Tuesday, March 27, 2012
361 டிகிரி - மூன்றாவது இதழ் - வெளிவந்துவிட்டது
நண்பர்களுக்கு,
361 டிகிரி மூன்றாவது இதழ் இன்று வெளியானது. சென்னையில் டிஸ்கவரி புக்பேலஸ் மற்றும் நியு.புக் லேண்ட்ஸ் கடைகளில்
கிடைக்கும். விரைவில் கோவை விஜயா பதிப்பகத்திலும் சேலம் பாலம் கடைகளிலும் கிடைக்கும். மதுரையில் கவிஞர்.ஆத்மார்த்தியிடம் கிடைக்கும்.
இதழில் பங்கு பெற்ற படைப்பாளிகள் விபரம்:
கவிதைகள்: செல்மா ப்ரியதர்சன்,நித்தியா வீரராகு,ராணி திலக்,கதிர்பாரதி,வா.மணிகண்டன், பத்மபாரதி
வேல்கண்ணன்,அனார்,அனிதா,றியாஸ் குரானா,
க.அம்சப்ரியா,தேன்மொழிதாஸ்,நிலா ரசிகன்,பொன்.வாசுதேவன்,தேனப்பன் ,சாகிப்கிரான்,ந.பெரியசாமி,விஷ் ணுபுரம் சரவணன்,சம்யுக்தா,சாம்ராஜ்,தீ பச்செல்வன்,ஈஸ்வர சந்தானமூர்த்தி,நேசமித்ரன்,அய் யப்பமாதவன்,சிவன்,சுவாதி ச.முகில்.
மொழிபெயர்ப்பு கவிதைகள்: ரிஷான் ஷெரீப்,சித்தார்த் வெங்கடேசன்
சிறுகதை: ஜே.பி.சாணக்கியா,அதிரதன்,ஆத்மா ர்த்தி,த.அரவிந்தன்
கட்டுரை: யவனிகா ஸ்ரீராம்,கொற்றவை
ஓவியங்கள்: ஞானப்பிரகாசம்,பெருஞ்சித்திரன்.
இதழில் பங்குபெற்ற படைப்பாளிகள் தங்களது முகவரியை nilaraseegan@gmail.com மின்னஞ்சலுக்கு உடனே அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். இதழ் நாளை அனுப்பப்படும்.
தனியனாக ஒரு இதழை கொண்டுவருவதின் சவாலை உணர்கிறேன். படைப்புகளை ஒருங்கிணைப்பதிலிருந்து இதழாக்கம் வரை தொடர்ந்து ஊக்குவித்த நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி. மனதைரியத்தையும்,நட்பையும் அள்ளித்தந்த சாகிப்கிரானுக்கும், இதழின் அச்சாக்க பணியை தன் கண்மணிபோல் பல சிரமங்களுக்கிடையில் மிக கவனமாக உடனிருந்து பார்த்துக்கொணர்ந்த புது எழுத்து ஆசிரியர் மனோன்மணி அவர்களுக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை என்னிடம். நன்றியில் எப்போதும் நீராடும் விழிகள்.
இதழ் வேண்டுவோர்,நன்கொடை தர விரும்புவோர் என்னை தொடர்புகொள்ளலாம்.
அனைவருக்கும் நன்றி.
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
361 டிகிரி மூன்றாவது இதழ் இன்று வெளியானது. சென்னையில் டிஸ்கவரி புக்பேலஸ் மற்றும் நியு.புக் லேண்ட்ஸ் கடைகளில்
கிடைக்கும். விரைவில் கோவை விஜயா பதிப்பகத்திலும் சேலம் பாலம் கடைகளிலும் கிடைக்கும். மதுரையில் கவிஞர்.ஆத்மார்த்தியிடம் கிடைக்கும்.
இதழில் பங்கு பெற்ற படைப்பாளிகள் விபரம்:
கவிதைகள்: செல்மா ப்ரியதர்சன்,நித்தியா வீரராகு,ராணி திலக்,கதிர்பாரதி,வா.மணிகண்டன்,
வேல்கண்ணன்,அனார்,அனிதா,றியாஸ் குரானா,
க.அம்சப்ரியா,தேன்மொழிதாஸ்,நிலா
மொழிபெயர்ப்பு கவிதைகள்: ரிஷான் ஷெரீப்,சித்தார்த் வெங்கடேசன்
சிறுகதை: ஜே.பி.சாணக்கியா,அதிரதன்,ஆத்மா
கட்டுரை: யவனிகா ஸ்ரீராம்,கொற்றவை
ஓவியங்கள்: ஞானப்பிரகாசம்,பெருஞ்சித்திரன்.
இதழில் பங்குபெற்ற படைப்பாளிகள் தங்களது முகவரியை nilaraseegan@gmail.com மின்னஞ்சலுக்கு உடனே அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். இதழ் நாளை அனுப்பப்படும்.
தனியனாக ஒரு இதழை கொண்டுவருவதின் சவாலை உணர்கிறேன். படைப்புகளை ஒருங்கிணைப்பதிலிருந்து இதழாக்கம் வரை தொடர்ந்து ஊக்குவித்த நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி. மனதைரியத்தையும்,நட்பையும் அள்ளித்தந்த சாகிப்கிரானுக்கும், இதழின் அச்சாக்க பணியை தன் கண்மணிபோல் பல சிரமங்களுக்கிடையில் மிக கவனமாக உடனிருந்து பார்த்துக்கொணர்ந்த புது எழுத்து ஆசிரியர் மனோன்மணி அவர்களுக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை என்னிடம். நன்றியில் எப்போதும் நீராடும் விழிகள்.
இதழ் வேண்டுவோர்,நன்கொடை தர விரும்புவோர் என்னை தொடர்புகொள்ளலாம்.
அனைவருக்கும் நன்றி.
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
Sunday, March 11, 2012
முத்தக்கொலையாளினி
அனைவரும் உறங்க சென்றபின்
உனதறைக்கு திரும்புகிறாய்.
அறையெங்கும் மிதந்தலையும்
செந்நிற முத்தங்களை கண்டு
ஸ்தம்பித்து நிற்கிறாய்.
ஒவ்வொரு முத்தத்திற்குள்ளும்
கண்களில் நீர் தளும்ப
ஒருவன் அமர்ந்திருக்கிறான்.
எவ்வித உணர்வுகளுமின்றி
ஒவ்வொரு முத்தமாய் உன் நீள்நகத்தில்
குத்தியெடுத்து யன்னல் வழியே வீசுகிறாய்.
யன்னலுக்கு வெளியே ஓடும்
சிற்றோடையில் செத்து மிதக்கின்றன
உயிரற்ற வெற்று முத்தங்கள்.
விடியலில்
வற்றிய சிற்றோடையின் தடமெங்கும்
மரித்துக்கிடந்தன ஆயிரமாயிரம்
சூரியன்கள்.
-நிலாரசிகன்.
[சென்ற வார கல்கியில் வெளியானது]
Labels:
இலக்கியம்,
கவிதை,
கவிதைகள்,
பிரசுரமானவை
Wednesday, February 08, 2012
Sunday, February 05, 2012
கவிதைகள் இரண்டு
தட்டானும் தவறியவளும்
வெகுநாட்கள் கழித்து தோழியொருத்தியை
அழைக்காமல்
கலந்துகொண்ட விழாவொன்றில் சந்தித்தேன்.
கூடவே ஒரு தட்டானையும்.
கரும்பச்சை நிறத்தில் இறக்கை மினுமினுத்தது.
தட்டானிடம் பேசுவதற்கு எதுவுமில்லை
எனினும் பேசினேன்.
தன் பெயர் தட்டான் என்றது.
வானமென்பது வெறும் புள்ளி என்றும்
உயரப்பறத்தலின் அற்புதங்கள் பற்றியும்
பேசிக்கொண்டிருந்தது.
விழாவின் இறுதியில் என்னிடம் வந்து
நலமா என்றாள் தோழி.
தலையில் வந்தமர்ந்த தட்டான்
மலம் கழித்துச் சென்றது.
நலமே என்றேன்.
முகமற்றவளின் சித்திரம்
தொடர்ந்து தன் புகைப்படங்களை
மாற்றியபடியே இருக்கிறாள்.
வெவ்வேறு
அழகிகளின் படங்களால் அவளது
முகநூல் தன்னை புதுப்பித்துக்கொள்கிறது.
ஒவ்வொரு சித்திரங்களின் வழியே
தன் அழகின்மையை கடந்து செல்கிறாள்.
அழகிகளின் சித்திரம் கிடைக்காத
நாளொன்றில்
கண்கள் திறக்காத பூனைக்குட்டியின்
படமொன்றை வைத்துப்பார்க்கிறாள்.
