Tuesday, July 28, 2009

ஒரு மெளனம் ஒரு மரணம்



பெயரிடப்படாத மெளனத்தின்
எல்லையில் அந்தக்
கண்கள் நிலைத்திருந்தன.
அடர்குளிரில் நடுங்கும்
ஊமைக்குருவிகளின் மொழி
அந்த விழிகளுக்கு மட்டுமே
புரிவதாய் இருந்தது.
யாருமற்ற
மூன்றாம் ஜாமத்தில்
அவ்விழிகள் சடலமாக மாறியிருந்தபோது
நிறமிழந்த
ஓராயிரம் சொற்கள்
நீண்ட வரிசையில் அதனை
மொய்க்கத்துவங்கின.
மெளனத்தின் மரணமும்
அநாதையாய் வீதியில் கிடந்தது.

Friday, July 24, 2009

இரண்டாம் இயேசு



சிலுவைகள் சுமந்து திரிந்தவன்
தன்னை இரண்டாம் இயேசு என்றபோது
நீங்கள் கைதட்டி வரவேற்றீர்கள்.
நீண்ட தாடியும் காவி நிற பற்களுமாய்
அவன் அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தான்.
அவனது பலவர்ண சிலுவைகளில் கவரப்பட்ட
குழந்தைகள் பலூன்விற்பவனை தொடர்வதுபோல்
பின் தொடர்ந்து சென்றனர்.
பசும்பாலும் நெய்யும் அவனுக்களித்து
மகிழ்ந்தார்கள் உங்கள் இல்லத்தரசிகள்.
எல்லோருக்கும் சொர்க்கத்தில் இடமிருக்கிறது
என்றபடி சிரித்தான் அவன்.
உடன்சேர்ந்து கோணல் உதடுகளுடன்
அப்போதும் கைதட்டி சிரித்தீர்கள் நீங்கள்.

Wednesday, July 22, 2009

குற்றாலம் போயிருந்தேன்

15 வருடங்கள் கழித்து இன்றுதான் குற்றாலம் போக வாய்ப்பு கிடைத்தது.
அங்கே க்ளிக்கிய படங்கள்:

ஐந்தருவி(கூட்டத்தில் நானும் ஒருவன் :)



மெயின் அருவி:-



மசாஜ் மன்னர்கள்:-



காவலர்!!!



படகுக்குழாம்:-



குரங்கார் :)

Monday, July 20, 2009

நாடோடிகள் - சில பகிர்வுகள்



வெகு நாட்களுக்கு பிறகு தூத்துக்குடியில் உள்ள திரையரங்கில் படம் பார்க்க சென்றிருந்தேன். கூட்டம்
நிரம்பி வழிந்தது. படம் ஆரம்பித்து ஒவ்வொரு காட்சிக்கும் விசில் பறந்தது. இவ்வளவு ஆரவாரமும்
உற்சாகமும் படம்பார்ப்பவர்களிடம் தொற்றிக்கொண்ட காரணம் என்ன என்று எண்ணியபோது கிடைத்த விடைகள் இரண்டு.
ஒன்று நட்பு. மற்றொன்று சுப்பிரமணியபுரத்தின் வெற்றிநாயகன் சசிக்குமார். சசிக்குமார் தோன்றும் காட்சிகளிலும் நட்பை
பற்றி அவர் பேசும் வசனங்களின்போதும் தியேட்டர் அதிர்கிறது.

காதலால் நட்பிற்கு ஏற்படும் வலியையும்,இதுவரை தமிழ் சினிமாவில் காட்டப்படாத பக்கங்களையும் திரையில்
செதுக்கியதற்காகவே இயக்குனரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

