Showing posts with label நட்பு. Show all posts
Showing posts with label நட்பு. Show all posts

Sunday, August 01, 2010

நண்பர்கள் தின வாழ்த்துகள்..





வெயிலின் உக்கிரத்தில் நிழல்
தந்து மறைந்தவர்களுக்கும்..
தோல்வியின் உச்சத்தில்
தோள் கொடுத்து உடன் நின்றவர்களுக்கும்..
ஜெயத்தில்  சுயம் வெளிப்படுத்தி
தகிக்கும் பாலையாய் மாறியவர்களுக்கும்..

கனவுகளில் கல்லெறிந்து காணாமல்
போனவர்களுக்கும்..
வாழ்நாள் நண்பன் என்றுரைத்து
வார்த்தை முடியும் முன்பே மறைந்தவர்களுக்கும்…
வீழ்ந்தபோது இது வீழ்தல் அல்ல
விதைத்தல் என்று புரியவைத்தவர்களுக்கும்..
சுயநலத்தின் உயிர்வடிவமாய்
விலகி பறந்தவர்களுக்கும்..
தமிழால் இணைந்து இதயம் நுழைந்து
தழைப்பவர்களுக்கும்..
கவிதைக்காக எப்போதும் நேசிக்கும்
நல்லிதயங்களுக்கும்...
-நிலாரசிகன்.

Sunday, August 02, 2009

நண்பர்கள்....நண்பர்கள்...நண்பர்கள்...



1
2
3
4
5
ஆறாப்பு வரையில்
ஒன்றாய் ஒண்ணுக்கு போய்
சிலேட்டு குச்சி விழுங்கி
ஓணான் அடித்து
பொன்வண்டு சேகரித்து
மூக்கொழுகி திரிந்த
நண்பர்களுக்கும்
7,8,9,10 வரை
"போப் நினைவு மேல்நிலைப்பள்ளியில்"
நகசதையாய் திரிந்து
மாங்காயும்,நெல்லிக்காயும் திருடி
"சில்க்" நூலில் பட்டம்விட்டு
ஸைன்ஸில் முட்டை எடுத்து
வாத்தியார் நாற்காலியில் முள்வைத்து
முட்டி கிழிய கபடி விளையாடிய
நண்பர்களுக்கும்

11 12ல்
முளைக்காத மீசையை முறுக்கி
பெண்கள் பள்ளி பேரழகிகளின்
கடைக்கண்ணில் கெமிஸ்ட்ரி
தேடியலைந்து
பிஸிக்ஸில் பெயிலாகி
திக்கிமுக்கி பள்ளி முடித்து
திசைக்கொன்றாய் சிதறியபின்னும்
வாழ்க்கையை எப்போதும்
அழகான நினைவுகளால்
நிரப்பி நெஞ்சோடு கலந்திருக்கும்
என் பால்ய
நண்பர்களுக்கு...


நண்பர்கள் தின வாழ்த்துகள்.