அது
அழகின்மைக்கும் அழகிற்கும்
நடுவே அவளாகியிருந்தது.
[பண்புடன் மின்னிதழில் வெளியான கவிதைகள்]
Labels:
இலக்கியம்,
கவிதை,
கவிதைகள்,
பிரசுரமானவை
Saturday, January 14, 2012
புத்தக காட்சியில் வாங்கியவை
முன்குறிப்பு:
நவீன இலக்கியத்தில் புதிதாய் நுழையும் வாசகனுக்கு பயன்படும் என்பதால் நான் வாங்கிய நூல்களின் பட்டியலை இங்கே பதிவுசெய்கிறேன்.
காலச்சுவடு:
உயிர்மை:
உயிர் எழுத்து:
பிற:
அஞ்சலை - நாவல் & ஒரு புளிய மரத்தின் கதை - நாவல்.
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
நவீன இலக்கியத்தில் புதிதாய் நுழையும் வாசகனுக்கு பயன்படும் என்பதால் நான் வாங்கிய நூல்களின் பட்டியலை இங்கே பதிவுசெய்கிறேன்.
காலச்சுவடு:
- சிவாஜி கணேசனின் முத்தங்கள் - இசை - கவிதை
- பட்சியன் சரிதம் - இளங்கோ கிருஷ்ணன் - கவிதை
- நீள் தினம் - பூமா ஈஸ்வரமூர்த்தி - கவிதை
- ஈ தனது பெயரை மறந்து போனது - றஷ்மி - கவிதை
- நிலம் பிரிந்தவனின் கவிதை - சுஜந்தன் - கவிதை
- இரவைப் பருகும் பறவை - லாவண்யா சுந்தரராஜன் - கவிதை
- கண்ணுக்குத் தெரியாததன் காதலன் - குவளைக்கண்ணன் - கவிதை
- புதிய அறையின் சித்திரம் - மண்குதிரை - கவிதை
- ஆகவே நானும் - தேவேந்திரபூபதி - கவிதை
- காடாற்று - சேரன் - கவிதை
- எனது மதுக்குடுவை - மாலதி மைத்ரி - கவிதை
- வியத்தலும் இலமே - அ.முத்துலிங்கம் - நேர்காணல்கள்
- இரவில் நான் உன் குதிரை - மொழிபெயர்ப்பு சிறுகதைகள்
- காலச்சுவடு கவிதைகள்(1994 - 2003)
- ஒளியின் உள்வரியில் - ஷாஅ - கவிதை
- பணிய மறுக்கும் பண்பாடு - எட்வர்ட் ஸெய்த் - கட்டுரைகள்
உயிர்மை:
- அருகன் - தமிழச்சி தங்கபாண்டியன் - கவிதை
- நீருக்குக் கதவுகள் இல்லை - சுகுமாரன் - கவிதை
- கூழாங்கற்கள் பாடுகின்றன - எஸ்.ராமகிருஷ்ணன் - கட்டுரை
- ஆண்பால் பெண்பால் - தமிழ்மகன் - நாவல்
- எட்றா வண்டிய - வா.மு.கோமு - நாவல்
- மங்கலத்து தேவதைகள் - வா.மு.கோமு - நாவல்
- கறுப்பு கிறிஸ்துவும் வெள்ளைச்சிங்கங்களும் - சு.கி.ஜெயகரன் - கட்டுரை
- வானில் பறக்கும் புள்ளெலாம் - தியடோர் பாஸ்கரன் - கட்டுரை
உயிர் எழுத்து:
- மரங்கொத்திச் சிரிப்பு - ச.முத்துவேல் - கவிதை
- தனிமையின் நீட்சியில் ஒரு நகரம் - ஆத்மார்த்தி - கவிதை
- நித்ரா..நீயல்லா வானம் எனக்குச் சிறு கரும்புள்ளி - வசுமித்ர - கவிதை
- பெருந்திணைக்காரன் - சிறுகதைகள் - கணேசகுமாரன்
- உப்பு நாய்கள் - நாவல் - லஷ்மி சரவணக்குமார்
- சொற்பறவை - ஸ்ரீஷங்கர் - கவிதை
- பூப்படைந்த மலர்களை கனியச் செய்கையில் - கவிதை - சுதீர் செந்தில்
- புகைப்படங்கள் நிரம்பிய அறை -கணேசகுமாரன் - கவிதை
- அழகம்மா - சிறுகதைகள் - சந்திரா
- உயிர் எழுத்து கவிதைகள் - தொகுப்பு:சுதீர்செந்தில்
- சமயவேல் சிறுகதை நூல்
பிற:
- தஞ்சை பிரகாஷ் - சிறுகதைகள் - காவ்யா
- கெட்ட வார்த்தை பேசுவோம் - பெருமாள்முருகன் - கட்டுரை - கலப்பை பதிப்பகம்
- ஆகாயத்தின் மக்கள் - அழகுநிலா - குமரன் பதிப்பகம் - கவிதை
- க.நா.சு கவிதைகள் - விருட்சம் வெளியீடு
- மாமத யானை - குட்டி ரேவதி - கவிதை - வம்சி
- உழைப்பை ஒழிப்போம் - கட்டுரைகள் - அடையாளம்
- பெளத்தம் மிகச்சுருக்கமான அறிமுகம் - அடையாளம்
- எரியும் பனிக்காடு - நாவல் - விடியல்
- தனிமையின் ஆயிரம் இறக்கைகள் - குட்டிரேவதி - கவிதை - அடையாளம்
- நீட்சே தத்துவமும் வாழ்வும் ஓர் அறிமுகம் - விடியல்
- மீன்காரத்தெரு - நாவல் - கீரனூர் ஜாகிர்ராஜா - ஆழி
- நவீன தமிழ்ச் சிறுகதைகள் - தொகுப்பு: சா.கந்தசாமி - சாகித்ய அகாதமி வெளியீடு
- ப்ராய்ட் யூங் லக்கான் அறிமுகமும் நெறிமுகமும் - அடையாளம்
- யாழ்ப்பாணப் புகையிலை - மழையாளச்சிறுதைகள் - சாகித்ய அகாதமி
- ஊட்டு - கவிதைகள் - கறுத்தடையான் - மணல்வீடு வெளியீடு
அஞ்சலை - நாவல் & ஒரு புளிய மரத்தின் கதை - நாவல்.
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
Thursday, January 05, 2012
புது எழுத்து கவிதைகள்
1.சாவுக்குருவி
இரவைக் கிழித்து பாடிக்கொண்டிருக்கும்
பறவை என் தோள் மீது அமர்ந்திருக்கிறது.
அதன் நீண்ட பாடலை உனக்கு எப்படி
புரியவைப்பது என்பதை பற்றி நான் அறியவில்லை.
வட்ட வடிவ சிறு உலகை ஒத்த அதன் கண்கள்
மென்மையானவை.
இரவைக் கிழிக்கும் அதன் குரலின் பேரானந்தம்
உன்னால் உணர முடியாதது.
கருநீல நிறத்தில் தலை துவட்டும் உயர்ந்த
தென்னை மரத்தில் நாங்கள் இப்போதிருக்கிறோம்.
காற்றில் அசையும் மரத்தில்
இடமும் வலமுமாக அசைந்து அசைந்து
இசையாகி வீழ்கிறோம்.
அதிகாலை எனைத் தேடி வந்த நீ
ஆந்தை அடித்து இறந்தவன் என்கிறாய்
என் இசையுடல் மீதேறி.
2. தீரா பசி
உக்கிரமானதொரு யுத்தத்தை
முதல் முறையாக நிகழ்த்தினான்.
கிழிந்த மேகங்களாய் சிதறிக்கிடக்கும் குருதியின்மேல்
நடனமிடும் துறவிகளை பழித்து திரும்பிக்கொண்டான்.
இரவுமழையின் ஊடாக செவிக்குள் இறங்கும்
முனகல் சப்தத்தில் விழித்தவன்
மாலை புதைத்த பெண்ணுடல் அருகே செல்கையில்
உக்கிரமானதொரு யுத்தத்தை
இரண்டாம் முறையாக பார்க்கிறான்.
குருதி படர்ந்த துறவிகளின் ஆடையை
எரித்துவிட்டு தன் யுத்ததை மீண்டும்
துவங்குகிறான்.
மார்பில் அடித்துக்கொண்டு
அழுதுகொண்டிருந்தாள் அவ்வனத்தின்
உமை.
3. உடலின் மொழி
யாரும் அறியா மூன்றாம் சாமத்தில்
என் பதினேழாவது வயதிற்கு
திரும்பினேன்.
நான்கு தெருக்கள் தள்ளியிருக்கும்
அவளது வீட்டிற்குள் நுழைந்தேன்.