வெயில்,பருத்திவீரன்,சுப்பிரமணியபுரம்,பூ,பசங்க வரிசையில் நாடோடிகளும் தனித்து நிற்கும் ஒரு திரைப்படம்.
வெகு இயல்பான யதார்த்த நடிப்பில் அசத்தி இருக்கிறார்கள் ஒவ்வொரு நடிகர்களும்.
எப்பொழுதும் எதையாவது தின்று கொண்டே இருக்கும் கதாநாயகி,டிசர்ட்டும் தாவணியும் அணிந்தலையும்
கதாநாயகனின் தங்கை,மகனின் காதலுக்கு உதவும் அப்பா,நான்கைந்து கைத்தடிகளுடன் சுற்றித்திரியும் உள்ளூர்
மைனர்,அரசாங்க வேலை மேல் உயிரையே வைத்திருக்கும் கதாநாயகியின் அப்பா,உள்ளாடையை அசால்டாக
தலையில் கவிழ்த்துக்கொண்டு பிச்சு உதறி இருக்கும் 'பாண்டி', சித்தி முன்பு அடித்துவிட்டு அவர் சென்ற பின் கலங்கி துடிக்கும் பாண்டியின் அப்பா, காதலுக்கு மிக முக்கிய உதவி செய்யும் "பைக்" நண்பனின் மெளனம்(ஒரு வார்த்தைகூட பேசாமல் எப்போதும் சுயீங்கம் மென்று கொண்டிருப்பார்),கதாநாயகனின் பாட்டி,படத்தின் முக்கிய காட்சிகளில் ஒலிக்கும் 'சிவசம்போ' இப்படி படம் முழுவதும் நிறைகளையே தாங்கி நகர்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ஏதேனும் ஒருவகையில் மனதோடு நெருக்கமாகிவிடுகிறார்கள்.

முதல் பாதியில் வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் நாடோடிகள் இடைவேளைக்கு பிறகு மனதை பிழிந்துவிடுகிறார்கள். கதாநாயகியை பிரியும் தருணத்தில் அவர் அப்பாவிடம் "உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு மாமா" என்று சொல்லும்போதும்
"நீ வலிச்சாலும் வலிக்கலன்னுதாண்டா சொல்வ" என்று பாண்டி சொல்லும் காட்சியிலும் கலங்க வைத்துவிடுகிறார் சசி.

கிளைமாக்ஸில் "தமிழ்சினிமா"வாகி விடுவார்களோ என்கிற பயத்தை அடித்து நொறுக்கி ஒரு புன்முறுவலோடு நம்மை
வழி அனுப்புகிறார்கள்.

நாடோடிகள் - ஒவ்வொரு நண்பனும் பார்க்கவேண்டிய திரைக்காவியம் - சமுத்திரக்கனிக்கும் அவர் குழுவிற்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகளும்,நன்றிகளும்.

Tuesday, July 14, 2009

சாத்தான் குழந்தையின் ஊமைக்குரல்



என் நோக்கி எப்போதும் நீண்டிருக்கிறது
குற்றங்களை சுமத்தும்
உன் விரல்.
நீயோ
தியாகம் செய்ய மட்டுமே
பிறப்பெடுத்த ஜீவன்.
நான் அன்பை நிராகரிக்க
மட்டுமே ஜனித்தவன்.
பகிரத்தெரியாத அன்பை
சுயநலத்திமிருடன் சுமந்தலைபவன்.
சாத்தானின் கூடாரத்தில்
கடவுளை தேடி நுழைந்த
தேவதை நீ.
கடவுளின் கூடாரத்தில்
சாத்தானின் மடியில்
துயிலும் உன்னை
வலி மிகுந்த புன்னகையுடன்
கடந்து செல்கிறேன்
நானல்லாத நான்.

Sunday, July 12, 2009

ஆந்தைகள் அலறும் யாமம்




வரைந்து முடித்த ஓவியத்தின்
உள்ளிருந்து சிறகுகள் படபடக்க
வெளியேறியது முதல் ஆந்தை.

உலகின் மிகச்சிறந்த கவிதையின்
கடைசி வரிக்குள்ளிருந்து வினோத
ஒலியெழுப்பியது இரண்டாவது

பதின்ம வயது சிறுவனின்
கனவுக்குள் உக்கிர
தாண்டவமாடிக்கொண்டிருந்தது
மூன்றாவது.

