Sunday, May 12, 2013

விமர்சனம் - தமிழச்சி தங்கபாண்டியன்



புனைவின் நிசியில் மிதக்குமொரு அறை
தமிழச்சி தங்கப்பாண்டியன்.
"கவிஞன் ஒரு குட்டிக் கடவுள் அல்லர் - சாதாரண மக்களின் ஒரு பகுதியாகக் கவிஞன் இருப்பதன் மூலம் மட்டுமே ஒவ்வொரு சகாப்தத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்த தன்மகோன்னத நிலையை மீண்டும் கவிதைக்குத் தர இயலும்.
சமகாலத்தில் தன்னுடன் வாழும் மக்களின் மிகவும் மறக்கப்பட்டமிகவும் சுரண்டப்பட்டவர்களுக்குத் தன்னைப் புரிய வைப்பதற்கு இயலவில்லை என்றால்அந்த இயலாமையே ஒருகவிஞனின் எதிரிஇது எல்லாக் காலங்களுக்கும் எல்லா நாடுகளுக்கும் பொருந்தும்"
பாப்லோ நெரூடா.
கருத்தாக்கங்களை முன்வைத்துக் கவிதைகளைப் படைக்க முடியாது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மையானது கருத்தாக்கங்களை முன்வைத்து ஒரு கவிதைப் பிரதியைஅணுகக் கூடாது என்பதுவும்விருப்புவெறுப்புபாரபட்சமற்று ஒரு கவிதைப் பிரதியை அணுகுதல் பெருஞ் சுகம்தன் இருப்பை மொழிவழி உயிர்ப்பித்துக் கொள்ளும் ஒரு கவி மனதைக்கல்மிஷங்கள்முன்முடிவுகள்எடைக்கற்கள்தராசு முட்களற்று அணுகுதலே ஒரு கவிதைப் பிரதிக்கு அளிக்கப்படுகின்ற குறைந்தபட்ச நேர்மையான அரவணைப்பும்அதிகபட்ச மா¢யாதையும்.அதன் பின் அவரவர் வானமும்உள்ளங்கையும்அவரவர்க்கு!
                "தப்பிப் பிழைத்திருப்பவனான நான்எனும் கவிதையில் ப்ரக்ட்,
                                "எனக்குத் தெரியும் வாஸ்தவமாக : அது வெறும் அதிர்ஷ்டம் தான்
                                அத்தனை நண்பர்களுக்குப் பிறகும் நான் தப்பிப் பிழைத்திருப்பது.
                                ஆனால் நேற்றிரவு ஒரு கனவில்
                                அந்த நண்பர்கள் என்னைப் பற்றி
                                இப்படிக் கூறுதைக் கேட்டேன்:
                                'தகுதியானதே தப்பித்திருக்கிறது'
                                மேலும் என்னையே வெறுத்தேன் நான்".
வெறுக்கின்ற 'தகுதியிலிருந்துதப்பித்து இருத்தலே ஒரு கவிதைத் தொகுப்பிற்கான சரியான தகுதியென நான் நம்புகிறேன்அவ்வகையில் நிலாரசிகனின்மீன்கள் துள்ளும் நிசி எனக்குசமுத்திரத்தின் உப்பையும்ஈரத்தையும்வியப்பையும் காட்டிய மீன்நிசப்தமும்காதலும்காமமும்துரோகமும்பசியும்கயமையும் கலந்த நிசியைக் காட்டிய நட்சத்திரம்மெளனத்தின்நாவுகளையும்கொண்டாட்டத்தின் நடனத்தையும் உணர்த்திய உயிர் ததும்புமொரு இசைக்கருவி.
                சிறுமிநாய்க்குட்டிவண்ணத்துப் பூச்சிமீன்கள்கடல்நதிதவளைகாற்றுஇறகுபூனைமான்குட்டிசர்ப்பக்குட்டிகள்முத்தம்பொம்மைதட்டான்பறவைக் கூட்டங்கள்அணில்குட்டிஇவர்களோடு ஜூலியுமிருக்கின்ற நிலாரசிகனின் உலகத்திற்குள் நானும் பிரவேசிக்கின்றேன் - நகுலனின்,
                "பூப்பிலிருந்து
                பென்ஸிலின் பிறந்தது
                பிரகிருதி வலை பின்னுகின்றது"
எனும் வா¢கள் பின் தொடர !
