு கனவிலிருந்து மறுகனவிற்கு
தாவிக்கொண்டிருந்தாள் தோட்டத்தில்
துயிலும் யுவதி.
நிர்வாணத்தில் மிளிரும் வெயிலை பொருட்படுத்தாமல்
வானம் பார்த்து அருகில் கிடந்தான்
உலகின் முதலாமவன்.
கடக்கும் பட்சிகளுக்கும் விலங்குகளுக்கும்
பெயர்களை சூட்டிக்கொண்டிருந்தவனின்
பார்வை அருகிலிருக்கும் யுவதியின் பக்கம் திரும்பியது.
அவனிலிருந்து உருவாக்கப்பட்டவள்
கண்விழித்து சர்ப்ப வார்த்தைகளை
உதிர்க்கத்துவங்கினாள்.
அவனது கனவுகளில் நுழைந்து
பெருகின சர்ப்பக்குட்டிகள்.
அவளது செவிகளில் நிசப்தத்துடன்
அந்த மூன்று வார்த்தைகளை இட்டான்.
ஓடிச்சென்று இலைகளுக்குள் மறைந்துகொண்டாள்.
நெளிந்து நெளிந்து வெளியேறியவளை
சேர்ந்தான் ஆதி மனிதன்.
யுகங்கள் பல கடந்த ஓர் இரவில்
ஒரு புணர்வில்
ஒரு குழந்தை பிறக்கிறது.
சிறிது நேரம் அழுதுவிட்டு கண்கள் மிளிர‌
"ஸ்ஸ்ஸ்" என்று சப்தமிடுகிறது.
ஜூலி பிறந்தாள்.


4.ஜூலி - ஒன்பது குறிப்புகள் - சர்ப்பம் முதல் காகம் வரை
முதலாவது:
ஜூலிக்கு சர்ப்பம் என்பது
தத்திரமுள்ளது என்று தெரிந்திருக்கவில்லை.
சர்ப்பத்தை அதீதமாய் நேசித்த காரணம்
அவள் மட்டுமே அறிந்தது.
மூன்றாவது:
பதின்பருவத்தில் ஜூலி ஒரு மாபெரும்
தவறை வாஞ்சையுடன் செய்திருக்கிறாள்.
சர்ப்பத்தின் முத்தம் அவ்வளவு
தித்திப்பானது. ஒருமுறை தன் தோழியிடம்
ஜூலி சொன்ன வார்த்தைகள் இவை.
ஐந்தாவது:
கழுத்தின் கீழிருந்து தன்னுடல்
சர்ப்பத்தின் உடலைப்போலிருக்கிறது
என்பதை ஓர் இரவில் உணர்ந்துகொண்டாள்.
கைகளில் அடர்திருக்கும் ரோமக்கற்றைக்குள்
அங்குமிங்கும் பறந்து சலித்தது
தட்டானொன்று.
ஏழாவது:
ஜூலி தானொரு காகத்தின்
மனித உருவம் என்று புலம்பிய காலம்.
மரங்கள் அடர்ந்த அவளது வனத்தில்
ஒரு மறி மரித்துக்கிடந்தது.
ஒன்பதாவது:
தன்னைப் பற்றிய குறிப்புகளை
சுமந்துகொண்டு யாரிடமேனும்
சொல்லிவிட துடித்து அறைக்குள் அங்குமிங்கும்
அலைந்துகொண்டிருக்கிறது
ஜூலி என்னும் காகம்.


5.சயனித்தல் - மன்னித்தல் - மறத்தல்
முன்பொரு காலத்தின் கடும் பனிக்கால இரவில்
நெருங்கி அமர்ந்திருக்கும் சிட்டுக்குருவிகளாய்
இருந்தோம்.
முத்தங்களால் உறவாடிக்கொண்டும்
உமிழ்நீரின் பாக்டீரியாக்களில் சொற்கள்
பரிமாறிக்கொண்டும் சயனித்துக்கிடந்தோம்.
அது முடிந்த கதையாயிற்று.
நீண்ட தொரு பயணித்தில் திறந்துகொண்டன‌
கண்கள்.
ஆதியில் வார்த்தை இருந்தது.
அது மூடிய கண்களை திறந்துவிடும்
வார்த்தையாக இருந்தது.
அது தொடர் கதையாயிற்று.
குதிரையின் கடிவாளத்தை
பற்றியிருந்தது வலக்கை.
பத்துவிரல்களையும்
ஒரு சொட்டு கண்ணீரையும்
ஏந்தியிருந்தது இடக்கை.
பின்பொரு காலத்தில் கவிதையொன்றில்
வேனிற்காலம் குறித்து எழுதப்பட்டது.
அது மறத்தலின் கதையாயிற்று.


6.நட்சத்திராவும் மூன்று எறும்புகளும் அல்லது
பாவத்தின் உதாரணங்கள்


தெரியாமல் செய்து விட்ட தவறொன்றிற்காக‌
அழுதுகொண்டிருந்தாள் நான்காம் வகுப்பு
ஏ பிரிவில் படிக்கும் நட்சத்திரா.
எவ்வளவு சமாதானம் செய்தும்
அழுகை நிறுத்த முடியாமல் திணறினர்
அம்மாவும் அப்பாவும்.
பின் அப்பா சொன்னார்
"உயிர்களை கொல்வது பாவமா இல்லையா
நட்சத்திரா?"
பாவம் தான் என்றாள் சிவந்த விழிகளுடன்.
தன்னருகில் அழைத்தார்.
நடந்து வந்த நட்சத்திரா மூன்று எறும்புகளை
தெரியாமல் மிதித்துக் கொன்றிருந்தாள்.
"உனக்குத் தெரியாமல் மூன்று
உயிர்கள் மரித்துவிட்டன ஆயினும்
இது பாவமில்லை" சொல்லிவிட்டு
உறங்கச்சென்றார் அப்பா.
தன் இருபத்தி இரண்டாவது வயதில்
நட்சத்திரா தெரிந்தே ஒரு தவறு
செய்தாள்.
தெரிந்து செய்த தவறுக்கு
மரித்த மூன்று எறும்புகளை
உதாரணமாக்கிவிட்டு
தவறுடன் சேர்ந்து சிரிக்க‌த்துவங்கினாள்.

-நிலாரசிகன்.