நான்காவது,ஐந்தாவது
ஆறாவது
ஆந்....
என் அலறலில் விழித்துக்கொண்டது
இரவு.

-நிலாரசிகன்.

Saturday, July 11, 2009

7 ½



புல்லாங்குழலுடன் வந்தவனை
புரிந்துகொள்ள இயலவில்லை
உன்னால்.
கர்வத்தின் வெளியில்
புன்னகை தொலைத்து
பறந்துகொண்டிருக்கிறாய்.
மயிலிறகு வாங்க
உன்னிடம் வந்தேன்
நீயோ
என்னை எரிக்க விறகுகள்
விற்றுத் திரிகிறாய்.
யாருமற்ற வனத்தில்
வெகு இயல்பாய் உதிர்ந்துகொண்டிருக்கின்றன
நாம் வளர்த்த
விருட்சத்தின் இலைகள்.
அரவமற்ற இரவில்
இயல்பு தொலைந்து கவிதை
எழுதிக்கொண்டிருக்கிறேன்
நான்.

Thursday, July 09, 2009

எனக்கான தீர்ப்புகள்



நிறைய எழுதவேண்டியதிருக்கிறது
என்னைப் பற்றி.
எதையும் பற்றாமல்
எதைப்பற்றியும் இல்லாமல்
என்னைப் பற்றிக்கொண்டு எழுதியாகவேண்டும்.
எனக்கு மட்டும் தெரிந்த
வலி
கனவு
வாழ்க்கை
கண்ணீர்
கவிதை
நீ
நான்
நாம்
அவர்கள்
அனைத்திற்குமான தீர்ப்புகள்
எழுதியே தீர வேண்டும்.
உச்சரிக்கும் முன்பே
ஊமையாகிப் போன
பேனாவை வைத்துக்கொண்டு
எதை எழுதுவது?

Friday, July 03, 2009

பிரஞ்சுக்காரி,ஓரினச்சேர்க்கை,கடிதங்கள் மற்றும் விகடன்




வாரம் ஒருநாள் கிரிக்கெட் விளையாட இரண்டு மைல் தொலைவில் இருக்கும் மைதானத்திற்கு செல்வது வழக்கம்.அமெரிக்கர்கள் விளையாடும்
பேஸ்பால் மைதானம் அது. இந்திய,பாகிஸ்தானிய நண்பர்கள் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவோம். சில அமெரிக்கர்கள் ஆர்வமுடன் வந்து என்ன விளையாட்டு
இது என்று விசாரிப்பதுண்டு. சிலர் தெரிந்துகொண்டவுடன் எங்களுடன் சேர்ந்து விளையாடவும் செய்வர்.(ஆனால் பவுலிங் மட்டும் பேஸ்பால் பந்தை எறிவதை போல்
எறிவார்வார்கள்)

கடந்த வாரம் விளையாட சென்றபோது ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.விளையாட வரும் நண்பர்களில் ஒருவர் அவரது அலுவலகத் தோழியையும் அழைத்து வந்திருந்தார். ஆர்வமுடன் அவரும் கிரிக்கெட் விளையாடினார்.காட்ச் பிடிக்க அவர் ஓடும்போது 7ஜி ரெயின்போ காலனியில் சோனியா அகர்வால் ஓடுவது போலிருந்தது.
ஒரு பெண் கிரிக்கெட் விளையாடுவதை பார்த்தவுடன் என் கல்லூரி நாட்கள் நினைவுக்கு வந்தது. கல்லூரிகளுக்கு இடையே நடக்கும் போட்டிகளை காண கல்லூரி மாணவிகள் வருவார்கள். அவர்கள் முன் ஹீரோவாக ஆசைப்பட்டு ஒவ்வொருவரும் தன்னை டெண்டுல்கராக நினைத்து வீரமுடனும் வெறியுடனும் விளையாடுவோம். அம்புரோஸ் மாதிரி வேகமாக பவுலிங் போடும் ஆர்வத்தில் கீழே விழுந்து அசடு வழிந்தவர்கள் பலர். ஆனால் ஒருபோதும் பெண்களும் ஆண்களும் கலந்து கிரிக்கெட் விளையாடியதை
பார்த்ததேயில்லை.