                ஒரு கவிமனதைத் தொடர்கின்றஉணர்கின்றஉறைகின்றஉயிர்க்கின்றபகிர்கின்ற கோழியிறகாய் மெல்லப் புரண்டு,இதில் சமயத்தில் களிக்கிறேன் - சமயங்களில் அழுகிறேன்.உலகத்திற்கும் எனக்குமுள்ள தொடர்பின் ஒரு சிறு நாணைச் சுண்டுகிற ஒரு வரிபோதும் எனக்கு - மேதமை அவசியமில்லைஇருந்தாலும் புதுமைப்பித்தன், "கவிதையின் மேதமையை அறிய ஒருவரி போதும்ஒழுக்கமோதர்மமோ அல்லது மோட்சமோ இவற்றிற்காக எழுதப்படும் கவிதைகவிதையாகாதுஎன்பது போல,
                இத்தொகுப்பில் எனக்குப் பல தெறிப்புக்கள் - ஆன்மாவின் நாணைச் சுண்டியிழுத்தன.
                "ஒவ்வொரு சித்திரங்களின் வழியே
                தன் அழகின்மையைக் கடந்து செல்கிறாள்"
                                                (முகமற்றவனின் சித்திரம்)
                "சிறு சிறு முத்தங்கள் வளர்ந்து
                நீண்டதொரு முத்தமாக உருப்பெற்றபோது
                நாம் முத்தமாகியிருந்தோம்"
                                                (இசைதல்)
                "ஊமை படிகளின் முதுகில்
                மெல்ல இறங்குகிறது மழை"
                                                (மேனியிசை)
                "அழுக்கற்ற அன்பைத் தேடி இப்பயணம்
                என்றது குடுவை மீன்"
                                                (மழைவழிப் பயணம்)
                "கவிதையின் ஒவ்வொரு சொல்லின்
                அடியிலும் மீன்கள் மறைந்திருந்தன
                ஒரு சொல்லுக்கும் மறுசொல்லுக்கும்
                இடையே கடல் அலையின்றிக் கிடந்தது"
                                                (மீன்கள் துள்ளும் நிசி)
                "முதுமைக்கும் பால்யத்திற்குமிடையே
                கதையாய் வி¡¢ந்திருக்கிறது
                இந்த இரவு"
                                                (கதை சொல்லி)
                "கடலுக்கு மரணிக்காத மீனொன்று
                காகமொன்றின் அலகில் துடிதுடித்தது"
                                                (முத்த வடிவினள்)
                "பொம்மையாதலின் வழிமுறைகள்
                அறியாமல் விழித்தபடி நின்றனர் கடவுள்கள்"
                                                (பொம்மையாதல்)
                ....
                அப்போது தான் கவனித்தேன்
                வெயிலின் பின்புறத்தை
                நிழலின் முன்புறத்திலிருந்து
                                                (வெயிலான்)
                மேற்சொன்னவை சில சோறு பதம்ஆயின்இவை மட்டுமே ஒரு அனுபவத்தின் கிளர்வைபொதுத்துவமானதொரு உணர்வு கடத்தலை மொழியின் வழி நிகழ்த்திவிட முடியுமாவெறும்தெறிப்புக்களின் பாய்மரத்தில் படகோட்டுபவன் கவிஞன் அல்லவே - அவன் ஆழ முக்குளிப்பவன் - தான் தேர்ந்தவற்றை வாசகனுக்கும்சக மனிதனுக்கும் கைநிறைய அள்ளித் தருவதில்வாழ்பவனும்மரணிப்பவனும் அல்லவா?
                மேலும்ஒரு கவிமனதின் வெளிப்பாடு என்பது - மொழியின் மூலம் - அதன் நேர்த்தியான அழகியல்நடைஉத்திகள் - இவற்றையெல்லாம் மீறி பிரச்சாரமின்றி வெளிப்படுத்துகின்றஅரசியல்சகமனிதனுக்கான குரல்சகபாலினத்தின் மீதான நேர்மையான பார்வைகரிசனம்தன் வேரும்மண்ணும் உலகமயமாதல்வாழ்தலும் பிழைத்தலுமான இருமைகள்சுயமறிதல்,ஒப்புக்கொடுத்தல்எனப் பல்வேறு அடுக்குகள் கொண்டதல்லவாஅவ்வகையில், "தமிழ்க் கவிதையென்பது தமிழகத்தைப் பொறுத்தவரை மத்தியதரவர்க்கப் புத்திஜீவிகளின் மெளனவாசிப்பிற்கான அநுபூதியாக மட்டுமேசூக்குமத்தின் சூட்சுமமாக மட்டுமே சுருங்கிக் கிடப்பதில் எமக்குச் சம்மதமில்லைஎனும் வே.முபொதியவெற்பனின் குரல் எனக்கு மிக முக்கியமானது.அதனை அடியொற்றிப் பார்க்கையில்நிலாரசிகனின் கவி உலகும்அது முன்வைக்கின்ற அனுபவங்களும் மிக முக்கியமானவைநேர்மையானவை.