Sunday, February 24, 2013

கற்பனை என்றொரு மாளிகை : நிலாரசிகனின் ‘மீன்கள் துள்ளும் நிசி’ பாவண்ணன்



புதுமை என்பது கவிதையின் அழகுகளில் ஒன்று. புத்தம்புதிதாக பூக்கள் பூத்துக்கொண்டே இருப்பதைப்போல காலந்தோறும் கவிதைகளில் புதுமையும் சுடர்விட்டபடி இருக்கிறது. சமீப காலத்தில் புதுமை அழகோடு கவிதைகள் படைக்கும் படைப்பாளிகளின் வரிசையில் நிலாரசிகன் கவனிக்கத்தக்க விதத்தில் இயங்கிவருகிறார். இரண்டாண்டுகளுக்கு முன்பாக வெளிவந்தவெயில் தின்ற மழை’ தொகுப்பைத் தொடர்ந்து அவர் வெளியிட்டிருக்கும் இரண்டாவது தொகுப்பு மீன்கள் துள்ளும் நிசி.
காற்றிலாடிய இரண்டு கயிற்றுத்துண்டுகளை முன்வைத்து பாரதியார் படைத்த காட்சிச்சித்திரம் ஒரு தொடக்கம். கற்பனையும் புதுமையும் சரியான விகிதத்தில் கலந்து உருவாக்கப்பட்ட சித்திரம் அது. பாரதியாரைத் தொடர்ந்து ஒவ்வொரு தலைமுறையிலும் ஒவ்வொரு கவிஞர் அப்படிப்பட்ட சித்திரங்களைத் தீட்டியபடியே வந்திருக்கிறார்கள். கவிதை அழகுகளில் அது முக்கியமானதாக இருப்பதால்தான்ஒரு மரபுபோல அந்தப் புதுமை தொடர்ந்தபடி இருக்கிறது. இரண்டாயிரத்துக்குப் பிறகு எழுதவந்த கவிஞர்களில் கவிதைகளில் இந்த அழகை மெய்மறந்து செதுக்கும் சிற்பியாக விளங்குகிறார் நிலாரசிகன்.
ஓர் ஆங்கிலச்சிறுகதை. ஒருவனுடைய மனைவியைச் சந்திக்கவந்த பார்வையில்லாத நண்பனுக்கும் அவளுடைய கணவனுக்கும் நிகழும் உரையாடலோடு அச்சிறுகதை தொடங்குகிறது. முதலில் அக்கணவனுக்கு பார்வையில்லாத அந்த இளைஞனோடு பேசுவதற்கே விருப்பமில்லை. பிறகு எப்படியோஉரையாடலின் தொடர்ச்சியில் ஏதோ ஒரு கட்டத்தில் சுவாரஸ்யம் உருவாகிவிடுகிறது. ஒரு தேவாலயத்தின் கட்டமைப்பு எப்படி இருக்கும் என்றொரு எளிய கேள்வியை அந்தப் பார்வையில்லாத இளைஞன் கேட்கிறான். உடனே கணவன் தேவாலயத்தின் ஒவ்வொரு பகுதியும் எப்படி இருக்கும் என்று உற்சாகத்தோடு வர்ணிக்கத் தொடங்குகிறான். ஆனால் மேலும்மேலும் தொடர்ந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு அவன் மனம் நிறைவடையும்வகையில் பதில் சொல்ல கணவனால் இயலவில்லை.  அவனுடைய சொற்களால் பார்வையில்லாதவனின் நெஞ்சில் ஒரு சித்திரத்தை உருவாக்க முடியவில்லை. சட்டென்று தன் மனத்தில் உதித்த யோசனையின் தூண்டுதலால் பார்வையில்லாதவனின் கைகளைப் பற்றி உயர்த்தியும் அகட்டியும்  குறுக்கியும் தேவாலயத்தின் தோற்றத்தை உணர்த்த முயற்சி செய்கிறான். பிறகுஅவனும் கண்களை மூடிக்கொண்டு தற்காலிகமாக தன்னையும் ஒரு பார்வையில்லாதவனாக மாற்றிக்கொள்கிறான். தன் மனத்தில் உள்ள தேவாலயத்தின் வடிவத்தை கைகளால் உருவாக்க முயற்சி செய்கிறான். அவர் கைகளோடு கோர்க்கப்பட்ட பார்வையில்லாதவனின் கைகள்கூடவே அசைந்து அசைந்து,  தேவாலயத்தின் கட்டமைப்பு வடிவத்தை உள்வாங்கிக்கொள்கின்றன. வெளியே உண்மையான தேவாலயம். கைகளின் அசைவுகளால் உருவாகும் மற்றொரு தேவாலயம். கணவனின் மனத்துக்குள் ஒரு தேவாலயம். பார்வையில்லாதவனின் மனத்துக்குள் ஒரு தேவாலயம்.  ஒவ்வொருவரும் தமக்குரிய தேவாலயத்தை தமக்கே உரிய வகையில் கண்டடைந்துகொள்கிறார்கள். நிலாரசிகனின் கவிதைகளைப் படித்து முடித்த தருணத்தில் தற்செயலாக இந்தச் சிறுகதை நினைவுக்கு வந்தது. ஒரு கவிதையின் கற்பனை மலரைத் தொட்டுணரதரையில் நின்றபடி கைநீட்டும் ஒரு வாசகனால் ஒருபோதும் முடியாது. அது மலர்ந்திருக்கும் உயரத்துக்கு அல்லது அதற்கும் அப்பால் அவன் கற்பனை விரிவடையும்போது மட்டுமே அதைத் தீண்டமுடியும். அப்படிப்பட்ட கற்பனைவிரிவு நமக்குள் நிகழும்போதுதான் நிலாரசிகனின் கவிதைகளை நாம் நம் கவிதைகளாக உணர்முடியும்.
நிலாரசிகனின் கவிதைகளை வாசிக்கும் அனுபவம் என்பதுநிலாரசிகன் கட்டியெழுப்பும் கற்பனைச்சித்திரங்கள் உணர்த்தும் அனுபவம் எத்தகையது என்பதைக் கண்டறியும் பயணமல்ல. மாறாகஅக்கற்பனையை கற்பனையாகவே உள்வாங்கி அசைபோடுதல் என்பதாகும். அது உருவாக்கும் காட்சிகளாலும் எண்ணங்களாலும் நம் நெஞ்சை நிரப்பிக்கொள்வதாகும்.