உடல் பேசும் மொழியை அவள்
ஒருவனுக்கு கற்றுக்கொடுக்க
முயல்வதை கண்டேன்.
சிவந்த விழிகளுடன் அருகில் சென்று
எட்டி உதைத்தேன்.
வீறிட்டு விழுந்தவளை புறக்கணித்து
அவன் அருகே சென்றேன்.
அப்போது எனக்கு பதினேழாவது
வயது நடந்துகொண்டிருந்தது.
4.நட்சத்திரா என்றொரு சிறுமி இருந்தாள்
விழுந்து பெருகும் துளிகளின் வழியே
வந்து விழுந்தவள் நட்சத்திரா.
அப்போது அவள் ஒரு வெண்ணிற ஆடை
அணிந்திருந்தாள்.
அணில்கள் விளையாடும் செம்பருத்திக்காட்டில்
தன் வெண்ணிற உடையை சிறகாக்கி
விளையாடும் அவளது வயது ஒன்பதை கடந்திருந்தது.
அவள் ஆடையிலாடும் சிறு நூலின் நுனியில்
அங்குமிங்கும் ஆடிக்கொண்டிருந்தேன்.
நகராத நாளொன்றில் தன் விளையாட்டை
நிறுத்திவிட்டு வேறோர் ஆடை அணிந்துகொண்டாள்.
இப்போது அவளது வயது இருபத்தி ஐந்தை
தாண்டியிருந்தது.
அவள் அணிந்த ஆடையின் பெயர்
மெளனம் என்பதும் அதன்
கா
ரணம்
என்னவென்பதை பற்றியும் நாங்கள் மட்டுமே
அறிவோம்.
5.கல்வெளியில் உலவும் கனவு
அதிகாலைக்கல் என்றொரு கல்லை
பரிசளித்தான் நண்பன்.
அதிகாலையில் உள்ளங்கையில் மறைத்துக்கொண்டு
வேண்டியதைக் கேள் கிடைக்கும் என்றான்.
பத்து வயதில் மரித்துப்போன நாய்க்குட்டியை
கேட்டேன்.
மறுகணம்,
வாலாட்டிக்கொண்டு காலை சுற்றியது.
பதின்வயதில் ஒன்றாய் திரிந்த தோழியை
கேட்டேன்.
அதே குறுநகையுடன் சன்னலோரம் நிற்கிறாள்.
அதீத நம்பிக்கையில்
கடைசியாக
இரு நாட்களுக்கு முன்பு மரித்த
என்னைக்கேட்டேன்.
- நிலாரசிகன்.
[இம்மாதம் வெளியான புதுஎழுத்து சிற்றிதழில் வெளியானவை]
Labels:
இலக்கியம்,
கவிதை,
கவிதைகள்,
பிரசுரமானவை
Wednesday, January 04, 2012
புதுவிசை கவிதைகள்
1.வெண்நிற செம்பருத்தி
குரு(ந)தியில் பயணிக்கும் எறும்புகள்
ஒரு செம்பருத்திச் செடியை இழுத்துச்
செல்கின்றன.
மெல்லிதழ்கள் கொண்ட செம்பருத்தியின் மேல்
படர்கிறது இரவு வெயில்.
அடர்ந்த வெயிலின் நடுவே
ஒளிவீசும் தீச்சுடருடன் கண்கள் திறக்கிறான்
சடைமுனி.
அவனது கால்களை பற்றிக்கொண்டு அழுகிறாள்
வெண்ணிற உடை அணிந்த
சிறுமியொருத்தி.
உதிரம் வடியும் கால்களிடையே ஊர்கின்ற
எறும்புகள் வெண்நிற செம்பருத்தியொன்றை
மெதுவாய் இழுத்துச் செல்கின்றன.
2.நதிக்கரையில் நீந்தும் சிறுமீன்
மரத்திலிருந்து விழுகின்ற கண்ணாடிக்குடுவை
காற்றினூடாக வேகமாக பயணிக்கிறது.
குடுவைக்குள் தளும்பும் நீரில்
இரண்டு மீன்குஞ்சுகள் இருக்கின்றன.
கிளையொன்றில் மோதும் குடுவையை
அதன் பின் காணவில்லை.
இடவலமாக வானில் பறக்கும்
பறவைகள் நதியொன்றில்
விட்டுச் செல்கின்றன
இரண்டு இறகுகளை.
அவை மெல்ல நீந்தி
மீன்குஞ்சுகளாக உருக்கொள்கையில்
கனவொன்றின் நதிக்கரையில்
இக்காட்சியை கண்டபடி நடந்துசெல்கிறாள்
நட்சத்திரா.
3.ஒளிப்பறவைகள்
அவனது உடலெங்கும் மலர்ந்திருக்கும்
சிறுரோமங்களில் பறவைக்கூட்டங்கள்
வசித்து வந்தன.
ஓர் இரவில்
அரவமற்ற மரத்தடியில்
அமர்ந்து அழத்துவங்கினான்.
வன ரோமங்களிலிடையே
மெல்ல உடலேறி வந்த தேன்சிட்டொன்று
கண்ணீரை பருகி மெளனித்தது.
இருளின் நடுவே ஒளியுடன்
நடந்தவன் மின்மினிகள் சிலவற்றை
பின் தொடர்ந்தான்.
அடர் இருளில் ஒளியாய்
செல்லும் இவனது சுவடுகளெங்கும்
பறவைகள் முட்டையிட்டன.
கூடுடைந்து வெளியேறும் குஞ்சுகள்
கறுப்பு நிற ஒளியுடலை
அசைத்து அசைத்து அவனை
பின் தொடர்ந்தன.
நகரத்தின் தார்சாலைகளில்
நடந்தவனை சிதறடித்து
சென்றது மஞ்சள் ஒளி.
முதன் முதலாய்
பறக்க துவங்கின ஒளிப்பறவைகள்.
4. ஆத்மார்த்தம்
வெள்ளை நிறம் உருகி ஓடும்
நதியில் நாம் இப்போது
நீந்துகிறோம்.
நதிக்கரையின்
மணலில் நீந்துகின்ற மீன்கள்
நம்மைக் கண்டு கையசைக்கின்றன.
தேவதைகள் இருவர் நம்மை
வேறோர் உலகிற்கு அழைத்துச் செல்கிறார்கள்.
வெண்நிற தேவதையை நீயும்
கருநிற தேவதையை நானும்
பின் தொடர்கிறோம்.
சொர்க்கம் நரகம் இரண்டிற்கும்
இடையே ஓடுகின்ற நதியில் அவர்கள்
நம்மை அழைத்துச் செல்கிறார்கள்.
நீல நிற வானில் தவழ்ந்து செல்லும்
பறவைகள் தலைகுனிந்து
நம்மை பார்க்கின்றன.
அனைத்தும் கடந்துவிட்ட
ஆத்மார்த்த கயிற்றில் நம்மை
இறுக கட்டிவிட்டு மிக வேகமாய்
சுழல்கிறது இவ்வுலகு.
-நிலாரசிகன்.
[இம்மாத புதுவிசை ஜனவரி '12 இதழில் வெளியானவை]
குரு(ந)தியில் பயணிக்கும் எறும்புகள்
ஒரு செம்பருத்திச் செடியை இழுத்துச்
செல்கின்றன.
மெல்லிதழ்கள் கொண்ட செம்பருத்தியின் மேல்
படர்கிறது இரவு வெயில்.
அடர்ந்த வெயிலின் நடுவே
ஒளிவீசும் தீச்சுடருடன் கண்கள் திறக்கிறான்
சடைமுனி.
அவனது கால்களை பற்றிக்கொண்டு அழுகிறாள்
வெண்ணிற உடை அணிந்த
சிறுமியொருத்தி.
உதிரம் வடியும் கால்களிடையே ஊர்கின்ற
எறும்புகள் வெண்நிற செம்பருத்தியொன்றை
மெதுவாய் இழுத்துச் செல்கின்றன.
2.நதிக்கரையில் நீந்தும் சிறுமீன்
மரத்திலிருந்து விழுகின்ற கண்ணாடிக்குடுவை
காற்றினூடாக வேகமாக பயணிக்கிறது.
குடுவைக்குள் தளும்பும் நீரில்
இரண்டு மீன்குஞ்சுகள் இருக்கின்றன.
கிளையொன்றில் மோதும் குடுவையை
அதன் பின் காணவில்லை.
இடவலமாக வானில் பறக்கும்
பறவைகள் நதியொன்றில்
விட்டுச் செல்கின்றன
இரண்டு இறகுகளை.