விளையாட்டு முடியும் தருணத்தில் " Iam thirsty I need a beer" என்றாள். சிரித்துக்கொண்டோம். விளையாடி முடிந்தபின் புல்வெளியில் ஓய்வாக அமர்ந்து சிறிதுநேரம்
அரட்டை அடிப்பது வழக்கம். அன்றும் அப்படி அமர்ந்தபோது அவளை பற்றி கேட்டோம். தன் பெற்றோர் பிரான்ஸ் தேசத்தை சேர்ந்தவர்களென்றும் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டதாகவும் சொன்னாள். அதன் பிறகு ஒவ்வொருவரிடமும் நீங்கள் திருமணமானவரா என்று கேட்டாள். எல்லோரும் பதிலிட்டபின் நீ திருமணமானவளா என்று அவளிடம் கேட்டோம். "No,But I committed with a woman" என்றாள். இது நடந்தது/நடப்பது இருநூறு வருடங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டு கலாச்சாரம்,பண்பாடு என்று எந்தவொரு கட்டுப்பாடும்,ஒழுங்கான வாழ்க்கைமுறையும் இல்லாத அமெரிக்காவில்.

2000 வருட கலாச்சாரமும்,பண்பாடும் நிறைந்த இந்தியாவில்....தில்லி உயர்நீதி மன்றம் வாழ்க.

******************************************************************




மனதை உலுக்கிய கடிதம் பதிவில் வெளியிடப்பட்ட கடிதத்திற்கு சொந்தமான சகோதரியின் நன்றிக் கடிதம் இது.

//நன்றிகள்
கோடி நிலா..
என்
வாழ்க்கை நன்றாக அமைய என்னை வாழ்த்திய, எனக்காய் பிராத்தித்த அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றி. அவர்களுடன் சேர்ந்து நேற்றுவானமும் என்னை வாழ்த்தியது -தன் பூந்தூரல்களால்.
இருபத்திரண்டு
வருடங்களாக என்னுள்ளே மருங்கிக்கொண்டிருந்த சுமையை முதன்முறையாய் உங்களிடம் இறக்கி வைத்தேன். உங்களுக்கு எழுதியகடிதத்தை நான் தாளில் எழுதி இருந்தால் அது சத்தியமாய் அழிந்துபோயிருக்கும் - என் கண்ணீராலே. அடிக்கடி அதை நினைத்துஅழுதிருந்தாலும் அன்று என் இருபத்திரண்டு வருட சோகத்திர்க்கும் சேர்த்து ஒரே நாளில் அழுது தீர்த்தேன். ஆனாலும் என் மனதில் உள்ளவடு மறையாது.
சிறுவயதில்
நான் யாரிடமும் அதிகம் பேசாததால் எனக்குள்ளே பேசிக்கொள்ள ஆரம்பித்தேன். நான் தனிமையில் இருக்கும்போது எனக்கு துனையாய்இருக்க, நான் சிரித்தால் என்னுடன் சிரிக்க, நான் அழுதால் என்னுடன் அழுக எனக்கென்று நானாகக் கண்ட துனை. அவனை/அவளை என்நண்பன், என் காதலன், என் தெய்வம் எப்படியும் சொல்லலாம். அவன் எனக்குள்ளே இருக்கும் என்னவன். என்னைப்பற்றி முழுதாய்அரிந்தவன் அவன் மட்டுமே. (நான் என்னவன் என்று உங்களிடம் சொன்னது இவனைத்தான்). ஏனோ எனக்கு இதுவரை எவரிடமும்சொல்லத் தோன்றவில்லை. அனைவரும் என்னுடன் சிறுபிராயத்தில் இருந்து வந்தவர்கள். அவர்களிடம் சொல்ல எனது மனதுஒப்பவில்லை. என் பாரம் உங்களால்தான் தீரவேண்டும் என்று விதித்திருந்தது போல. என்னை பகிர்ந்துக்கொள்ள செய்ததற்கே உங்களுக்குஎத்தனை நன்றிகள் சொன்னாலும் தகும்.
நெஞ்சார்ந்த
நன்றிகளுடன்,//