ஒருமை சிதையாத கற்பனைக்காட்சிகளாக எடுத்துக்காட்ட இத்தொகுப்பில் எண்ணற்ற கவிதைகள் உள்ளன. உடுதவளை என்றொரு கவிதை. கலங்கிய நீர் நிறைந்திருக்கும் ஒரு கிணற்றில் வசிக்கிறது ஒரு தவளை. தலையை உயர்த்தி வானில் மிதக்கும் நட்சத்திரங்களை ஒவ்வொன்றாக இழுத்து இழுத்து ஒளித்துவைக்கிறது. தொலைந்துபோன நட்சத்திரங்களை இப்போது இரண்டு காகங்கள் தேடத்தொடங்குகின்றன. கிணற்றுக்குள் இருப்பதை அறிந்துகொண்ட அக்காகங்கள் சிறுசிறு கற்களைக் கொண்டுவந்து போட்டு கிணற்றை நிரப்புகின்றன. மெல்ல மேலெழும்பும் நீரில் நட்சத்திரக்குழந்தைகள் வெளியேறுகின்றார்கள். வெளியே செல்பவர்கள் குறும்பு மிக்கவர்கள். முதிர்ந்த தவளைகளைக் கைகளுக்குள் மறைத்துவைத்து எடுத்துச் செல்கிறார்கள். ஒரு குழந்தை சொல்லும் விளையாட்டுக் கதைபோல கற்பனைச் செறிவு மிகுந்ததாக இருக்கிறது கவிதை. தவளை ஒரு புள்ளி. நட்சத்திரம் இன்னொரு புள்ளி. காகம் இடைப்புள்ளி. நட்சத்திரத்தைத் தேடிவந்த காகத்தைப்போலதவளையைத் தேடி இன்னொரு காகம் நட்சத்திரத்தைநோக்கிச் செல்லக்கூடும். தேடுவதும் கண்டடைவதுமான ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் நிகழ்கிறது. காரண அறிவு வளராத குழந்தையைப்போல கற்பனைவளம் ஓர் அதிசயம் உலகம். நாகரிக வளர்ச்சியடைந்த மனிதன் பல்வேறு காரணங்களால் தொலைத்துவிட்ட அக்கற்பனையை கவிதைகள்மட்டுமே மீண்டும்மீண்டும் முன்வைத்தபடி இருக்கின்றன.
ஒரு நாட்டுப்புறக்கதையின் தன்மையைக் கொண்டதுபோன்ற தோற்றம் கொண்டது உடலின் ஆயிரம் இறக்கைகள் என்னும் கவிதை. கனவுகள் வழிந்துகொண்டிருக்கின்றன. குழாயில் தண்ணீர் சொட்டுவதுபோல. அதை ஒவ்வொரு கனவாக பீங்கான் கோப்பைகளில் பிடித்து கட்டிலின் அடியில் ஒளித்துவைக்கிறான். கனவுகள் தமக்குள் உரையாடிக்கொள்கின்றன. எல்லாமே உறங்குபவனைப்பற்றிய குறிப்புகள். இவன் காதலைக் கொன்றவன் என்கிறது ஒரு கனவு. காமத்தின் விஷக்கண்களில் வீழ்ந்தெழுந்தவன் என்கிற்து இன்னொரு கனவு. இப்படியே ஏராளமான குறிப்புகள். ஒவ்வொரு குறிப்பும் ஒவ்வொரு இறக்கையாக உருமாறுகிறது. தூக்கத்தில் புரண்டுபடுப்பவனின் உடல்முழுதும் ஆயிரம் இறக்கைகள்.
சோலஸ் கவிதையும் நாட்டுப்புறக்கதையின் சாயலைக் கொண்டிருக்கிறது. கடலுக்கு நடுவில் ஒரு அரசகுடும்பத்தினர் வசிக்கிறார்கள். அவர்களுக்கு சோலஸ் என்றொரு மகள் இருக்கிறாள். அலைக்குதிரையில் ஒலிவேகத்தில் வந்தவன் அவளைக் கவர்ந்து செல்கிறான். அந்த அரசன் அவர்களைத் தேடிச் செல்கிறான். எட்டுத் திசைகளில் தேடியும் அவனால் கண்டடைய முடிவதில்லை. சோர்ந்தவன் கண்களில் வழியும் உப்புக்கண்ணீரால் கடலின் சுவையே மாறிப் போய்விடுகிறது. ஆண்டுக்கணக்காகயுகக்கணக்காகஅந்த அரசன் காதலனோடு புறப்பட்டுப் போன தன் மகளைத் தேடியபடியே இருக்கிறான். மறுபக்கத்தில்காலம்காலமாகஎங்கோ தொலைதூரத்தில் அவர்கள் இருவரும் ஒன்றாக நீந்தியபடியே இருக்கிறார்கள்.
இரவின் ரகசியப்பொழுதுகள் கவிதையில் உள்ள குழந்தைக்குறும்புடன் கூடிய கற்பனைச்சித்திரம் மிகமுக்கியமான ஒன்று. சிறுமியொருத்தி தன் மார்போடு அணைத்தபடி உறங்கும் கரடிப்பொம்மைஅவள் பிடியிலிருந்து நழுவி படுக்கையிலிருந்து எழுந்து அறையிலிருந்து வெளியே வருகிறது. கூடத்துக்கு வந்து தொலைக்காட்சி பார்க்கிறது. பழம் சாப்பிடுகிறது. தற்செயலாக தண்ணீர் அருந்துவதற்காக சமையலறைக்கு வந்த அம்மாஅந்தக் கரடியைப் பார்த்து அச்சத்தில் அலறி நடுங்கிவிடுகிறாள். சத்தம் கேட்டு எழுந்துவந்த சிறுமி கரடியை எடுத்துக்கொண்டு தன் அறைக்குள் சென்றுவிடுகிறது. சிறுமி தொட்டதுமே கரடி மீண்டும் பொம்மையாகிவிடுகிறது. பயந்துபோன அம்மாவை அணைத்து முத்தம் கொடுத்து,ஆறுதல் சொல்லி அமைதிப்படுத்துகிறார் அப்பா. அம்மா அம்மாக்கரடியாக மாறிவிடுகிறாள். அப்பாஅப்பாக்கரடியாக மாறிவிடுகிறது. கற்பனைஉயிர் உள்ளவர்களைப் பொம்மையாக்கிப் பார்க்கிறது. பொம்மையை உயிர் உள்ளதாக மாற்றிப் பார்க்கிறது. தர்க்கம் குறையாத அக்கதையின் சரடு மனத்தில் நிரந்தரமாகப் பதிந்துவிடுகிறது.
61 கவிதைகள் உள்ள இத்தொகுப்பு நிலாரசிகனின் கற்பனைஅழகுக்கு ஒரு சாட்சி. நிலாரசிகன் ஒருபக்கம். அவர் கற்பனைமனத்துக்கு இணையான கற்பனை மனத்தோடு நெருங்கும் வாசகன் இன்னொரு பக்கம். இருவரும் விழிமூடி கற்பனையில் மிதந்தபடி விரல்கோர்த்துக்கொள்ளும்போது வாசக அனுபவத்தில் பொங்கும் கற்பனை அழகில் இன்னொரு தொகுதிக்கான கவிதைகள் கண்டடையப்படக்கூடும்.
(மீன்கள் துள்ளும் நிசி. கவிதைகள். நிலாரசிகன். புது எழுத்து வெளியீடு. காவேரிப்பட்டினம்)