அவை மெல்ல நீந்தி
மீன்குஞ்சுகளாக உருக்கொள்கையில்
கனவொன்றின் நதிக்கரையில்
இக்காட்சியை கண்டபடி நடந்துசெல்கிறாள்
நட்சத்திரா.
3.ஒளிப்பறவைகள்
அவனது உடலெங்கும் மலர்ந்திருக்கும்
சிறுரோமங்களில் பறவைக்கூட்டங்கள்
வசித்து வந்தன.
ஓர் இரவில்
அரவமற்ற மரத்தடியில்
அமர்ந்து அழத்துவங்கினான்.
வன ரோமங்களிலிடையே
மெல்ல உடலேறி வந்த தேன்சிட்டொன்று
கண்ணீரை பருகி மெளனித்தது.
இருளின் நடுவே ஒளியுடன்
நடந்தவன் மின்மினிகள் சிலவற்றை
பின் தொடர்ந்தான்.
அடர் இருளில் ஒளியாய்
செல்லும் இவனது சுவடுகளெங்கும்
பறவைகள் முட்டையிட்டன.
கூடுடைந்து வெளியேறும் குஞ்சுகள்
கறுப்பு நிற ஒளியுடலை
அசைத்து அசைத்து அவனை
பின் தொடர்ந்தன.
நகரத்தின் தார்சாலைகளில்
நடந்தவனை சிதறடித்து
சென்றது மஞ்சள் ஒளி.
முதன் முதலாய்
பறக்க துவங்கின ஒளிப்பறவைகள்.
4. ஆத்மார்த்தம்
வெள்ளை நிறம் உருகி ஓடும்
நதியில் நாம் இப்போது
நீந்துகிறோம்.
நதிக்கரையின்
மணலில் நீந்துகின்ற மீன்கள்
நம்மைக் கண்டு கையசைக்கின்றன.
தேவதைகள் இருவர் நம்மை
வேறோர் உலகிற்கு அழைத்துச் செல்கிறார்கள்.
வெண்நிற தேவதையை நீயும்
கருநிற தேவதையை நானும்
பின் தொடர்கிறோம்.
சொர்க்கம் நரகம் இரண்டிற்கும்
இடையே ஓடுகின்ற நதியில் அவர்கள்
நம்மை அழைத்துச் செல்கிறார்கள்.
நீல நிற வானில் தவழ்ந்து செல்லும்
பறவைகள் தலைகுனிந்து
நம்மை பார்க்கின்றன.
அனைத்தும் கடந்துவிட்ட
ஆத்மார்த்த கயிற்றில் நம்மை
இறுக கட்டிவிட்டு மிக வேகமாய்
சுழல்கிறது இவ்வுலகு.
-நிலாரசிகன்.
[இம்மாத புதுவிசை ஜனவரி '12 இதழில் வெளியானவை]
Labels:
கவிதை,
கவிதைகள்,
பிரசுரமானவை
Saturday, December 31, 2011
வம்சி சிறுகதை போட்டி
வம்சி பதிப்பகம் நடத்திய சிறுகதை போட்டியில் என் "பெருநகர சர்ப்பம்" சிறுகதை "தொகுப்புக்கு" தேர்வாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். வெற்றி பெற்ற அனைத்து சிறுகதையாளர்களுக்கும் என் வாழ்த்துகள். இப்போட்டியை நடத்திய தீராத பக்கங்கள் மாதவராக் அவர்களுக்கு நன்றியும் நேசமும். நண்பர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
சிறுகதைக்கான சுட்டி: http://www.nilaraseeganonline.com/2011/10/blog-post_29.html
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
Sunday, December 25, 2011
துத்திப்பூக்களும் கோணங்கியும்
துத்திப்பூக்களின் நடுவே ஓர் உரையாடல்
இருநாட்களுக்கு முன் கோவில்பட்டிக்கு சென்றிருந்தேன். எழுத்தாளர் கோணங்கி,உதயசங்கர் மற்றும் கவிஞர்.தேவதச்சன் ஆகியோரை சந்தித்தேன். முதலாவதாக கோவில்பட்டி சென்றவுடன் கோணங்கி வீட்டிற்கு சென்றேன். அவரது அப்பாவிடம்(எழுத்தாளர்.சண்முகம் ) பேசிவிட்டு மாடிக்கு அழைத்துச்சென்றார். அறையெங்கும் நிறைந்திருக்கும் புத்தகங்களின் நடுவே ஜன்னலோர இருக்கையில் தன் அடுத்த நாவலுக்கான எழுத்துப்பணியில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கிறார் கோணங்கி. நாவலை பற்றி பேசத் துவங்கியவுடன் மிகுந்த உற்சாகமாகி நிறைய விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.சிற்றிதழ்கள் பற்றியும் கல்குதிரையின் பழைய இதழ்களை பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம்.ஒரு மாபெரும் எழுத்தாளர் என்கிற எவ்வித சுவடுமின்றி மிக எளிமையாக வசிப்பவர் அவர் என்பதாலயே அவர்மீதான அன்பும்,மதிப்பும் உயர்ந்துகொண்டே இருக்கிறது.
மதிய உணவிற்கு பிறகு தேவதச்சனை அவரது வீட்டில் சந்தித்து "விளக்கு" விருது வாங்கியதற்காக வாழ்த்திவிட்டு அவரையும் அழைத்துக்கொண்டு குமாரபுரம் ரயில் நிலையம்(கு.அழகிரிசாமியின் "குமாரபுரம் ஸ்டேசன்" இதுதான்) சென்றோம். கோவில்பட்டியிலிருந்து சுமார் 20 கி.மி தொலைவில் இருக்கிறது குமாரபுரம்.ரயில் நிலையம் செல்லும் தார் ரோட்டின் இருபுறமும் சோளக்கதிர்கள் அடர்ந்திருந்தன. இடுப்புயர புதர்க்காட்டின் நடுவே பயணிப்பது அற்புதமானதொரு அனுபவமாக இருந்தது. "17ம் நூற்றாண்டிற்குள் பயணிப்பது போலிருக்கிறது" என்றார் தேவதச்சன். ரயில் நிலையத்தை சுற்றிலும் படர்ந்திருக்கும் பசுமை மனதை கொள்ளை கொண்டது. வழியெங்கும் துத்திப்பூக்களும்,ஆவாரம்பூக் களும் நிறைந்து கிடந்தன. புதர்க்குருவிகள் காற்றில் அலைந்துகொண்டிருந்தன.
குமாரபுரம் ரயில் நிலையத்தில் ஸ்டேசன் மாஸ்டராக இருக்கிறார் எழுத்தாளர் உதயசங்கர். அவருடன் தேநீர் அருந்திக்கொண்டே ஓர் உரையாடல் ஆரம்பமானது. தற்கால கவிதை,கு.அழகிரிசாமி,சிற்றிதழ் கள்,தகவல் தொழில்நுட்பத்தின் சாதக/பாதகங்கள்,இன்றைய இளம் எழுத்தாளர்களின் தனித்துவ வெளிப்பாடு, இன்றைய இளம் கவிஞர்களின் தனிக்குரல்,டெம்ப்ளேட் ஆளுமைகள் என்று விரிவானதொரு உரையாடலாக அது நீண்டது.கோணங்கியின் எழுத்தை பின்பற்றி எழுதும் இன்றைய எழுத்தாளர்களை பற்றியும் பேசினோம்.
உதயசங்கரின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் தொகுப்பு பாரதி புத்தகாலயம் வெளியீடாக இந்த புத்தக கண்காட்சிக்கு வருகிறது.
தேவதச்சனின் கவிதைகள் குறித்தான உரையாடலும் கருத்துக்களும் மிகவும் முக்கியமானவை. அவர் பேச பேச பல்வேறு திறப்புகள் மனதில் தோன்றியபடியே இருந்தன. கவிதையியல் குறித்தான கட்டுரைகளை அவர் எழுதவேண்டும் என்பது என் பேராவல். மூன்று மணிநேர உரையாடல் முடியும் தருவாயில் வந்து நின்றது ரயில். அரவமற்ற ரயில்நிலையத்தில் ரயிலை ரசிப்பதை விட அற்புதமானது எது?
மிகச்சிறந்த உரையாடல் மிகச்சிறந்த புலத்தில் நிகழ்ந்தேற காரணமாயிருந்த கோணங்கி அண்ணனுக்கு என் நன்றி.
இன்னும் வெகு நாட்களுக்கு மனதெங்கும் வியாபித்திருக்கும் இச்சந்திப்பு.
-நிலாரசிகன்.