*******************************************************************************************

இதே பதிவை படித்துவிட்டு மற்றொரு பெண் எழுதி இருக்கும் கடிதம் இது:


//Hi ,

I read the latest post "Manathai Ulukkiya Kaditham"...It was so good..It doesn't happen only to her...It happens to most of the girls..I am one among them.May b atleast she had this torture only with 1 person..but in my life it was 3...that too when i was 5 or 6 years old..i still can't come out it..Even now am not ready for any sort of relationship..alteast she was able to say some1 and get her pblm resolved..but am not lucky enuf to tell my problems to any1....I thought am the only person..but there are many girls affected this way...This is the first time even am sharing it with u....

I feel so bad that y all guys are behaving like this...I hate all guys..very slowly am trying to come out of it...Hope i'l succeed one day..they say time heals everything its almost 18-19 years that happened..still time doesn't heal my problem..i am trying to deviate my mind and concentrate on my work..

Hope everything goes fine..i need all ur prayers and ur wishes..


Regards,//

********************************************************************************************


இதுபோன்ற அப்பாவி குழந்தைகளை பாழ்செய்யும் ஆண்களின் குறிகளை வெட்டி எறியும் சட்டம் ஏனில்லை நம் நாட்டில்? மேலை நாடுகளில் குழந்தைகள் மீதான
பாலியல் குற்றம் பற்றி பள்ளியிலேயே பாடங்கள் உண்டு. ஒரு ஆண்/பெண் எந்த நோக்கத்தில் குழந்தையை அணுகுகிறான்/ள் என்று சிறுகுழந்தைகளுக்கு புரியும் வகையில்
பாடங்கள் நடத்தப்படுகின்றன. நம்நாட்டில் இது எப்போது நடைமுறைக்கு வரும்?



[மனதை உலுக்கிய கடிதம் பதிவை இளமை விகடன் 'குட் பிளாக்'ல் வெளியிட்டிருக்கிறார்கள். விகடனுக்கு நன்றிகள்]

மழை வளர்த்தல்



கடுங்கோடையில் நானொரு
மழை வளர்த்தேன்.
கனவுகள் பிசைந்தூட்டி
பொம்மைகள்
பல வாங்கி குழந்தையென
வளர்த்து வந்தேன்.
கருமை சூழ்ந்த
ஓர் ஊமைப்பொழுதில்
என்னிலிருந்து நீங்கியது
பிள்ளைமழை.
அறையெங்கும் நிரம்பி
வழிந்தது
அனல்மணம்.

Thursday, July 02, 2009

மனதை உலுக்கிய கடிதம்..





என்னுடைய உறுபசி கதை வலைப்பூவில் வெளியிட்ட பின்னர் ஒரு பெண்ணிடமிருந்து கடிதமொன்று வந்தது. அந்த கடிதத்தை அவருடைய ஒப்புதல் பெற்ற பின்னரே இங்கே வெளியிடுகிறேன்.மனித இனத்தில் பிறந்தாலும் மிருகமாகவே வலம் வரும் சில "ஜந்து"க்களுக்கு இந்தக் கடிதம் சமர்ப்பணம். அந்த முகம்தெரியாத சகோதரி தற்சமயம் நலமாக வாழ்கிறார் என்பது மட்டுமே ஒரே ஆறுதல்.