                பல நூற்றாண்டுகளாகத் தொடர்கின்றதொரு பயணத்தைச் சென்ற நூற்றாண்டின் நிழற் பார்வையுடனும்இந்த நூற்றாண்டின் நம்பகமில்லாத்தன்மையுடனும் பார்த்துக் கொண்டேஅடுத்தநூற்றாண்டிற்குள் அவனது அனுமதியின்றி தள்ளப்படுகின்ற ஒரு எளிய மனிதனின் குரல் தான் இத் தொகுப்பின் தொனிதன் புலன் உணர்வுகள் உணர்ந்தும்உய்த்தும்சேர்த்தவற்றை சொல்லும்,அகம் அரற்றுமொரு கூர்மையான கேவலும்நடைமுறை நிசர்சனத்தை ஒரு சிறிய அவதானிப்புடன் கையறு நிலையில் கடந்து செல்லும் அவலமும் தான் இக்கவிதைகளின் அடையாளம்சகபாலினமான பெண்ணைக் காதலுடனும்பு¡¢தலுடனும்காத்திருப்புடனும்பார்க்கின்ற பார்வையும்வனத்தைபொம்மைகளைகடவுள்களைத் தொலைத்தபிளாஸ்டிக் பைகளில் கட்டிகுப்பைகளில் அன்பைக் கொட்டும் நகரத்தைச் சுட்டும் வலியே இவற்றின் மெளனக் குறிப்புக்கள்
                நிலாரசிகனது மொழிஉரை நடைக்கும்வசனத்திற்குமான இடைப்பட்ட ஒன்றுகொஞ்சம் தட்டையானது தான் - ஆனால் இக்குறையைத் தட்டிச் சீர்படுத்தி விடுகின்ற ஒரு சித்திரவிவரித்தலுக்கரியது அவரது லாவகம்கவிதைக்கு அழகியலை விட உயிர்த் தன்மையே முக்கியமென்கின்ற நவீன மனதின் கருதுகோளின் படி நிலாரசிகனது பல கவிதைகள் என்னை முற்றாகக்கவர்ந்தவை என்றாலும் கீழ்க் குறிப்பிட்ட 'முதல்துளிஎனக்குத் தந்த அனுபவம் ஒரு மிகச் சிறந்த தரிசனம் - a vision indeed. இதுவே நிலாரசிகனை இன்றைய நவீனக் கவிதைப் பரப்பில் மிகமுக்கியமானதொரு ஆளுமையாக நிலை நிறுத்துகின்றது.

முதல் துளி
                சைக்களின் முன் இருக்கையிலிருந்து
                கடந்து செல்லும் மரங்களிடம் பேசியபடி
                வருகிறாள் சிறுமி.
                மரங்களின் மொழியை அவளுடன்
                பயணிக்கும் தட்டான்களுக்குக் கற்றுத் தருகின்றாள்.
                அவளிடம் கற்ற மொழியுடன்
                மரத்தின் இலையில் அமர்கின்ற
                தட்டான்களின் சிறகில் ஒளிர்ந்து
                நகரும் வெயில் மரமொழியை
                கற்றுக் கொண்டு மறைந்து போகிறது.
                கொதிக்கும் பாலையின் வெயிலுக்குள்ளிருந்து
                முளைக்கும் மரக்கன்று
                சிறுமியின் மொழியில் தலையசைத்து
                தலையசைத்துப் பேசத் துவங்குகிறது
                பாலையின் முதல் துளியிடம்.
                அற்புதமானதொரு அனுபவத்தையும் அதன் தொடர்பான விழிப்புணர்வுமிகிழ்வுநம்பிக்கை - முதலியவற்றையும் எனக்களித்த கவிதை இதுமனிதனுக்கும்இயற்கைக்கும் உள்ளஉறவைஅதன் பிரபஞ்சப் பிணைப்பைதன் நிலத்தில் காலூன்றி நின்று உலகம் முழுமைக்குமான உண்மை ஒன்றைக் கடத்தும் கண்ணியான கவிதையாய் மிகச் சிறந்த பதிவு இது!
