Showing posts with label உதவி. Show all posts
Showing posts with label உதவி. Show all posts

Monday, October 26, 2009

பதிவ-நண்பர்களே - இதயம் காக்க உதவிடுங்கள்





நண்பர்களுக்கு,

என் நண்பர் ஒருவரின் சகோதரர் உடல்நலக்குறைவால் அவதிப்படுகிறார்.அவரது இருதய அறுவை சிகிச்சைக்கு 150000 ரூபாய் தேவைப்படுகிறது. உதவ நினைக்கும் நண்பர்கள்
உதவலாம்.


மேலதிக விபரங்கள்:



Bank Accountno -> 12681
Account Name -> Saroja Rajagopalan
Bank & Branch -> IOB, West CIT Nagar Branch.
Chennai 600035.



நண்பரின் தாயார் அனுப்பியுள்ள மடல்:


05.10.2009

From
Saroja Rajagopalan,
Flno.13, Mohan Apartments,
107, South West Boag Road,
T.Nagar,
Chennai 600 017.
044-24311992
9445113326
mr.venkatesaprasath@gmail.com

Dear Sirs,

I introduce myself as mother of R.Vijayaraghavan who is a mentally retarded boy. He is suffering from Heart Disease (Hole in the Heart). The cost of Surgery is about Rs.150000/- (Rupees One Lakh and Fifty thousand only).

I request you all to help me financially to carry out the surgery at the earliest.


Thanking you,
Saroja Rajagopalan,

Saturday, October 17, 2009

1 நிமிடம் 10 குழந்தைகள் :(




1 நிமிடத்தில் பசியால் உலகெங்கும் மரணிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 10 என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

காணொளி:




உதவ விரும்பும் அன்பர்கள்
இங்கே சொடுக்குங்கள்:

https://www.wfp.org/donate/1billion

Wednesday, September 30, 2009

பதிவர்களுக்கு ஓர் வேண்டுகோள்




சமீபத்தில் மறைந்த கவிஞர்.வெங்கட் தாயுமானவன் அவர்களின் அஞ்சலியும் புத்தக வெளியீடும் டிசம்பர் 17ம் தேதி சித்தன் கலைக்கூடம் முன்னெடுப்பில் நடைபெறவிருக்கிறது. அவர் பயன்படுத்திய வலைத்தளத்திற்கான சுட்டிகள் கீழே:

www.kvthaayumaanavan.blogspot.com
www.kvthaayu.blogspot.com

http://groups.google.com/group/palsuvai

http://groups.google.co.in/group/clapboard

http://groups.google.com/group/kamathenu



கடந்த சில வருடங்களாக புற்றுநோயில் துயரப்பட்டு மருத்துவர்களால் கைவிடப்பட்ட நிலையிலும் தன்னுடைய இலக்கிய முனைப்புக்களையும்,திரைப்பட எதிர்பார்ப்புகளையும் கைவிடாது இறுதிவரை தன் மூச்சென கருதிய இலக்கிய போராளி அவர்.

தற்போது அவருடைய மனைவி திருமதி.அன்புக்கரசி வெங்கட்தாயுமானவன் அவர்களுடன் கலந்தாலோசித்த பிறகு வெங்கட் தாயுமானவனுடைய பிறந்தநாளும்,மணநாளுமான டிசம்பர் 17 அன்று அஞ்சலி கூடலும் அவரது கவிதை தொகுப்பு வெளியிடலும் தீர்மானமாகியது.

இந்த இலக்கினை நோக்கி நகரும் வேளையில் புத்தக தயாரிப்பிலும் அஞ்சலி செலுத்துவதிலும் பதிவர்களாகவும் ஒரு இலக்கியவாதியின் பிரிவை நினைவூட்டுபவர்களாகவும் உள்ள நாம் அனைவரும் ஒருங்கிணைந்து இந்த புத்தகத்தை பிரசுரித்து,பிரசுர காப்புரிமையும் எதிர்கால தமிழக அரசு நூலக ஆணை உரிமையும் அவருடைய மனைவியிடம் ஒப்படைத்தோம் எனில் எதிர்காலத்தில் அது அவர்களுக்கு ஒரு சிறிய பொருளாதார உதவியை அளிக்கக்கூடும்.

இம்முயற்சிகளுக்கு ஆகும் மொத்த செலவுத்தொகையை(உத்தேசமாக ரூ.25,000,நூல்வெளியீடு,அரங்கவாடகை - மீதமாகும் தொகை தாயுமானவனின் மனைவியிடம் ஒப்படைக்கப்படும்) பதிவர்களாகிய நாம் பகிர்ந்துகொள்வோம்.பதிவர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட பங்களிப்பாக தங்களால் முடிந்த பொருளுதவியை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

முன்னெடுப்போர்:

"யுகமாயினி" சித்தன்: 9382708030
கவிஞர்.அன்பாதவன்: 9500102765
கவிஞர்.அரங்க மல்லிகா: 9842979756

[பணம் செலுத்தவேண்டிய வங்கிக்கணக்கு விவரங்கள்]


Account Holder - J P Anbusivam
A/C - 2169010000848
Bank of Baroda,
Chennai - 1


பணம் செலுத்திய விபரங்களை chithankalai@yahoo.co.in எனும் மின்னஞ்சலுக்கு தெரிவிக்க வேண்டுகிறோம்.

