பதிவுலகில் 2009ம் ஆண்டு சிறந்த பொதுச்சேவை செய்தவர்களை கெளரவிக்கும் இடுகையிது.
இப்போது விறுவிறுப்பாக கவிதை போட்டியும் நடந்துகொண்டிருக்கிறது. தங்களது கைக்காசை வெற்றி பெற்றவர்களுக்கு பகிர்ந்து அளிப்பதின் வாயிலாக தனித்து நிற்பவர்கள்.
தொடர்ந்து புதிய படைப்பாளிகளுக்கு முக்கியத்துவம் தருபவர்.பல வருடங்களாக எழுதி வந்தாலும் தன்னுடைய கவிதைகளை தொகுப்பாக்காமல் பிற எழுத்தாளர்களை உருவாக்கியதில் தனித்து நிற்பவர்.
புத்தகம் வலைப்பூவில் தன் நண்பர்களுடன் தங்களது வாசிப்பனுபவத்தை பதிவு செய்கிறார் சேரல்.ஆரம்ப நிலை வாசகனுக்கு பேருதவியாக பல நூல்களை அறிமுக படுத்துவதில் தனித்து நிற்கிறார்.
சேரலை போலவே தான் வாசித்த தமிழ் நூல்களை பிறருக்கு அறிமுகம் செய்து வருகிறார் கிருஷ்ணபிரபு.
கொத்துபரோட்டாவிலும் எண்டர் கவிதைகளிலும் புகழ் பெற்ற போதிலும் இவர் எழுதும் சினிமா வியாபாரம் தொடர் சினிமாத்துறையை A to Z அறிந்துகொள்ள உதவுகிறது. துறை சார்ந்த பதிவுகளை இத்தனை விரிவாகவும் எளிமையாகவும் வாசகனுக்கு ஏற்றார்போல் எழுதுவதில் தனித்து நிற்பவர் கேபிள்சங்கர்.
இணையத்தால் இணைந்த தம்பதிகளின் வலைப்பூ "அணிலாடு முன்றில்". சங்க இலக்கியத்தின் இறுக்கமான சட்டதிட்டங்களை தாண்டி அதனுள் இருக்கும் இன்றும் செல்லுபடியாகக்கூடிய கவித்துவத்தை விரிவாக அலசும் வலைப்பூ. நல்லதொரு முயற்சி.
6 . மாதவராஜ் - தீராப்பக்கங்கள்
இலக்கிய உலகம் நன்கு அறிந்த எழுத்தாளர். இணைய பக்கம் துவங்கியபின்னர் தனது வலைப்பக்கத்தின் பெயரை போலவே தீர்ந்துபோகாத எழுத்துக்கு சொந்தக்காரர். இணையத்தில் வெளியான சிறந்த படைப்புகளை(கவிதை,சிறுகதை,அனுபவம்) தொகுத்து வம்சி வெளியீடாக இவ்வருடம் வெளியிடுகிறார். இணையத்தில் சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுப்பது கடலில் ஊசியை தேடுவது போல் என்பதால் இவரது உழைப்புக்கு நன்றி தெரிவிப்போம்.
7.வண்ணத்துப்பூச்சியார்
உலக திரைப்படங்களை பல இணைய எழுத்தாளர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக அறிமுகம் செய்தாலும் உலக திரைப்படத்திற்காக மட்டுமே வலைப்பூ வைத்திருப்பவர்.
பட்டர்பிளை சூர்யா என்ற செல்லப்பெயரால் அறியப்படுபவர். புரிவதற்கு சிக்கலான படங்களை கூட எளிமையான நடையில் எழுத்துப்படுத்தி இருப்பது இவரது சிறப்பு.