                "கவிதையின் தன்மை என்ன என்பதையும்கவிதையின் செயற்பங்கு என்ன என்பதையும்பிரஸ்தாபிக்காமல்கவிதையின் அழகியல் குறித்த 'எந்த விவாதமும்கடந்து செல்ல முடியாது"என்கின்ற பிரம்மராஜன், "கவிதை பு¡¢யப்படும் விதம்கவிதையின் மொழிகவிதை வாசக மனதிற்குள் இயங்கும் விதம்அர்த்தச் சாத்யப்பாடுகள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொண்டால்தான்அக்கருத்துத் தொகுதிகள் நவீன கவிதையின் அழகியலாக ஆகும் தகுதி வாய்ந்தவையாவது சாத்யம்என்றும் சுட்டுகின்றார்.
                மேற்சொன்ன நான்கு "touchstone method" (to borrow from T.S. Eliot) இன் படிநிலாரசிகனின் கவிதைகளை வரையறுக்கையில்ஒரு வாசகனை அவரது தட்டையான வாக்கிய அமைப்புக்களின்முற்றுகள் அயர்ச்சியுறச் செய்தாலும்,
உதாரணம் :
                [இருக்கிறாள் / செல்கிறாள் / பார்க்கிறாள்
                நீந்துகிறோம் / கையசைக்கின்றன / செல்கிறார்கள்
                தொடர்கிறோம் / பார்க்கின்றன
                ஏற்படுத்தியிருந்தது / பொறிக்கப்பட்டிருந்தது
                தயார்படுத்துகிறேன் / ஓடுகிறேன்]
அவன் அதனுள் நுழையத் தடையற்று அவனை ஈர்ப்பது கவிஞனின் “என்ன சகா!” எனும் சமநிலைப்படுத்துதலும்தோழமையும்தான்.
உள்ளூறப் பிணைக்கின்ற அனுபவமெனும் சூட்சுமத்தின் கயிற்றை இந்த கவிக்காரகன் சமத்காரமாக அறிந்திருக்கிறான்தானறியாததொரு கழைக் கூத்தாடியின் கலை நேர்த்தியோடுமனச்சித்திரங்களாக அவை வரையப்படுவதே இவனது கவிதைகள் புரியப்படும் விதம்உருவகங்களும்குறிப்பான்களும்படிமங்களும் ஊடுபாவும் புனைவின் திரிசங்கு நிலமே இவனது மொழி.
                   மெதுவாக அருகமர்ந்து தோள் தொடுகிறதே என்று திரும்பினால் திடீரென்று அந்தரத்திலும்குபீரென்று அடி ஆழத்திலும் தள்ளுகின்ற உணர்வு நிலையைக் கிளறுவதே இக்கவிதைகள்இயங்குகின்ற விதம்சிந்தனையும்உணர்வும் சரிசமமான நேர்த்தியுடன் புணர்கின்ற இவரது கவிதைகளின் அர்த்தச் சாத்தியப்பாடுகள் அவரவர் மனவெளிபுரிதல் பாற்பட்டது என்றாலும்எனக்குஇவை - தத்துவங்களின் அதிகாரமற்றுஅடிப்படையானதொரு நேயத்தைபுகார்களற்று வாழ்தலுக்கான தேடலைகுறைந்தபட்ச இருத்தலுக்கானதொரு கைப்பிடிப்பைக் கோருகின்ற சாத்தியங்கள்உடையவைஆகவே வாசகனுக்கு மிக முக்கியமானவை - எனக்கு நெருக்கமானவை.
                "நெருடாவின் சமயமாகத் தெருக்களே திகழ்ந்ததென்றுஅவர் குறித்த நினைவஞ்சலிக் கட்டுரை ஒன்று குறிப்பிடுகிறதுமக்களின் கவிஞனான நெரூடா, "புத்தகங்களுக்கு அந்தந்த சிந்தனைப்போக்குகள் என அடையாள முத்திரைகள் இடப்படுவதை நான் ரசிப்பதில்லைஎந்தச் சிந்தனைப் போக்குகளையும் வகைப்பாடுகளையும் சாராத புத்தகங்கள் வாழ்க்கையைப் போலவே எனக்குவேண்டும்என்பார்நிலாரசிகனது கவிதைகளும் எந்தவித அடையாள முத்திரைகளுககுள்ளும் சிக்காதவைவாழ்க்கையைப் புனைவின் தூ¡¢கை கொண்டு வரைந்தாலும்இரத்தத்தின் வண்ணமும்,நிணத்தின் மணமும் கொண்டவைகொஞ்சம் குறியீடுகள்உருவகங்களின் மேலேறும் 'பாண்டி விளையாட்டைநாம் அறிந்து கொண்டோம் என்றால்அவற்றின் ஆகாய நீலமும்,  அடர் வனத்தின்பச்சயமும்பள்ளத்தாக்கின் மெளனமும்பெருங்கடலின் வசீகரமும் நமக்கு வசப்படலாம்.