Thursday, January 31, 2013

ஜூலியின் அப்பா எண்களால் ஆனவர்



1.ஜூலியின் அப்பா எண்களால் ஆனவர்


இருபத்தி எட்டு வருடங்களுக்கு முன்
நான்காவது மகளாக ஜூலி
பிறந்த செய்தி கேட்டவுடன் வேகமாய்
மருத்துவமனை விட்டு வெளியேறினார் 
ஜூலின் அப்பா.
அதன் பின்னர் எப்பொழுதும் அவர்
தன் முதல் மூன்று பெண்களையும்
எண்களை வைத்தே அழைக்க ஆரம்பித்தார்.
ஒன்று 
கல்லூரியில் இரண்டாம் வருடம் படிக்கிறது.
இரண்டு
பள்ளி இறுதி ஆண்டு படிக்கிறது.
மூன்று
படிப்பில் ஆர்வமில்லை அதனால் தையல்
வகுப்பு போய் வருகிறது
இப்படித்தான் எல்லோரிடமும் 
தன் பெண்களின் மகிமை பேசுவார்.
நான்காவது எண்ணுடைய ஜூலியை
அவர் விரும்பியதே இல்லை.
ஒன்றிலிருந்து மூன்றுவரை திருமணம்
முடிந்து மறுவீடு சென்றபின்னரும்
நான்கை பற்றிய அக்கறையின்றி
திரிந்ததால்
தன் முப்பதாவது வயதில்
ஜூலி காதல் மணம் புரிந்து வெளியேறினாள்.
யாருமற்ற வீட்டின் அடுக்களையில்
நைந்த கறுப்புவெள்ளை புகைப்படமொன்றை
கைகளில் ஏந்தியபடி
ஜூலியின் அம்மா ஒருநாள் 
முணுமுணுத்துக்கொண்டிருந்தாள்
"அவர் பூஜ்ஜியம் அவர் பூஜ்ஜியம்" என்று.

2.மிஸ்டர் எம் மற்றும் எக்ஸ்ஸின் காதலி : எஸ் என்கிற எஸ்

கடற்கரையில்தான் எஸ் தன் குழந்தைமையிலிருந்து
குமரியாக மாறினாள். 
மருத்துவமனையில்தான் எஸ் ஒரு காதலை கொன்று
வீசினாள்.
காதல்மாதத்தில்தான் எஸ் தன் மூத்தகாதலான
"எம்"மை கைப்பிடித்தாள்.
முகநூலில்தான் எஸ் தன் புகைப்பட முகத்தை
முதன்முதலாய் காண்பித்தாள்.
மயில்கள் திரியும் தோட்டத்தில்தான் எஸ்ஸின் மீதான‌
காதலை கண்ணீர்மல்க எக்ஸ் புலம்பினான்.
யாருமற்ற இரவில்தான் எக்ஸ் ஒரு திருமணத்திற்கு
சம்மதித்தான்.
உலக அழிவை பேராவலோடு எக்ஸ் எதிர்நோக்கிய‌
கணத்தில்தான் எம்மும் எஸ்ஸும் குற்றாலம் போவது
பற்றிய முடிவெடுத்தனர்.
எக்ஸ் வேறு வழியின்றி தூக்கில் தொங்க நினைத்தபோது
அறுந்து விழுந்து சிரித்தது வாழ்க்கைவடிவ‌
தூக்குக் கயிறு.
காலம் அனைத்தையும் மறக்கடிக்கும் என்று
எக்ஸ்க்கு அறிவுரை வழங்கி எஸ்
ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாள்.
எக்ஸை சேரும்போது அந்த எஸ்.எம்.எஸ்ஸில்
வார்த்தைகளே இல்லை.
எஸ்ஸின் பேரன்பின் முத்தங்களின் கனம் தாளாமல்
ஒரு நாள் எக்ஸ் மரித்துப்போனான்.
அப்போது எம்மும் எஸ்ஸும் நயாகராவில்
புகைப்படமெடுத்துக்கொண்டிருந்தனர்.

-நிலாரசிகன்.

Friday, January 11, 2013

மீன்கள் துள்ளும் நிசி

நண்பர்களின் கவனத்திற்கு: புத்தக கண்காட்சியில் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கு எண் 43/44 ல் எனது கவிதை தொகுப்பான "மீன்கள் துள்ளும் நிசி" கிடைக்கும்...
அனைவருக்கும் "புத்தககண்காட்சி வாழ்த்துகள்" :)

Wednesday, January 09, 2013

மீன்கள் துள்ளும் நிசி - விமர்சனம் - கவிஞர்.இளஞ்சேரல்


நிலா ரசிகனின் ”மீன்கள் துள்ளும் நிசி” குறித்து


நிழல் விரிகிறதென்றால்

பகல் சுடுகிறது என்று பொருள்--

நிலா ரசிகனின் ”மீன்கள் துள்ளும் நிசி” குறித்து

 

இளஞ்சேரல்

 

         நவீன காலத்தின் பிரதிபலிப்பை பிரித்து எரியப்பட்ட கார்பன் கழிவுகளைப் போலவும் திரும்பவும் அவைகளைக் கைப்பற்றி தாள்களுக்குள் சொருகிச் சொருகி சில பொம்மைகளை வரையும் சேரியின் சிறுவர் சிறுமிகளின் சித்திரங்கள் போலவே நமது நவீன கிராமங்களின் கவிதைகள் பதிகிறது.