மதிய உணவிற்கு பிறகு தேவதச்சனை அவரது வீட்டில் சந்தித்து "விளக்கு" விருது வாங்கியதற்காக வாழ்த்திவிட்டு அவரையும் அழைத்துக்கொண்டு குமாரபுரம் ரயில் நிலையம்(கு.அழகிரிசாமியின் "குமாரபுரம் ஸ்டேசன்" இதுதான்) சென்றோம். கோவில்பட்டியிலிருந்து சுமார் 20 கி.மி தொலைவில் இருக்கிறது குமாரபுரம்.ரயில் நிலையம் செல்லும் தார் ரோட்டின் இருபுறமும் சோளக்கதிர்கள் அடர்ந்திருந்தன. இடுப்புயர புதர்க்காட்டின் நடுவே பயணிப்பது அற்புதமானதொரு அனுபவமாக இருந்தது. "17ம் நூற்றாண்டிற்குள் பயணிப்பது போலிருக்கிறது" என்றார் தேவதச்சன். ரயில் நிலையத்தை சுற்றிலும் படர்ந்திருக்கும் பசுமை மனதை கொள்ளை கொண்டது. வழியெங்கும் துத்திப்பூக்களும்,ஆவாரம்பூக்
குமாரபுரம் ரயில் நிலையத்தில் ஸ்டேசன் மாஸ்டராக இருக்கிறார் எழுத்தாளர் உதயசங்கர். அவருடன் தேநீர் அருந்திக்கொண்டே ஓர் உரையாடல் ஆரம்பமானது. தற்கால கவிதை,கு.அழகிரிசாமி,சிற்றிதழ்
உதயசங்கரின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் தொகுப்பு பாரதி புத்தகாலயம் வெளியீடாக இந்த புத்தக கண்காட்சிக்கு வருகிறது.
தேவதச்சனின் கவிதைகள் குறித்தான உரையாடலும் கருத்துக்களும் மிகவும் முக்கியமானவை. அவர் பேச பேச பல்வேறு திறப்புகள் மனதில் தோன்றியபடியே இருந்தன. கவிதையியல் குறித்தான கட்டுரைகளை அவர் எழுதவேண்டும் என்பது என் பேராவல். மூன்று மணிநேர உரையாடல் முடியும் தருவாயில் வந்து நின்றது ரயில். அரவமற்ற ரயில்நிலையத்தில் ரயிலை ரசிப்பதை விட அற்புதமானது எது?
மிகச்சிறந்த உரையாடல் மிகச்சிறந்த புலத்தில் நிகழ்ந்தேற காரணமாயிருந்த கோணங்கி அண்ணனுக்கு என் நன்றி.
இன்னும் வெகு நாட்களுக்கு மனதெங்கும் வியாபித்திருக்கும் இச்சந்திப்பு.
-நிலாரசிகன்.
Labels:
அனுபவம்
Monday, December 19, 2011
படித்ததில் பிடித்தது:
இன்னும் தன் அம்மாவிடம்
சொல்லவில்லை
தான் குழந்தை உண்டாயிருப்பதை
ஓரிரு நாளில் அவள்
சொல்லிவிடக்கூடும்
அம்மாவிடம்
அம்மா சொல்வதற்கு
என்ன இருக்கிறது
இருக்கத்தான் செய்கிறது
எப்போதும்
இலையின் பின்பக்கம்
முன்பக்கத்திடம் சொல்வதற்கு
ஏதோ ஒன்று
எப்போதும் இருக்கிறது.
பின்பக்கம்
முன்பக்கத்திடம் சொல்ல முடியாத ஏதோஒன்று.
-தேவதச்சன்
- "இரண்டு சூரியன்" தொகுப்பிலிருந்து.
Labels:
இலக்கியம்,
கவிதை,
கவிதைகள்,
படித்ததில் பிடித்தது
Sunday, December 11, 2011
எக்ஸைல் - ஒரு வாசிப்பனுபவ பகிர்வு
நாவலாசிரியரின் பெயரை சொல்லி "அவர்" நாவல் வாசித்துக்கொண்டிருக்கிறேன் என்று இலக்கியம் பேசும் நண்பர்களிடம் சொன்னால் அவர் எழுதுவது நாவலே இல்லை என்பார்கள். அல்லது சுயபுலம்பலை தவிர அவருக்கு என்ன தெரியும் என்பார்கள். முதல் அத்தியாயத்தில் கதாபாத்திரங்களின் வர்ணனையும் அதன் பிறகான அத்தியாயங்களில் கதையின் மையத்தையும் நோக்கி நகரும் நாவல்களை வாசித்தே பழக்கப்பட்டுவிட்ட யாருக்கும் எக்ஸைல் ஒரு மாற்று அமிர்தம்.
எந்தவொரு 435 பக்க நாவலையும் இரண்டு நாட்களில் அதுவும் அலுவலகத்தில் கிடைக்கும் இடைவெளிகளில் நான் வாசித்ததில்லை. சந்தேகமின்றி தன் மாஸ்டர் பீஸாக நாவலாசிரியர் கருதும் "0 டிகிரி"யை எக்ஸைல் தாண்டிவிட்டதென்று மார்தட்டலாம். அல்லது தேகத்தில் தொலைந்த "ஏதோவொன்றை" இந்நாவலில் கண்டெடுத்ததாகவும் எண்ணலாம்.
அப்படி என்னதான் இருக்கிறது இந்நாவலில்? எது நாவல் எனும் கேள்வியை புறந் தள்ளிவிட்டு எக்ஸைலுக்குள் நுழைந்தால் வாசிப்பு முடிந்து வெளியேறும் கணம் சர்வ நிச்சயமாக உணரலாம் எக்ஸைலின் தனித்தன்மையை(Uniqueness). வாசிக்க ஆரம்பித்து சில மணிநேரங்கள் கழிந்துதான் கவனித்தேன் நானிருப்பது 160வது பக்கத்திலென்று. வாசகனை தன் எழுத்தின் வழியே 'சலிப்பின்றி' பயணிக்க செய்வதிலாகட்டும் உலக இலக்கிய ஆளுமைகளை தொடர்ந்து அறிமுகப்படுத்துவதிலாகட்டும் சாரு ஜெயித்திருக்கிறார். காமத்திலிருந்து காயகல்பம் வரை பல விஷயங்களை கடந்து செல்லும் நாவலில் உதயா,அஞ்சலி,கொக்கரக்கோ(Excellent characterization) மற்றும் சிவா முக்கிய கதாபாத்திரங்களாக உலவுகிறார்கள்.அஞ்சலியின் கொடூர பால்யம் பற்றிய விவரிப்பு வாசகனுக்குள் வலியை ஏற்படுத்தும் தருணங்களில் ,"சித்தன்" சிவாவும் அவ்வப்போது வந்து "சொய்ங்"கென்று அசத்தும் கொக்கரக்கோவும் வாசகனை ரசிக்க வைக்கிறார்கள். நாகூரின் தெருக்கள்,தாஜ்ஜியர் கஃபே,பிரான்ஸின் சாலைகள்,சித்தர்பாடல்கள்,சமையல் குறிப்புகள்,காதல்,துரோகம்,காமம்,பெண்களில் விதவிதமான ஆடைகள்,Current affairs,"அந்த" chat பிரச்சினை,நித்தி,கொக்கரக்கோவின் 'பாடை', சுதாகருடன் ஒட்டிக்கொண்டிருக்கும் நாய்(நாய்கள் மீது அதிக பிரியம் உரிய நாவலாசிரியர் எதற்காக நாயை சுதாகர் எனும் கதாப்பாத்திரம் மூலமாக கேவலப்படுத்த வேண்டும்?),விதவிதமான வித்தியாசமான க்ளைமேக்ஸ்,ஜி.ஸ்பாட், பக்கிரிசாமியின் ஆவி,சபரிமலை பயணம்,ராயர் காஃபி,பகவதி பாலு,நாவலெங்கும் விரவிக்கிடக்கும் பிரஞ்சு வார்த்தைகள்,சொக்குப்பொடி என்று இந்நாவல் பரந்து விரிந்து பல திசைகளில்,பல கிளைகளில் பயணிக்கிறது. அதிக வாசகனுபவம் இல்லாத முதல் வாசகர்கள் இந்நாவலை படித்துவிட்டால் நாவலாசிரியரின் மற்ற நூல்களின் விற்பனை அதிகரிக்கும்.
இவ்வளவு இருக்கும் நாவலில் குறையே இல்லையா? குறையில்லாத படைப்பேது? கீழ் வரும் விடயங்கள் என் பார்வையில் குறையாக அல்லது நாவலின் அசுர வேகத்தை தொய்வாக்குபவையாக தோன்றுகின்றன.
சாருவை "செக்ஸ் எழுத்தாளர்" என்று மட்டுமே எண்ணி நாவலுக்குள் நுழைபவர்களுக்கு எக்ஸைல் வேறுவிதமான நாவல் என்பது புரியவரும்.
