Monday, August 20, 2012

உலர்முத்தப் பயணம்

ஒரு உலர்ந்த முத்தம் 
சருகொன்றின் கீழே 
தெருவோர கற்களிடையே
மிக அமைதியாக கிடந்தது.
உடலெங்கும் புழுதி படர்ந்த முத்தம்
தன் ஈர நினைவுகளை நினைத்தபடி
மெல்ல எழுந்து தளர்நடை நடந்தது.
சற்று தொலைவில்
சன்னமாய் ஒலித்துக்கொண்டிருந்த 
அழுகைச்சத்தம் கேட்டு அருகே சென்றது.
உதிர்ந்த கனவொன்று மடியில் முகம்புதைத்து
அழுதுகொண்டிருந்தது.
உதிர்ந்த கனவின் அருகில் சென்று
அதன் தலை கோதி தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டது.
யாருமற்ற தெருவில்
கனவும் முத்தமும் 
நடக்க துவங்கினார்கள்
விரிகின்ற நீள்மெளனத்தினூடாக.

-நிலாரசிகன்.