               எல்லாக் கிரயப்பத்திரங்களும் பதிவு செய்யப்பட்டபின் அந்த நிலத்தை மீண்டும் அத்தாட்சி சுத்தமாகச் சென்று பார்த்து வருகிற மாதாந்திரச் சம்பளக்காரனின் வாழ்வுதான் நவீன கவிதை

         நவீன கவிதையியல் குறித்து எழுத எழுத தீராத மணற்குமிழ்கள்.அது எல்லா இடத்திலும் இருக்கும் பால்பாயிண்ட் பேனாவின் குமிழ் போல சில சமயம் கொஞ்சம் கண்களால் அறியமுடியும். சில வற்றை அள்ளி அதில் எங்கானும் தவறிய சில சங்குப் பாசிகளை நுற் சங்குகளைப் பொறுக்கிக் கொள்ளலாம். நமக்குத் தேவைப்படும் பட்சத்தில்

              நிலாரசிகன் கவிதைகளை தொடர்ந்து வாசிக்கப் படும் போது அடிக்கடி இருதயத்தைத் தொட்டுப்பார்த்துக் கொள்கிற ஆஸ்துமாகாரன் போலத்தான் மிளர வேண்டியிருக்கிறது. படிமங்களை மிக அதிகமாகவும் பிரழ்வு சோகையுடனும் அதிகமாக எழுதப்பட்டிருக்கிறது. சங்கிலிக் கண்ணக

ளாக அடுக்கப்பட்டிருக்கும் காட்சி சிலாகிப்பு-எரி நட்சத்திரம் போல அடிக்கடி காணாமல் போகும் சற்று முன் விவரித்த சித்திரக் காட்சிகள் என்பதான நிறைய பிடிமானம் இல்லாத கத்திகளும் முள் உருண்டைக் கருவிகளுமாகக் கைகளில் பற்றுவதாக இருக்கிறது.

43. பொம்மையாதல்- கவிதை நாம் மேதமை கொண்டோர் என அறிந்தவர்கள் கூட சிறு அப்பியாசம் கூட அறியாதவர்களாக இருப்பர்.அல்லது

குழந்தையாக இருப்பினும் கூட கேட்டுப்பெறுபவர்க

ளாக இருப்பர் என்கிறார் இக்கவிதையில் குழந்தைகள் அறிந்ததைக் கடவுள் கூட அறியாது என்பதாகிறது. இவ்விடம் குழந்தை நவீன காலத்தின் குழந்தையாகவும் காட்டுவதுதான் நிலாரசிகனின் நுட்பம்.

 

அப்பாவும் அம்மாவும்

தராத அரவணைப்பை

பொம்மைக்குத் தந்தபடி

உறங்கிக் கொண்டிருந்தது குழந்தை

கனவில் தோன்றிய கடவுள்கள்

அச்சிறு குழந்தையின் அரவணைப்பை

வரமாய்க் கேட்டனர்

வரிசையில் நின்றிருந்த

கடவுளர்களுக்கு உறக்கப் புன்னகையை

தந்துவிட்டு பொம்மையை

இறுக்கி அணைத்துக் கொண்டதது.

பொம்மையாதலின் வழிமுறைகள்

அறியாமல் விழித்தபடி நின்றனர்

கடவுளர்கள்..

         மாயத்தின் தத்ரூபமான தரிசனம் இக்கவிதையில் கிடைக்கிறது. ஏற்கெனவே இந்த கவிமொழி நமக்கு குறுங்கவிதைகள் எழுதுகிற கவிஞர்கள் மூலமாக நமக்கு அனுபவமாகக் கிட்டியியிருந்தாலும் பொம்மையாதலின் வழிமுறைகளை அறியாதவர்தான் கடவுள் என்பது நல்ல புனைவும் அதியதார்த்தம் மீறிய கூட்டிணைப்பு

கடவுள் குழந்தைகளிடம் எந்த சமரையும் வைத்துக் கொள்வதில்லை. குழந்தைகள் புத்திசாலித்தனத்தை கடவுளிடம் கேட்டுக் கொண்டெல்லாம் காத்திருப்ப தில்லை. இங்கு குழந்தை என்பது இயற்கையின் ரூபம் என்பதாக வாசகனுக்கு அறிய நேர்கிறது.

 

வேர்களற்றவர்கள்

 

மௌனம் உருகி படர்ந்திருக்கும்

மலை உச்சியில் நாம் அமர்ந்திருக்கிறோம்

என் அணைப்பின் தகதகப்பில்

அடர்பச்சை மரக் காடுகளை

பார்வையின் வழி சென்றடைகிறாய்

மெல்ல உன் வதனம் திருப்பி

இதழ்களில் முத்தமிடுகிறேன்

வனம் சில்லிட்டு சிதற சிதற

நம்மிடையே வளர்கின்றன

ஓராயிரம் வேர்களற்ற விருட்சங்கள்

இதழ்களிலிருந்து வெளியேறும்

முத்தப்பறவைகளிலொன்று உன்னை

அள்ளிச் செல்கிறது

இதழ்களிலிருந்து வெளியேறிய

கருந்தேள் என்னைத் தின்று பசியாறுகிறது

நம் தடயங்களற்ற மலையின் உச்சி

இப்பொழுதும் மௌனித்துக் கிடக்கிறது.—பக்-28

 

       நிலாரசிகன் அதிகமான படிமங்களை உருப்போட்டிருக்கும் கவிதை இந்தக் கவிதை. அவருடைய எல்லாவிதமான சாத்தியங்களும் கவிதையின் சத்தியமும் இக்கவிதையில் இருக்கிறது. நவீன காலத்தின் எல்லா உபகரணங்களையும் கைக் கொண்டிருக்கிற ஒருவன் தான் அனுபவிக்கின்ற இன்பங்களை அல்லது இழப்பீடுகளைப் பேசும் போது இப்படியான பிறழ்வுப் படிமங்கள் வரும். பிரம்மராஜன், பசுவய்யா,ஞானக் கூத்தன், அழகிய சிங்கர் ஆகியோர் இப்படி நிறையப்படிமங்களை அடுக்கியிருக்கிறார்கள்.