                கவிஞனது சமூகச் சுயமும்தன் சுயமும் இடைவெளியின்றி ஒன்றிப் போகின்ற கவி ஆளுமை சாத்தியப் படுமா என்கிற கேள்வி எப்போதும் என்னை ஈர்க்கின்றதொரு மாயக்கண்ணாடி.சமகாலத்தில் நவீனக் கலை பரப்பில் பயணிக்கின்ற பெரும்பான்மையினர் எத்தகைய நெருக்கடிக்கு ஆளாகின்றனர் என்பதனை 'கலை ஓர் அனுபவம்என்ற நூலில் ஜான் டியூவி,
                "தொழில் இயந்திர மயமாக்கப்பட்டுள்ளதுஆனால் ஒரு கலைஞன் இயந்திரத்தன்மையுடன் பெருவா¡¢ உற்பத்தி செய்யும் வேலையைச் செய்ய முடியாது... தங்கள் படைப்பைத்தங்களைத்தனித்துவப்படுத்திக் காட்டும் 'சுய வெளிப்பாடாகக்கையாளுவதைத் தங்கள் மீது சுமத்தப்பட்ட கடமையாகக் கலைஞர்கள் காண்கிறார்கள் / கொண்டுள்ளனர்பொருளாதாரச் சக்திகளின்போக்கிற்கேற்ப வளைந்து கொடுக்காமல் இருப்பதற்காகக் கோட்டித்தனம் செய்தாவது தங்கள் தனித்தன்மையை மிகைப்படுத்திக்காட்டும் எண்ணம் அவர்களுக்குக் கட்டாயமாக ஏற்படுகின்றது"என்கிறார்.
                கவிதை வெளிக்கும் இது பொருந்தும் - தனித்தன்மையை நிரூபிக்கின்ற கோட்டித்தனம்அஷ்டாவாதானம்சிரசாசனம்கோட்பாடுபிராணாயாமம் இவை எதுவுமின்றி இயல்பாகக் கால்நீட்டிகொஞ்சம் வெள்ளந்தியான புனைவின் அணைப்பில் வாசகனோடு உறவு கொள்கின்றன நிலாரசிகனது கவிதைகள்தன்னைக் கொஞ்சம் பிட்டுக் கொடுத்துப்பகிர்ந்து கொண்டு,வாசகனிடமிருந்து பகிர்தலைத் தவிர வேறெதனையும் கோராத பொக்கை வாய்ச் சிரிப்புடன் நம்மை எதிர் கொள்கின்ற இந்த மீன்கள் துள்ளும் நிசி - தூண்டில்கள் வேண்டாதததுஉள்ளங்கையளவுஉப்பு நீர் கேட்கும் அதற்கு நம் ஒரு சொட்டுக் கண்ணீரோ அல்லது சிட்டிகை புன்னகையோ போதும்!
                "கவிதை என்பது வார்த்தைகளிலான அமைப்பா என்ன?" -
"இல்லைஎன்பதை எனக்கு மீண்டுமொரு முறை உணர்த்திய நிலாரசிகனது இந்தப் படைப்பு பகிரப் பட வேண்டியது - பேசப்படவேண்டியதுவாழ்தலின் வெளிப்பாடுகளான இவை சின்னஞ்சிறு அகல்போல் ஒளிர்பவை - தீப்பிழம்புகளிலிருந்து தனித்துத் தொ¢பவை.
ஆம் -
                "சாம்ராஜ்யங்களிலிருந்து வெகு தொலைவாய்
                எத்தனை ஸ்திரமாக நிற்கிறது அறை!”
                நிலாரசிகனது மீன்களுடனும்நமது கடலுடனும்
                புனைவின் நிசியில்,
                எத்தனை ஸ்திரமாக நிற்கிறது இந்த அறை!

நன்றி: உயிர் எழுத்து - மே'13