*********************************************

Hi..
I don mind sayin u my story as i hope it may help some gal somewhere.
இந்த அழகான பூமிக்கு நான் வந்த நாள் October 20,1986. அம்மாக்கும் அவ்வாக்கும்( பாட்டி) இருந்த ஏதோ ப்ரச்சனைல என்ன 'வா' ன்னுகூப்பிடகூட யாரும் இல்லாம வீட்டுக்கு வந்தேன். 3 yrs வரைக்கும் என் Life எப்படி போச்சுனு தெரியாது. எங்க ஊர்ல நல்ல Schoolஇல்லன்னு என்ன அவ்வா வீட்லயே அண்ணன்கூட படிக்கட்டும்னு(He was studying 5th) அங்க கொண்டு போய் விட்டாங்க.அண்ணன்கூட இருந்த அந்த இரண்டு வருஷமும்(L.K.G & U.K.G) வாழ்க்கை அவ்வளவு அழகா இருந்துச்சி. அப்போல்லாம் எனக்கு'அம்மா' ன்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது. அம்மாகூட நான் இருந்தா எப்படி பார்த்துப்பாங்களோ அதைவிட அதிகமாவே எங்கஅண்ணன் என்ன பார்துக்கிட்டாங்க. அண்ணன தவிர என்னுடைய குதிரைவண்டி ஓட்டுநரின் பாட்டை தவிர வேற எதுவுமே எனக்குபெருசா தெரில. அதனால நான் அதிகமா யார்கிட்டயும் பேசினதில்ல. அண்ணனுடைய school ல 6th வரைக்கும்தான் இருந்தது.அதனால அண்ணன வேற schoolக்கு மாத்தனாங்க. அண்ணன் daily busல போய்ட்டு வரனும். ஒரு வருஷம்தான் அங்க இருந்தாங்க.தினமும் அவ்ளோ தூரம் போக கஷ்டமா இருக்கும்னு வேற ஊர்ல hostelல சேர்த்துட்டாங்க. அப்புறம் நான் மட்டும் எதுக்கு அங்கஇருக்கனும்னு என்னையும் ஏதோ தூரத்து சொந்தமான ஒரு அக்கா வீட்டுக்கு போய் அவங்க பையன்கூட(என்னைவிட ஒரு வயதுஇளையவன்) படிக்கட்டும்னு அனுப்பிட்டாங்க.
அம்மாகூட நான் இல்லாததால அம்மாவ விட்டுட்டு போற வலி தெரியல. ஆனா அண்ணன இதுக்கு அப்புறம் எப்போ பார்ப்போம்னுநினைச்சிகிட்டு அழுதுடே போனன். அந்த அக்காவும் அண்ணன மாதிரியே என்ன நல்லா பார்த்துப்பாங்கன்னு நம்பிக்கையா இருந்தன். ஆனாஅங்க எல்லாமே தலகீழா நடந்துச்சி. ஏதோ நான் சம்பளம் இல்லாத வேளைக்காரி மாதிரி இருந்தன். அக்கா சொல்ற எல்லா வேளையும்செய்யனும். ஏதாவது தப்பா செஞ்சா அடி பயங்கரமா விழும். அவங்க எல்லாரும்(அக்கா, மாமா, அவங்க பையன்) ஒன்னா இருப்பாங்க.அவங்க சாப்பிட்டு முடிச்ச அப்புறம்தான் நான் சாப்பிடனும். அவங்க இருக்கற இடத்துக்கு நான் போனா எதாவது வேளை குடுத்து என்னவெளிய அனுப்பிடுவாங்க. அதனாலயே நான் தோட்டத்துலயோ இல்ல வராண்டாலயோ தான் இருப்பன். மதியம் lunchகு வீட்டுக்குவரும்போது என் friends கொஞ்சம் பேரு அவங்க அம்மாகூட அக்கா வீட்டுக்கு தான் சாப்பாடு எடுத்துட்டு வருவாங்க. (As it s near to school).எல்லாரும் ஒன்னா hallல சாபிடுவாங்க. நான் மட்டும் தனியா kitchenல சாபிடுவன். எல்லார்கிட்டயும் நான் அவங்களோட சாபிட்டா lateஆசாப்பிடுவன்னு சொல்லுவாங்க. அதனாலயே எனக்கு அங்க யாரையும் பிடிக்காம போய்டுச்சி. நான் leaveக்கு ஊருக்கு வரும்போதும்யார்கிட்டயும் அவ்வளவா பேசமாட்டன். (though i had a dozen of friends thr) யார பார்த்தாலும் பயப்படுவன். அம்மாவும் அக்காமாதிரிதான் இருப்பாங்கன்னு அம்மாகிட்டகூட போகமாட்டன்.