              காதலுறுதல் காமுறுதல் உயர்வு நவிற்சி பாடல்களில் சங்கப் பாடல்களிலும் சரி பக்தி இலக்கியக் காலங்களிலும் சரி மிகு உயர்வு நவிற்சியைப் பயண்படுத்தி கவிரசம் சொட்டச் சொட்ட பந்தியிட்டிருக்கிறார்கள் நம் பாணர்கள்.

           அந்த வகையில் நம் நெகு காலமானாலும் சரி கல் குவாரி காலமானாலும் சரி பாதாள சாக்கடையை இன்னும் நான்கு பேர் இறங்கி முங்கி சுத்தம் செய்யும் காலமானலும் சரி கவிஞனுக்கு எல்லாமே வலிமிகுந்த காலம்தான்..

 

நடுநிலைத்திணை

 

ஒவ்வோர் இதழிலும்

வெவ்வேறு நிறங்ளைக் கொண்டிருக்கும்

அம்மலருக்குள்

ஓர் உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது

எண்ணிலடங்கா பட்சிகளும் விலங்குகளும்

நிறைந்த அவ்வுலகில்

சர்ப்பமொன்று பச்சை மரக்கிளையில்

ஊர்ந்து செல்ல

காட்டாற்றின் கரையில்

மூன்று நிழல்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன

பறவையின் முதல் நிழலும்

அலகுப்புழுவின் இரண்டாம் நிழலும்

சந்திக்கும் புள்ளியில் உருப்பெற்ற

மூன்றாம் நிழலில்

ஓய்வெடுக்கிறது கனத்தவோடு முதிர் ஆமை

சுழலும் அதன் நாவில் வெப்பமலரொன்றை

சுவைத்துக் கொண்டு..

           நல்லதொரு மீள் தரிசனத்தைத் தரும் இக்கவிதையில் அவர் ஆழக்கட்டும் காகிதக் கட்டிடங்களில் நாம் வசிக்கலாகாதா எனத் தோன்றுகிறது. தொகுப்பின் மொத்தக் கவிதைகளும் ஏதாவது ஒரு அழுத்தமான பிடியையும் பிம்பத்தின் ஊனையும் உறவையும் போற்றியபடியே இருக்கிறது.

           துண்டு துண்டாக வெட்டிப் பின் கலைத்து கலைத்து பின் வேறென்றாகச் சேர்க்கப் பார்த்து அது வேறொரு சித்திரமாக உருவெடுப்பதுதான் நவீன கவிதையின் கடலாழ பலம். அந்தப் பலத்தை நிலாரசிகன் ஒரு பளுதூக்கும் வீரனாக எல்லா பளு வில்லைகளை மாட்டி மாட்டி தூக்கிநிறுத்தப் பார்த்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.. வாசகனாக என்றும் நல்ல அனுபவம்.. இந்தத் தொகுப்பின் மூலம் கிடைத்திருக்கிறது. பிரமிள், புதுமைப்பித்தன், நகுலன், ஆத்மாநாம், சி.மணி, அப்பாஸ் போய்விட்டார்கள். நம்மையும் நம் கவிதையையும் காப்பவர்கள் யார் என்று புலம்பியிருக்கிறோம் நாம் முதல் முதலில். பிறகு அவர்களாகவே நாம் மாற யத்தனிப்பதுதான் அவர்களுக்கு நாம் செய்யும் பணிவிடையாகிறது. அந்த பரமாத்மாக்களின் விட்ட பணியை ஆளாளுக்குத் தூக்கிச் சுமக்க பிரியப்படும் எண்ணற்ற கவிஞர்களில் நிலாரசிகனும் ஒருவராக இருப்பது இந்தத் தொகுப்பில் தெரிகிறது.

    

         வாசிப்பின்  நுட்பமான அந்த அனுபவமே இந்த நூற்றாண்டின் தமிழ் நவீன கவிதைக்கு அவசியமாகிறது.

           கவிஞனைப் போற்றுவது நல்ல கவிதைகளின் வாசகனைப் போற்றுவதாகிறதால் நான் என்னை முதலில் இந்தத் தொகுப்பின் மூலமாக என்னைப் போற்றிக் கொள்கிறேன்.. நிலாரசினின் முயற்சிகள் கவிதைகளுக்காகத் தொடர்வது கவிதையின் ரசிகனான எனக்கு என்றும் இன்பம்தான்..

 

வாய்ப்பிருந்தால் மேலும் சில கவிதைகள் குறித்து எழுதுவேன்..

Monday, December 17, 2012

கவிதை நூல்கள் வெளியீட்டு விழா

நிகழ்ச்சி நிரல்:

http://www.yaavarum.com/archives/660

அனைவரும் வருக!

இணையம் வழியே நூலை பெற:

http://tinyurl.com/cvpwnmz


Wednesday, December 05, 2012

மீன்கள் துள்ளும் நிசி - இம்மாதம் வெளியாகிறது


Sunday, December 02, 2012

துயரத்தின் முடிச்சு



அந்தரவெளியில் மிதக்கிறது.
யாருடைய முடிச்சாகவும்
இருக்கலாம்.
வாழ்வின் துயர்மிகுந்த
காட்சிகளால் நிரம்பி 
தளும்புகிறது.
இரவின் கண்களில் 
நதியாகி வளைகிறது
குருதி.
அவிழ்ந்துவிட முயன்று
முடியாமல் தோற்று
முடிச்சுக்குள் முடிச்சாகி மூழ்கிப்போகிறது
காலம்.
ஓர் உன்னத காதல் முடிச்சின்
மறுபக்கத்தில்
தலைகீழாய் தொங்குகிறது
எக்கணமும் அவிழ்க்க இயலாத
துயரத்தின் முடிச்சொன்று.
-நிலாரசிகன்.