மொத்தத்தில் எக்ஸைல் ஒரு மிகச்சிறந்த வாசிப்பனுபவம். An unique reading experience.
-நிலாரசிகன்.
எந்தவொரு 435 பக்க நாவலையும் இரண்டு நாட்களில் அதுவும் அலுவலகத்தில் கிடைக்கும் இடைவெளிகளில் நான் வாசித்ததில்லை. சந்தேகமின்றி தன் மாஸ்டர் பீஸாக நாவலாசிரியர் கருதும் "0 டிகிரி"யை எக்ஸைல் தாண்டிவிட்டதென்று மார்தட்டலாம். அல்லது தேகத்தில் தொலைந்த "ஏதோவொன்றை" இந்நாவலில் கண்டெடுத்ததாகவும் எண்ணலாம்.
அப்படி என்னதான் இருக்கிறது இந்நாவலில்? எது நாவல் எனும் கேள்வியை புறந் தள்ளிவிட்டு எக்ஸைலுக்குள் நுழைந்தால் வாசிப்பு முடிந்து வெளியேறும் கணம் சர்வ நிச்சயமாக உணரலாம் எக்ஸைலின் தனித்தன்மையை(Uniqueness). வாசிக்க ஆரம்பித்து சில மணிநேரங்கள் கழிந்துதான் கவனித்தேன் நானிருப்பது 160வது பக்கத்திலென்று. வாசகனை தன் எழுத்தின் வழியே 'சலிப்பின்றி' பயணிக்க செய்வதிலாகட்டும் உலக இலக்கிய ஆளுமைகளை தொடர்ந்து அறிமுகப்படுத்துவதிலாகட்டும் சாரு ஜெயித்திருக்கிறார். காமத்திலிருந்து காயகல்பம் வரை பல விஷயங்களை கடந்து செல்லும் நாவலில் உதயா,அஞ்சலி,கொக்கரக்கோ(Excellent characterization) மற்றும் சிவா முக்கிய கதாபாத்திரங்களாக உலவுகிறார்கள்.அஞ்சலியின் கொடூர பால்யம் பற்றிய விவரிப்பு வாசகனுக்குள் வலியை ஏற்படுத்தும் தருணங்களில் ,"சித்தன்" சிவாவும் அவ்வப்போது வந்து "சொய்ங்"கென்று அசத்தும் கொக்கரக்கோவும் வாசகனை ரசிக்க வைக்கிறார்கள். நாகூரின் தெருக்கள்,தாஜ்ஜியர் கஃபே,பிரான்ஸின் சாலைகள்,சித்தர்பாடல்கள்,சமையல் குறிப்புகள்,காதல்,துரோகம்,காமம்,பெண்களில் விதவிதமான ஆடைகள்,Current affairs,"அந்த" chat பிரச்சினை,நித்தி,கொக்கரக்கோவின் 'பாடை', சுதாகருடன் ஒட்டிக்கொண்டிருக்கும் நாய்(நாய்கள் மீது அதிக பிரியம் உரிய நாவலாசிரியர் எதற்காக நாயை சுதாகர் எனும் கதாப்பாத்திரம் மூலமாக கேவலப்படுத்த வேண்டும்?),விதவிதமான வித்தியாசமான க்ளைமேக்ஸ்,ஜி.ஸ்பாட், பக்கிரிசாமியின் ஆவி,சபரிமலை பயணம்,ராயர் காஃபி,பகவதி பாலு,நாவலெங்கும் விரவிக்கிடக்கும் பிரஞ்சு வார்த்தைகள்,சொக்குப்பொடி என்று இந்நாவல் பரந்து விரிந்து பல திசைகளில்,பல கிளைகளில் பயணிக்கிறது. அதிக வாசகனுபவம் இல்லாத முதல் வாசகர்கள் இந்நாவலை படித்துவிட்டால் நாவலாசிரியரின் மற்ற நூல்களின் விற்பனை அதிகரிக்கும்.
இவ்வளவு இருக்கும் நாவலில் குறையே இல்லையா? குறையில்லாத படைப்பேது? கீழ் வரும் விடயங்கள் என் பார்வையில் குறையாக அல்லது நாவலின் அசுர வேகத்தை தொய்வாக்குபவையாக தோன்றுகின்றன.
- பிச்சாவர கார்னிவலுக்கான மிகப்பெரிய பட்டியல்
- ஒரு நாயகி, அவளுக்கு பல பிரச்சினைகள்,கண்ணீர்,அடிஉதை மற்றும் சுதாகர் நாய் எனும் வில்லன் - 0 டிகிரியின் சில பக்கங்களை நினைவூட்டுகிறது
- பதினெட்டு படிகளை பற்றிய மிக நீ....ள விவரணைகள்
- அதீதமான பிரஞ்சு வார்த்தைகள்
- ஸாரோ,பப்பு(இன்னும் எத்தனை முறை எழுதுவார்?)
- நாகூரின் தெருப்பட்டியல்
- கொக்கரக்கோவின் பால்யமும் குறும்பும்
- உதயா,அஞ்சலியின் உரையாடல்கள்/கடிதங்கள்
- பக்கிரிசாமியின் பக்கங்கள்
- அஞ்சலியின் பிரசவத்தின்போது நடுச்சாமத்தில் குளிரை தாங்க முடியாமல் போர்வையை எடுக்க துடிக்கும் வரிகள்
- நளினியின் பிரசவத்தின்போது உதயாவின் தியாகங்கள்(வேறெந்த வார்த்தையும் பொருந்தாது)
சாருவை "செக்ஸ் எழுத்தாளர்" என்று மட்டுமே எண்ணி நாவலுக்குள் நுழைபவர்களுக்கு எக்ஸைல் வேறுவிதமான நாவல் என்பது புரியவரும்.
மொத்தத்தில் எக்ஸைல் ஒரு மிகச்சிறந்த வாசிப்பனுபவம். An unique reading experience.
-நிலாரசிகன்.
Labels:
நாவல்,
நூல் விமர்சனம்
Tuesday, December 06, 2011
இசைதல்
1.
சிறு சிறு முத்தங்கள் வளர்ந்து
நீண்டதொரு முத்தமாக உருப்பெற்றபோது
நாம் முத்தமாகியிருந்தோம்.
அறைக்குள் சிதறிய மிச்ச முத்தங்கள்
களியாட்டத்தில் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருந்தன.
ஊர்ந்த எறும்புகள் களியாட்டம் கண்டு
பித்தமேறி ஆடி மகிழ்ந்தன.
முத்தவாசனையில் வெட்கி தலைகுனிந்திருந்தது
தொட்டிச்செடி.
ஓர் அழகிய நிகழ்வின் துவக்க கணத்தில்
இதழ் பிரித்து ஓடி மறைந்தாய்.
இசையறுந்த
பியானோ ஒன்றும் வயலின் ஒன்றும்
அவரவர் அறையில் தனியே
இசைத்தடங்குகிறது.
2.
ஊமை படிகளின் முதுகில்
மெல்ல இறங்குகிறது மழை.
முழுவதும் நனைந்துவிட்ட படிகள்
சில்லிட்டு சிலிர்க்கையில்
வலுக்கிறது.
மழையும் வெயிலும் இணையும்
புள்ளியிலிருந்து கசிகிறது மேனியிசை.
விருட்சமொன்றின் வேர் பற்றி
மேலெழுகின்ற மல்லிகைக்கொடி
இதழ் பிரிந்த கணத்தில்
வெயில்மழையை சூழ்ந்து மறைக்கிறது.
யாருமற்ற கடற்கரையில் நிலாபார்த்து
மலர்கிறாள் முதிர்ந்த கடற்கன்னியொருத்தி.
-நிலாரசிகன்.
சிறு சிறு முத்தங்கள் வளர்ந்து
நீண்டதொரு முத்தமாக உருப்பெற்றபோது
நாம் முத்தமாகியிருந்தோம்.
அறைக்குள் சிதறிய மிச்ச முத்தங்கள்
களியாட்டத்தில் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருந்தன.
ஊர்ந்த எறும்புகள் களியாட்டம் கண்டு
பித்தமேறி ஆடி மகிழ்ந்தன.
முத்தவாசனையில் வெட்கி தலைகுனிந்திருந்தது
தொட்டிச்செடி.
ஓர் அழகிய நிகழ்வின் துவக்க கணத்தில்
இதழ் பிரித்து ஓடி மறைந்தாய்.
இசையறுந்த
பியானோ ஒன்றும் வயலின் ஒன்றும்
அவரவர் அறையில் தனியே
இசைத்தடங்குகிறது.
2.
ஊமை படிகளின் முதுகில்
மெல்ல இறங்குகிறது மழை.