1st std leave முடிஞ்சு மறுப்படியும் அங்க போனன். Then it was even worse than my 1st std. நான் ஏன் இலைச்சுட்டன்னு அம்மாஅக்காகிட்ட கேட்டிருக்காங்க. அதுக்கு எனக்குதான் அடி விழுந்துது. நீ அம்மாக்கிட்ட என்ன சொன்ன. அதனாலதான் அவங்க அப்படிகேட்டாங்கன்னு என் உசுர வாங்கிட்டாங்க. மணல வச்சு தொடைல கில்லுறதுல இருந்து dress இல்லாம வெளியில (அதுவும் school busபோகற நேரத்துல) நிக்கவைக்கற வரைக்கும் எவ்வளவோ கொடுமை.
இப்படியே போய்ட்டு இருந்த lifeல நான் எதிர்பார்க்காத அந்த நாள் வந்துச்சி. எப்பவும் நான் தனியாதான் தூங்குவேன். Sofa காலடி தான்என்னுடைய துணை. Night தூங்கினா அதோட காலைல மாமா கதவு திறக்கற சத்தம் கேட்டுதான் எந்திரிப்பன். அப்படிதூங்கும்போதுதான் ஒரு நாள் என் மேல ஏதோ ஊர்ர மாதிரி இருந்துது. கருப்பாம்பூச்சின்னு நினைச்சு ரொம்ப பயந்தன். கண்ண இருக்கமாமூடிக்கிட்டு பயந்துகிட்டே படுத்துட்டிருந்தன். அது கைவிரல் மாதிரி இருந்துச்சி. அப்புரம் பேயோன்னு நினைச்சன். கண்ண திறக்கவும் பயம்.அக்காவ கூப்பிட அதுக்குமேல பயம். எனக்கு இருந்த தூக்கத்துல ஒன்னும் பன்னாம அப்படியே தூங்கிடலாம்னு கூட நினைச்சன். கொஞ்சநேரத்துல அது பேய் இல்லன்னு confirm பன்னிகிட்டன். ஒரு கட்டத்துல என்னால வலி தாங்கமுடியாம லேசா கண்ண திரந்து பார்த்தன்.இருட்டுல ஒரு ஒருவம்தான் தெரிஞ்சுது. ஆனா யாருன்னு தெரியல. நான் பயத்துல அழுவ ஆரம்பிச்சுட்டன். என் அழுக சத்தம் கேட்டு"ஒன்னும் இல்ல அழுவாத. நான் தான்" னு சொல்லிட்டு போய்ட்டான். என்ன நடந்ததுன்னும் தெரியாம யார் அதுன்னும் தெரியாம nightஎல்லாம் அழுதுகிட்டே இருந்தன். அடுத்த நாள் காலைல யாரோ புதுசா ஒருத்தர் இருந்தார். அக்காதான் அது அவங்களோட தம்பினுசொன்னங்க. அப்போ இந்த கழுதைக்கு(அங்க என்ன அப்படிதான் கூப்பிடுவாங்க) முறை எல்லாம் தெரியாது. Night நான் பார்த்தது இவங்களதானா இல்ல வேற யாராவதான்னு ஆயிரம் குழப்பம். அழுது அழுது யோசிச்சி யோசிச்சி எனக்கு காய்ச்சல் வந்ததுதான் மிச்சம். அதுவே இரண்டுநாள்ல மஞ்சள் காமாலைன்னு தெரிஞ்சுது.
அப்போ
அவன் மறுபடியும் வந்து அன்னைக்கு night நடந்தது எதையும் யார்கிட்டயும் சொல்லக்கூடாதுனு மிரட்டிடு போய்ட்டான். அதையெல்லாம்சொன்னா அக்கா அடிப்பாங்களோன்னு நானும் சொல்லல. Jaundice வந்ததால என்ன வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்தாங்க. கொஞ்ச நாள்லQuarterly leave வந்துச்சி. அப்போ எங்க தெருவுல எல்லா பிரண்ட்ஸ்ம் ஒன்னா விளையாடுவோம்(விளையாடுவாங்க). அப்போ அங்க என்பக்கத்து வீட்டு அண்ணன் என்மேல ரொம்ப பாசமா இருந்தாங்க. I really got terrified on every guys i see. Little by little he made me understand his affection. I felt as my brother is back. நாங்க எல்லாரும் ஒன்னா இருக்கும் போது எல்லாம் அவங்க எங்கூட தான் இருப்பாங்க. அவங்களுக்கு என்மனசுல ஏதோ பிரச்ச்னை இருக்குன்னு தெரிஞ்சி எஙகிட்ட நோண்டி நோண்டி கேட்க ஆரம்பிச்சாங்க. எனக்கு அங்க இருக்க பிடிக்கல. அக்காரொம்ப அடிக்கராங்க, எனக்கு அம்மாக்கிட்ட சொல்லவும் பயமா இருக்குன்னு சொன்னன். நான் அம்மாக்கிட்ட சொல்லிக்கறன். நீ பயப்படாமஇருன்னு சொன்னாங்க.