Saturday, November 24, 2012

நம்மிடையே மலர்ந்திருக்கும் மலர்




அதற்கு அத்தனை வாசமில்லை.
அவ்வளவு அழகுமில்லை.
கண்ணிமைச் சாமரங்களின்
மென்காற்றில் எப்பொழுதேனும்
உதிர்த்திடும் சில சொற்களை.
கைகளில் இருபது விரல்கள்
முளைத்தபோது அவ்வளவு
அழகாய் தோன்றி
பின்
அமைதியாக நடந்து போனது.
துயரங்களில் மொத்தக்கடலாகி
அதன் இதழ்கள் தொட்டபோது
சிறியதாய் மலர்ந்து
கணங்கள் சில கடந்து
மெளனித்து மொட்டாகியது.
அதற்கும்
அப்பால் ஓர் உலகமிருக்கிறது.
என்றுமே முழுவதும் மலர்ந்துவிடுவதில்லை
நம்மிடையே மலர்ந்திருக்கும்
இம்மலர்.
-நிலாரசிகன்.

Saturday, November 10, 2012

கல்கி தீபாவளி மலர் கவிதைகள்

மலை-வனம்-குளம்- மேலும் மூன்று முத்தங்கள்

1.

தரையெங்கும் விரவிக்கிடக்கும் சொற்களை
குனிந்தபடி மேய்கின்ற குறும்பாடுகள்
என் மலைவீட்டில் வளர்கின்றன.
மிகச்சிறிய முட்டைகளை இடுகின்ற
குருவிகளும் அவ்வீட்டில் வசிக்கின்றன.
அடிவாரத்திலிருந்து ஒவ்வொரு சொல்லாக
மலை உச்சிக்கு இழுத்துவரும் 
எறும்புகளை நாம் பின் தொடர்கிறோம்.
அவ்வளவு பேரன்புடன்
இறுகப்பற்றிய கைகளில் 
விழுந்து
தெறிக்கின்றன குளிர்மழைத்துளிகள்.
தோளில் கன்னம் சாய்த்தபடி 
மலை ஏறுகிறாய்.
சொற்கள் எதுவுமற்ற கணத்தில்
மென்மையானதொரு முத்தமிடுகிறாய்.
எறும்புகள் சேமித்த சொற்களை
மென்று விழுங்கும் குறும்பாடுகளின்
சப்தத்தில் அதிர்கிறது மலைவீடு.


2.
அடர்வனப்பாதையில் நடப்பது
உனக்குப் பிடிக்கும்.
உயர்ந்த விருட்சங்களிலிருந்து எழும்பும்
பறவைகளின் வினோத ஒலியை 
கூர்ந்து கவனித்தபடி நடக்கிறோம்.
ஒரு ஆண்பறவையை துரத்துகிறது
பெண்பறவையொன்று.
கற்கள் நிறைந்த பாதையில் வெகுதூரம்
வனத்தின் நடுவில் வந்துவிட்டோம்.
சற்றுத்தொலைவில் சலசலக்கிறது
காட்டாறு.
இப்பொழுது மழை வேண்டும் என்கிறாய்.
இழுத்தணைத்து முத்தமிட துவங்குகிறேன்
ஆண் உனது வெட்கம்
சிறுவிதைகளாய் சிதறிச் சிதறி
வனமெங்கும் புதைகிறது 
ஆழமாய்
மிக ஆழமாய்.

3.

குளம் வற்றி விட்டது.
அ முதல் ஃ வரையில் துவங்கும்
சொற்களனைத்தும் உதிர்ந்துபோன
இலைகளின் கீழே மெளனிக்கின்றன.
கடைசி மீனின் எலும்புகளை
இழுத்துச் செல்கின்றன சிற்றெறும்புகள்.
மெளனம் உடைத்த சொற்கள்
சிறு சிறு  புரவி வடிவமெடுத்து ஓடுகின்றன.
நீரற்ற குளத்தின் உயரே பறந்து செல்லும்
பறவைக்கூட்டத்திலிருந்து
சிற்றெறும்புகள் மீது விழுந்து தெறிக்கின்றன
எச்சங்கள்.
புரவிகளின் தடத்திலிருந்து எழும்
மஞ்சள் இலைகள் நிறைந்த பெருவிருட்சத்தில்
தலைகீழாய் தொங்குகிறது
நிறைவேறாக் காதலின் கடைசி முத்தம்.

-நிலாரசிகன்.

Thursday, November 01, 2012

ஏக்கப்பூனை திரியும் பெருவுடல்




உன்னுடன் வாழ்ந்துவிட முடியாத 
ஏக்கம் ஒரு பூனையாகி என்னருகே 
அமர்ந்திருக்கிறது.
மிருதுவான அதன் உடலும் 
மென்மையான ஈர மயிர்க்கற்றைகளும்
அதன் அழகை அதிகமாக்கிக்கொண்டிருக்கிறது.
மழை ஓய்ந்த முன்னிரவில் 
அதன் கண்களை 
உற்றுப் பார்க்கிறேன்.
ஏக்கப்பூனை காலத்தின் மறு உருவம்.
பிரித்தெறிய முடியாத அட்டையென 
என்னில் ஒட்டிக்கொண்ட கருநிற காலம் 
தன் பற்களிடையே மெதுவாய் எனை
மென்று தின்னத்துவங்குகிறது.
பூனையொன்றின் பசிக்கு உணவாகி
சரிந்து விழுகிறது என்னுடல்.
உன்னுடன் வாழ்ந்துவிட முடியாத
மாபெரும் இப்பெருவுடல்!
-நிலாரசிகன்.

Thursday, October 18, 2012

மழைக்காலப் பகல்





ஒரு மழைக்காலப் பகலை உன்னுடன்
களிப்பது எதனுடனும் ஒப்பிடமுடியாதது.
அணைப்பின் கதகதப்பில்
மெல்லியதாய் நீ உதிர்க்கும்
முனகல்கள் முகில்களாய்
தவழ்ந்து தவழ்ந்து
என் உயிர் நிரப்புகிறது.
அறையெங்கும் படர்கின்ற
செயற்கைக்குளிரின் நடுவில்
தகிக்கும் வெப்பநதியாய்
பிணைந்திருக்கிறோம்.
முதுகில் பதியும் இதழ்களின்
ஈரத்தில் உடல் சிலிர்த்து
உதடு கடிக்கிறாய்.
ஒரு மழைக்காலப் பகலை உன்னுடன்
களிப்பது எதனுடனும் ஒப்பிடமுடியாதது
மழைக்குப் பின் ஒன்றுடனொன்று
உரசியபடி அமர்ந்திருக்கும்
தேன்சிட்டுக்களை போல.
-நிலாரசிகன்.