முழுவதும் நனைந்துவிட்ட படிகள்
சில்லிட்டு சிலிர்க்கையில்
வலுக்கிறது.
மழையும் வெயிலும் இணையும்
புள்ளியிலிருந்து கசிகிறது மேனியிசை.
விருட்சமொன்றின் வேர் பற்றி
மேலெழுகின்ற மல்லிகைக்கொடி
இதழ் பிரிந்த கணத்தில்
வெயில்மழையை சூழ்ந்து மறைக்கிறது.
யாருமற்ற கடற்கரையில் நிலாபார்த்து
மலர்கிறாள் முதிர்ந்த கடற்கன்னியொருத்தி.
-நிலாரசிகன்.
Thursday, December 01, 2011
அம்ருதா இதழில் வெளியான கவிதைகள்
1.உனக்கும் எனக்குமான யுத்தத்தின் பெயர் இதழ் முத்தம்
மெளனம் உருகி படர்ந்திருக்கும்
மலை உச்சியில் நாம் அமர்ந்திருக்கிறோம்.
என் அணைப்பின் தகதகப்பில்
அடர்பச்சை மரக்காடுகளை
பார்வையின் வழி சென்றடைகிறாய்.
மெல்ல உன் வதனம் திருப்பி
இதழ்களில் முத்தமிடுகிறேன்.
வனம் சில்லிட்டு சிதற சிதற
நம்மிடையே வளர்கின்றன
ஓராயிரம் வேர்களற்ற விருட்சங்கள்.
இதழ்களிலிருந்து வெளியேறும்
முத்தப்பறவைகளிலொன்று உன்னை
அள்ளிச் செல்கிறது.
இதழ்களிலிருந்து வெளியேறிய
கருப்பு சர்ப்பம் என்னை தின்று பசியாறுகிறது.
நம் தடயங்களற்ற மலையின் உச்சி
இப்பொழுதும் மெளனித்து கிடக்கிறது.
2.வனத்தின் நடுவில் நடனமிடும் முத்தங்கள்
சிறகுகள் விரித்திருக்கும்
வண்ணத்துப்பூச்சியை வருடுகிறது
சுவை உணரும் உறுப்பொன்று.
தீண்டலின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க
சிறகுகளை அடித்துக்கொள்கிறது.
கற்குகையின் இருண்ட பள்ளத்தில்
இரண்டு வெப்பமீன்கள் எதிரெதிரே
நீந்துகின்றன.
கார்காலத்தின் முதல் துளி
கடலென விரிந்து விழுகிறது.
விழுகின்ற துளியினூடாக
இரண்டு மீன்களை கெளவிக்கொண்டு
பறக்கிறது மீன்கொத்தி.
குகையின் இருளடர்ந்த பள்ளத்தில்
மீனுருவில் ஆழ்ந்து உறங்குகிறது
ஒரு வண்ணத்துப்பூச்சி.
-நிலாரசிகன்.
மெளனம் உருகி படர்ந்திருக்கும்
மலை உச்சியில் நாம் அமர்ந்திருக்கிறோம்.
என் அணைப்பின் தகதகப்பில்
அடர்பச்சை மரக்காடுகளை
பார்வையின் வழி சென்றடைகிறாய்.
மெல்ல உன் வதனம் திருப்பி
இதழ்களில் முத்தமிடுகிறேன்.
வனம் சில்லிட்டு சிதற சிதற
நம்மிடையே வளர்கின்றன
ஓராயிரம் வேர்களற்ற விருட்சங்கள்.
இதழ்களிலிருந்து வெளியேறும்
முத்தப்பறவைகளிலொன்று உன்னை
அள்ளிச் செல்கிறது.
இதழ்களிலிருந்து வெளியேறிய
கருப்பு சர்ப்பம் என்னை தின்று பசியாறுகிறது.
நம் தடயங்களற்ற மலையின் உச்சி
இப்பொழுதும் மெளனித்து கிடக்கிறது.
2.வனத்தின் நடுவில் நடனமிடும் முத்தங்கள்
சிறகுகள் விரித்திருக்கும்
வண்ணத்துப்பூச்சியை வருடுகிறது
சுவை உணரும் உறுப்பொன்று.
தீண்டலின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க
சிறகுகளை அடித்துக்கொள்கிறது.
கற்குகையின் இருண்ட பள்ளத்தில்
இரண்டு வெப்பமீன்கள் எதிரெதிரே
நீந்துகின்றன.
கார்காலத்தின் முதல் துளி
கடலென விரிந்து விழுகிறது.
விழுகின்ற துளியினூடாக
இரண்டு மீன்களை கெளவிக்கொண்டு
பறக்கிறது மீன்கொத்தி.
குகையின் இருளடர்ந்த பள்ளத்தில்
மீனுருவில் ஆழ்ந்து உறங்குகிறது
ஒரு வண்ணத்துப்பூச்சி.
-நிலாரசிகன்.
Labels:
இலக்கியம்,
கவிதை,
கவிதைகள்,
பிரசுரமானவை
Saturday, November 26, 2011
பொதிகை தொலைக்காட்சியில்..
இரமணன் அண்ணன் பொதிகை தொலைக்காட்சியில் நடத்தும் “கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்” நிகழ்ச்சியில் நானும் உயிர்த்தோழன் விழியனும் குழந்தைகள் பற்றிய கவிதைகளை பற்றி பேசுகின்றோம்.
பொதிகை - 28 நவம்பர் - திங்கள் இரவு - 9.30 மணிக்கும் மறுஒளிபரப்பு 29 நவம்பர் - செவ்வாய் மதியம் 1.00 மணிக்கும்.
நிகழ்ச்சியை நண்பர்கள் யாராவது பதிவு செய்து தர இயலுமா?
நட்புடன்,
நிலாரசிகன்.
பொதிகை - 28 நவம்பர் - திங்கள் இரவு - 9.30 மணிக்கும் மறுஒளிபரப்பு 29 நவம்பர் - செவ்வாய் மதியம் 1.00 மணிக்கும்.
நிகழ்ச்சியை நண்பர்கள் யாராவது பதிவு செய்து தர இயலுமா?
நட்புடன்,
நிலாரசிகன்.
Monday, October 03, 2011
ஒலிவடிவ பறவைகள்
அறையெங்கும் ஒலி நிரப்பும்
தாரிச்சிட்டிலிருந்து
உதிர்கின்ற சொற்கள் சிறகு முளைத்து
காற்றில் அலைந்து திரிகின்றன.
பிரபஞ்சத்தின் முடிவுறா இருளில்
அவை ஒலிவடிவ பறவையாக
பறந்து பறந்து களிப்படைந்து,
சொற்களற்ற மெளனத்துடன்
என் தோளில் வந்தமர்கின்றன.
ஆத்மார்த்த பேரன்புடன் அதனுடன்
உரையாட துவங்குகிறேன்.
ரகசியமான தருணமொன்றில்
அதன் சுதந்திரத்தின் சிறகுகளை
நான் கத்தரித்துவிட்டதை
அறியாமல் தினம்
தொடர்கிறது மொழியற்ற
உரையாடல்.
[இவ்வார கல்கியில் வெளியான கவிதை]
[வீட்டிற்கு புதிதாய் வந்துள்ள செல்லப்பறவைகள் செம்பருத்தி,செம்பரிதி இருவருக்கும்]
-நிலாரசிகன்.
Labels:
இலக்கியம்,
கவிதை,
கவிதைகள்,
பிரசுரமானவை
Wednesday, September 28, 2011
கொம்பு சிற்றிதழ் கவிதைகள்
1.தரு
எதிரெதிர் திசைகளில் பறக்கும் பறவைகளின்
எச்சத்திலிருந்து முளைத்த தரு
கிழக்கிலொரு கிளையும்
... மேற்கிலொரு கிளையுமாக விரிந்து நிற்கிறது.
திசைகளில் தொலைந்த பறவைகளை
வேர்களின் பயணத்தில் கண்டுபிடித்திட
முயல்கிறது.
முடிவற்ற பயணத்தின் தோல்வியில்
காகமொன்றின் நிரந்தர கூடாக மாறி
மெளனித்து காலம் கடத்துகிறது.
இக்கணம்,
என்னை உற்றுநோக்கும்
இச்சிறு பென்சில் எந்த தருவின்
சுட்டுவிரல்?
உயிரற்ற விரல் வழி
தன் சரிதம் சொல்லிக்கொண்டிருக்கிறது
எப்போதோ சரிந்த தரு.
2.நிழல்களுடன் பேசுபவன்
நிழல்களுடன் பேசுபவன்
தன் இடக்கையில்
வண்ணத்துப்பூச்சியொன்றை வரைகிறான்.