Thursday, August 13, 2009

இதயம் காக்க உதவிடுங்கள்..




சக வலைப்பதிவர் திரு.சிங்கை நாதன் அவர்களுக்கு இதய அறுவை சிகிச்சைக்காக 33 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது.
மேலும் தகவலுக்கு இங்கே செல்லுங்கள்.


பண உதவி செய்ய வேண்டிய முகவரி:

ICICI Account Details

Account Number: 612801076559
Name: M.KARUNANITHI
Branch: Tanjore

Singapore Account Details

Account Number: 130-42549-6
Name: Muthaiyan Karunanithi
Bank: DBS - POSB Savings

Saturday, November 22, 2008

இலங்கை இனப்படுகொலைகளை தடுத்து நிறுத்த வேண்டி ஒப்பாரி இலக்கிய நிகழ்வு

இலங்கையில் தொடர்ந்து நடைப்பெறுகிற இனப்படுகொலைகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, கவிஞர்கள் சார்பில் வருகிற டிசம்பர் 07( 07.12.2008) அன்று சென்னையில் மாபெரும் கண்டன கவிதைகள் கவியரங்கம் நிகழவிருக்கிறது. பதிவு செய்ய விரும்புவோர்,

தொடர்புக்கு
கவிஞர் . லீனா மணிமேகலை 98410 43438
கவிஞர் . இன்பா சுப்ரமணியன் 98841 20284.

ஒப்பாரி இலக்கிய நிகழ்வு என பெயரிடப்பட்டிருக்கும் இதில் ஒப்பாரிக்கலைஞர்களும் பங்கெடுத்துக்கொள்ள இருக்கிறார்கள். தமிழ் இன உணர்வாளர்கள், படைப்பாளிகள் தங்களை பதிவு செய்து இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு எதிரான உணர்வுகளை பதிவு செய்யுங்கள்.
மற்றைய தமிழ் உணர்வாளர்களுக்கும், மனித நேய சிந்தனையாளர்களுக்கும் இந்த நிகழ்வை பற்றி தெரிவித்து பெரும் வெற்றியடைய செய்யுங்கள்.

Wednesday, September 17, 2008

கீற்றுக்கு உதவிடுவோம்

நண்பர்களே,

கீற்று இணையதளம்(www.keetru.com) இணைய உலகிற்கு கிடைத்த வரப்பிரசாதம். சில வருடங்களுக்கு முன்னர் நான்கைந்து இளைஞர்களின் முயற்சியாலும்,தமிழார்வத்தாலும் இணையத்தில் தொடங்கப்பெற்ற கீற்று இன்று விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது. கீற்றுவின் சிறப்பம்சமாக நான் கருதுவது சிற்றிதழ்களை இணைய உலகிற்கு தொடர்ந்து அறிமுகப்படுத்துவது. அதுமட்டுமின்றி வளரும் இளைய கவிஞர்களையும்,எழுத்தாளர்களையும் கீற்று தொடர்ந்து ஊக்கப்படுத்தி வந்திருக்கிறது. ஏராளமான இலக்கியத்தகவல்களை தொடர்ந்து தந்தவண்ணம் இருக்கிறது.

தற்சமயம் நிதி பற்றாக்குறையால் கீற்று தள்ளாடுகிறது. இதைப்பற்றி அறிந்துகொள்ள இங்கே சொடுக்குங்கள் http://www.keetru.com/common/donate.php

கீற்று தமிழிசை பாட உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.

நன்றி.

Tuesday, August 12, 2008

தெருக்கூத்து கலைஞருக்கு உதவி தேவை


நண்பர்களுக்கு,

வனவாசியை சேர்ந்த மாயவன் என்கிற இந்த
தெருக்கூத்து கலைஞர் சுவாசத்தில் அடைப்பு ஏற்பட்டு
கஷ்டப்படுகிறார்.
70 வயதான இந்த கலைஞருக்கு தங்குவதற்கு வீடு இல்லை.
தனி மரமான இவரது இருதய அறுவை சிகிச்சைக்கு ரூ. 15000
தேவைப் படுகிறது.
உதவ விரும்பும் அன்பர்கள் கீழ்கண்ட ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிக் கணக்கிற்கு
பணம் அனுப்பலாம்.

A/c No. 611901517766
V.Shunmugapriyan,
ICICI Bank, Salem Shevapet Branch

மேலதிக தவலுக்கு:

மு.ஹரிக்கிருஷ்ணன்(9894605371)

நன்றி.
நிலாரசிகன்.