Saturday, May 06, 2006

காதல் 1

காதல் 2

அவரவர் வாழ்க்கை...

ரயிலின் வருகையைப் பற்றி
கவலைப்படாமல் தண்டவாளத்தில்
ஊறுகின்றன சில எறும்புகள் .

நெருங்குகின்ற ரயிலை
நிறுத்துவதெப்படி
என்று எண்ணித்
தோற்கிறேன்.

இரைச்சலோடு
கடந்து செல்கிறது
அந்த நீள ரயில்.

அப்போது எதிர்பாராமல்
பெய்த மழையில்
எறும்புகளுக்கு என்னவாயிற்று
என்கிற கவலை
மறந்து மழைக்கு
ஒதுங்க இடம் தேடி
அலைகிறது மனம்.