ஒவ்வொரு நிழலுடன்
பேசும்பொழுது அது சிறகடித்துக்கொள்கிறது.
உக்கிர வெப்பம் பாதங்களின் வழியே
அவனுள்ளேறும்போது
சிறகை உதிர்த்துக்கொள்கிறது.
கல்லறை நிழலில்
அவன் உறங்கும் தருணங்களில்
தன் வர்ணங்களை கறுப்பு வெள்ளையாக
மாற்றிக்கொண்டு ஊமையாகிறது.
யாருமற்ற வெளியொன்றில்
ஒரு தவறை
தன் நிழலுடன் அவன் துவங்குகையில்
நீங்கிச் செல்கிறது நிரந்தரமாய்.
-நிலாரசிகன்.
Labels:
இலக்கியம்,
கவிதை,
கவிதைகள்,
பிரசுரமானவை
Sunday, September 25, 2011
கவிதைகள் இரண்டு
1.மினி ப் பெண்
இருள் ஒரு யுவதியின் கண்களை
நினைவூட்டியது.
அடர்ந்த புதர்களின் நடுவே வீசியெறியப்பட்ட
அவளது உடலும் விழியைப் போலவே
திறந்திருந்தது.
செந்நாய்கள் உடலை இழுத்துச்செல்ல
முயலும் கணத்தில் அவள் ரெப்பைகள்
மூடிக்கொண்டன.
பல்லிருங்கூந்தல் இந்த இரவாக
அறுபடுகிறது
கண்களை அவள் மூடிய கணத்தில்
உக்கிரமான மழை.
செந்நாய்கள் சிதறி ஓடியதும்
அவள் நேத்திரங்களில் வந்தமர்ந்தன
இருள் மின்மினிகள்.
இப்போது
இசையில் எரியும் மூங்கில் நிழல்களோடு
மிதந்து அலைகிறாளவள்.
2.மழைவழிப்பயணம்
அவர்கள் மழைப்பாதையில் பயணித்து
இங்கே வந்திருக்கிறார்கள்.
மொத்தம் மூன்று பேர்.
சிறுமி,
நாய்க்குட்டி,
சிறுமியின் குடுவை மீன்.
ஏழாம் நூற்றாண்டை சேர்ந்தவர்கள்
நாங்கள் என்கிறாள் அச்சிறுமி.
மழை வழியே இந்த நூற்றாண்டிற்குள்
எதற்காக இவ்வருகை என்பதை
அறியும் முன் சிறுமியும் நாய்க்குட்டியும்
அடுத்த நூற்றாண்டிற்குள் நுழைந்துவிட்டார்கள்.
அழுக்கற்ற அன்பைத் தேடி இப்பயணம்
என்றது குடுவை மீன்.
முடிவற்ற பயணமிது என்றபடி தவறவிட்டேன்
குடுவையை.
-நிலாரசிகன்.
இருள் ஒரு யுவதியின் கண்களை
நினைவூட்டியது.
அடர்ந்த புதர்களின் நடுவே வீசியெறியப்பட்ட
அவளது உடலும் விழியைப் போலவே
திறந்திருந்தது.
செந்நாய்கள் உடலை இழுத்துச்செல்ல
முயலும் கணத்தில் அவள் ரெப்பைகள்
மூடிக்கொண்டன.
பல்லிருங்கூந்தல் இந்த இரவாக
அறுபடுகிறது
கண்களை அவள் மூடிய கணத்தில்
உக்கிரமான மழை.
செந்நாய்கள் சிதறி ஓடியதும்
அவள் நேத்திரங்களில் வந்தமர்ந்தன
இருள் மின்மினிகள்.
இப்போது
இசையில் எரியும் மூங்கில் நிழல்களோடு
மிதந்து அலைகிறாளவள்.
2.மழைவழிப்பயணம்
அவர்கள் மழைப்பாதையில் பயணித்து
இங்கே வந்திருக்கிறார்கள்.
மொத்தம் மூன்று பேர்.
சிறுமி,
நாய்க்குட்டி,
சிறுமியின் குடுவை மீன்.
ஏழாம் நூற்றாண்டை சேர்ந்தவர்கள்
நாங்கள் என்கிறாள் அச்சிறுமி.
மழை வழியே இந்த நூற்றாண்டிற்குள்
எதற்காக இவ்வருகை என்பதை
அறியும் முன் சிறுமியும் நாய்க்குட்டியும்
அடுத்த நூற்றாண்டிற்குள் நுழைந்துவிட்டார்கள்.
அழுக்கற்ற அன்பைத் தேடி இப்பயணம்
என்றது குடுவை மீன்.
முடிவற்ற பயணமிது என்றபடி தவறவிட்டேன்
குடுவையை.
-நிலாரசிகன்.
Labels:
இலக்கியம்,
கவிதை,
கவிதைகள்,
பிரசுரமானவை
Thursday, September 22, 2011
361 - இரண்டாவது இதழ்
நண்பர்களுக்கு,
361 டிகிரி இரண்டாவது இதழ் இன்று வெளியானது. சென்னையில் டிஸ்கவரி புக் பேலஸிலும்,நியு புக்லேண்ட்ஸ் கடையிலும் கிடைக்கும். சேலத்தில் பாலம் புத்தக கடையில் நாளையிலிருந்து கிடைக்கும். இதழில் பங்கெடுத்த படைப்பாளிகளுக்கும் சந்தாதாரர்களுக்கும் இதழ் அனுப்பப்பட்டு வருகிறது. இதழ் வேண்டுவோர் கீழ் கண்ட வங்கி கணக்கிற்கு பணவிடை/காசோலை/online transfer செய்துவிட்டு 361degreelittlemagazine@gmail.
ஆண்டுச் சந்தா: ரூ.200
Name S.V.P.Rajesh
Account Num: 05001610013962
Bank Name HDFC BANK
City CHENNAI
Branch Location KOTTIVAKKAM, CHENNAI
MICR Code 600240020
IFSC Code HDFC0000500
Account Type Savings
மூன்றாம் இதழுக்கான படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. டிசம்பரில் அடுத்த இதழ் வெளிவரும்.
நண்பர்களின் தொடர்ந்த ஆதரவும்,நட்புமே நாங்கள் செயல்படுவதற்கான காரணிகள்.
நன்றி.
Monday, September 05, 2011
குறி சிற்றிதழ் கவிதைகள்
1.விசித்திரி
நதியின் மேல் விழுகின்ற
மழைத்துளிகள் பருகி வளர்ந்த
அச்செடி
தன் விசித்திர பெயரின் அர்த்தங்களை
யாரிடமும் பகிர்ந்துகொள்ளவில்லை.
நதியில் நீராடும் பேரானந்த கணங்களிலும்
தன் மேல் வந்தமரும் நீர்ப்பறவைகளுடனான
உரையாடலின்போதும் புதிர் நிரம்பிய
பெயரின் காரணத்தை மறைத்துக்கொண்டது.
அனல் நிறைந்த கடுங்கோடையொன்றில்
மீன்களின் பசிக்கு உணவாகியபோது
அதன் விசித்திர பெயரும் உணவுடன்
கலந்து கரைந்தது.
நதிக்கரையில் ஒதுங்கிய மீன்களை
பொறுக்கி சென்றவள்
மறுநாளின் அதிகாலையில்
தன் பெயர் விசித்திரி என்றாள்
உடலெங்கும் வளர்ந்த புதர்ச்செடியுடன்.
2.மழையில் நனையும் வயலின்
சொட்ட சொட்ட நனைந்தபடி
இசையால் ஓவியங்கள்
வரைந்துகொண்டிருந்தான் அவன்.
இசைக்கம்பிகளில் நகர்ந்து வரும்
துளியொன்றை அசைவின்றி
பார்க்கிறாள் யுவதியொருத்தி.
மெல்ல அருகில் வருமவள்
தன் சிறுவிரல் நகத்தில் வயலின் சிந்தும்
துளியை பெற்றுக்கொள்கிறாள்.
கண்கள் திறந்தவனின் முன்பு
துளியுடன் நிற்கிறாள்.
மீண்டும் இசைக்கிறான்
வயலினாக அவளும் துளியாக
அவனும் பிணைந்து இசையாகிறார்கள்.
பழுதடைந்த அந்த வயோதிக வயலின்
யாருமின்றி இசைத்துக்கொண்டே இருக்கிறது
இதைப்போன்று ஆயிரம் கதைகளை.
-நிலாரசிகன்
[இம்மாத குறி சிற்றிதழில் வெளியான கவிதைகள்]
Labels:
இலக்கியம்,
கவிதை,
கவிதைகள்,
பிரசுரமானவை
Subscribe to:
Posts (Atom)