Sunday, October 07, 2012

வனப்பூ



நீண்டிருக்கும் இரவில் உன்னோடிருப்பது
எதனுடனும் ஒப்பிட முடியாதது.
கூந்தலுக்குள் நுழைந்து வெளியேறும்
விரல்களின் சிலிர்ப்பில் மின்மினிகள்
உடலெங்கும் மின்னி மறையும்.
விடியலுக்காக காத்திருக்கும் பறவைகளின்
செளந்தர்ய மெளனமென
மடியில் புரள்கின்றன உன் மோனங்கள்.
இதழ்களில் பதிந்து பிரியும்
இதழ்களில் நிரம்பித்தளும்புகிறது
காதலென்னும் பெருங்கடல்.
காட்டிடையே அமைந்திருக்கும்
சிறுகுடிலின் நடுவே
உடலெங்கும் பூக்கள் மலர
சிவந்திருக்கிறாய்.
வனப்பூக்களின் வசீகர வாசம்
நம் அறையெங்கும் படர்ந்திருக்கிறது.
நீண்டிருக்கும் இரவில் உன்னோடிருப்பது
எதனுடனும் ஒப்பிட முடியாதது.
ஒரு
வனப்பூவின் உயிர் நிரப்பும்
அதீத மணத்தைப்போல..

-நிலாரசிகன்.

Wednesday, September 19, 2012

ஜூலி

1.ஆற்றின் கரையில் உலரும் ஜூலியின் உடல்

ஜூலி தன் மூன்றாவது உடலை
மலர்த்தியபடி கிடக்கிறாள்.
அவளுடலை அப்பியிருக்கின்றன
ஆற்றுமணலின் துகள்கள்.
காமத்தையும் துரோகத்தையும்
தன் இரண்டாவது உடலோடு
கரைத்துவிட்ட பெருநிம்மதி அவள்
முகத்தில் வழிந்துகொண்டிருக்கிறது.
விழுகின்ற மழையின்
முதல் துளியை துறவி வேடமிட்ட
நண்டுகள் பிடித்துக்கொண்டு அவளிடம்
வருகின்றன.
தீரா தாகத்துடன் அத்துளியை பருகி
மூன்றாம் உடலை களிக்கிறாள்.
சிலந்திகள் நடமாடும்
ஓர் இருண்ட அறையில்
அழுகிய முத்தமொன்றினால் அவனது உடலை
உறிஞ்சிக்கொண்டிருக்கிறது
ஜூலியின் முதலாம் உடல்.


2.காட்டின் கதவுகளை ஜூலி திறந்தபோது


யாருமின்றி
அவளது
உமிழ் நீரில் வசிக்கும் பாக்டீரியாக்களை
முகம் திருப்பியபடி பெற்றுக்கொண்டிருந்தது
அறைக்காற்று.
சற்று நேரத்தில் ஒலித்த அழைப்புமணியின்
ஒலியில் முத்தம் நிறுத்தியவள்
கதவருகே ஓடுகிறாள்.
கதவின் மறுபக்கம் வெளிமானின்
சாயலை ஒத்தவன் நின்றுகொண்டிருந்தான்.
கதவு திறக்கும் ஓசையை
அறைக்காற்று முகம் உயர்த்தி
பார்த்த கணம்
புலி உருவ முத்தமொன்று
குருதி சுவைத்துக்கொண்டிருந்தது.
அவள் வீட்டின் வரவேற்பறையில்
இதழ்களை சுழற்றி சுழற்றி
முத்தமிட்டுக்கொண்டிருந்தாள் ஜூலி



3.ஜூலி என்றொரு முடிவிலி

மரவண்டுகளிட்ட துளைக்குள்
தன் மார்புகளை பொருத்திக்கொள்கிறாள்.
தூர்ந்துபோன சொற்களால்
அந்தரத்தில் தொங்கும் கதையொன்றை
உருவாக்கி அக்கதையில்
மரவண்டின் ரீங்காரத்தை
ஒலிக்கச்செய்கிறாள்.
மிகுந்த சப்தம் எழுப்பி துளைக்குள்
வந்தமர்கின்ற வண்டுகள் அவளது
மார்பை தின்னத்துவங்குகின்றன.
வலியின் விரல்களை
இறுக பற்றிக்கொண்டு புன்னகைக்கிறாள்.
முடிவில்லாமல் நீளும்
இவ்வாதையை ஒரு முத்தத்தின் வழியே
அவனுக்குள் விதைக்கிறாள்.
அவனது மிகச்சிறிய உலகத்தில்
முடிவிலியாக அந்தரத்தில்
தொங்குகின்றன
முத்தங்கள் முத்தங்கள்.


4.ஜூலி எனும் முதிர்ந்த ஆமை


முப்பது கோடைகளை
விழுங்கி மெதுவாய்
அறைக்குள் அங்குமிங்கும்
நகர்ந்து கொண்டிருக்கிறது
ஜூலி ஆமை.
அதன் கன்னக்கதுப்புகளில்
சில குறுமலைகளும்
சில மரணித்த பட்டாம்பூச்சிகளின்
வண்ணச் சிதறலும் தென்படுகின்றன.
படுக்கை விரிப்பில்
புரளுகையில் அது தன்
முப்பதாவது கோடைக்குள்
நுழைகிறது.
ஒரே முத்தத்தில் தன்னிடம்
வீழ்ந்தவனை சந்திக்கிறது.
உள்ளங்கைகளுக்குள் மிக பத்திரமாய்
வைத்திருக்கிறான்
ஜூலியின் முத்தத்தை.
கைபிரித்து தளர்ந்த கண்களுடன்
அம்முத்தத்தை பார்க்கிறது.
ஏதேன் சர்ப்பத்தின் குட்டியாய்
நெளியும் முத்தத்தை அவனிடமிருந்து
பறித்துக்கொண்டு
தன் அறைக்கு திரும்புகிறது
ஓட்டமும் நடையுமாய்.

[நன்றி: "சிலேட்"]

-நிலாரசிகன்.