அப்புறம் மறுபடியும் அந்த நரகத்துக்கு வந்தன். அப்படியே போய்ட்டு இருந்துச்சி. திக்கு தெரியாத நேரத்துல எப்பவாச்சும் சனி ஞாயிறு (He was a engg student then) அவன் வந்து என்ன கசக்கி பிழிஞ்சுசுட்டு போவான். எங்க ஊர்ல அந்த அண்ணன் தாத்தாகிட்ட (அவங்களும்தாத்தாவும் நல்ல நண்பர்கள்) ஏதேதோ சொல்லி தாத்தா அம்மாக்கிட்ட சொல்லி அம்மா அப்பாக்கிட்ட சொல்லி ஒருவழியா அடுத்த வருஷம்விழுப்புரத்துல(My native s near Villupuram) சேர்த்துக்கலாம்னு சொன்னாங்க.
Then life was good thr from my 3rd std. It was the first time that am staying with my parents & my sweet brother. Bt still i couldn't find comfortable with them. Thr was something within my heart that was a barrier between us. It took almost 2 or 3 yrs to get back my life.
Long after when i came to know from my friends abt the relationship b/w a men n women i was terribly shocked knowing wat was happened to me. I became like a mad. I started hating every men i look. Even my brother & father. Life was very worse. I won't talk wit any1. I dono the way to show my anger. Then it turned towards sports. I started participating in every event as i've to win everything. As i hated humans i started loving games since i'll be fighting with humans.
Soon after i became a football player representing my school team. It was my football coach(Although he's a men) who changed my thought and every wrong thinkings i had. Also two of my friends Sahul & Karunagaran changed me a lot and made me to concentrate in my studies. Karunagaran was the first guy i was talkin in school. Only b'cos of him i changed my thought of guys. Now my life s jus the reverse. Living happily with my family & friends(Also ur poems). Jus NJoying every minute.

Regards,
XXXXX

P.S: நண்பர்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Wednesday, July 01, 2009

நின்னைச் சில வரங்கள் கேட்பேன்




தேடிச் சோறுநிதந் தின்று -
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி -
மனம் வாடித் துன்பமிக உழன்று -
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து -
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் -
பல வேடிக்கை மனிதரைப் போலே -
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் -
அவைநேரே இன்றெனக்குத் தருவாய் -
என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் -
இன்னும்மூளாதழிந்திடுதல் வேண்டும் -
இனி என்னைப் புதிய உயிராக்கி -
எனக்கேதுங் கவலையறச் செய்து -
மதிதன்னை மிகத் தெளிவு செய்து -
என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!

-மகாகவிஞன்.