(சுனாமி பேரலையில் தன் பேரனை பலி கொடுக்கிறாள் ஏழை
மூதாட்டி ஒருவள்...
அவனை இழந்து ஒரு வருடம் கழித்து அவனது கல்லறையில்
அவள் உதிர்க்கும் கண்ணீர்த்துளிகளை கவிதையாய் மொழிபெயர்த்திருக்கிறேன்.)
பிரசவத்தோடு ஆத்தா போக
கட்டினவ நினப்போடு அப்பன் போக
அறுவது வயசுல எங்கையில்
வந்து விழுந்த மரிக்கொழுந்தே!
மகன் வயித்து பேரன்
உன்ன
மகனப்போல வளர்த்து
வந்தேன்.
கடலக் காமிச்சு
அம்மா இவ கும்பிட்டுக்கன்னு
சொல்லி வந்தேன்.
நர விழுந்த கிழடு
கட்டைகள விழுங்காம
கரயோடு வெளயாண்ட
புள்ள உன்ன
நுரகொண்டு
போயிடுச்சே!
தரயில மீனப்போட்டா
செத்துப்போகுமேன்னு
நா(ன்) யாவாரத்துக்கு
புடிச்சி வந்த மீன
கடல்ல கொண்டு போடுவியே
எந்தங்க மகராசா
இப்ப எந்த மீனு
வயித்துக்குள்ள இருக்கியோ
தெரியலயே!
கடலம்மா..
அரசாங்கம் தந்த காசெல்லாம்
கடல்ல தூக்கி போடுறேனம்மா..
காச எடுத்துக்கிட்டு
எம் பேரன கொடுத்திடம்மா!
நீ வளர்க்கும் மீனெல்லாம்
நா(ன்) புடிச்சிப் போறேன்னு
நா வளர்த்த எம் பேரன
பிடிச்சுப் போயிட்டியா தாயே!
அலையோடு போன
பேரப் புள்ளய நாந்தேடி
திரிஞ்ச நாளுல,
அப்பனாத்தா இல்லாம
அழுத ஒரு ஒத்தப் பிள்ள
இப்போ என் கூரவீட்டு
தொட்டில்ல சத்தமில்லாம
உறங்கி கிடக்கு.
குலமே அழிஞ்ச பின்னால
இந்தக் கிழவி உசுர
அந்தப் பச்சப்புள்ள சிரிப்பு
இழுத்துப் பிடிச்சிருக்கு.
மண்ணுக்குள்ள பேரன
பொதச்சுட்டு,
நெஞ்சுக்குள்ள புதுப்புள்ளய
நினைச்சுக்கிட்டு
தள்ளாடி நான் போறேன்
வீடு நோக்கி.
கலங்கிய இதயத்துடன்,
நிலாரசிகன்.
Monday, December 26, 2005
Thursday, December 01, 2005
என் நினைவோடையில் நீந்துகின்ற மீன்கள்..
2. அண்ணன்.
என் உடன் பிறந்தவன். பிறப்பால் அண்ணன்.
கவிதையால் குரு.
என் பாதையெல்லாம் பூக்கள் மலர, முட்கள் மிதித்துச் சென்றவன்.
தான் விரும்பியதெல்லாம் தன் தம்பி எனக்கு
கிடைக்க வழிசெய்தவன்.
பாசமானவனே! உன்னைப் பற்றி எழுதுவதற்கு
காரணம் என் மீதான உன் பாசம் மட்டுமல்ல.
ஒரு கிராமத்துச் சிறுவன் எந்த ஒரு பந்தங்களின்
ஏணிகளும் இல்லாமல் சிகரம் தொட்ட கதை இந்த உலகிற்கு சொல்லவே உன்னைப் பற்றி அதிகம் எழுத விரும்புகிறேன்.
நம் கிராமத்தில் கணிப்பொறி படித்த முதல் மாணவன் நீ.
இளநிலை முடித்து சென்னையில் முதுகலை படிக்க
வந்த முதல் கிராமத்துப்பறவை நீ.
சென்னை என்றாலே புருவம் உயர்த்தும் நம்மூர் மக்களுக்கு அமெரிக்கா சென்று வந்து
வியப்பில் ஆழ்த்தியவன் நீ.
இவையெல்லாம் ஒரே நாளில் நடந்து விட வில்லை.
இதற்குப்பின் உன் உழைப்பும்,அவமானங்களை மாற்றி
வெகுமானங்கள் வாங்கிய உன் தன்மானமும் உண்டு என்பதை சிறியவன் நான் சத்தமாகச் சொல்லுவேன்.
உனக்குத் தெரியாமலேயே நீ என்னவெல்லாம் மாற்றம் கொண்டு வந்தாய் என்று பட்டியலிடவா?
கோலிகுண்டு விளையாட அழைக்கும் தோழர்களுக்கு
சதுரங்கம் விளையாட கற்றுத் தந்து அவர்களின் சிந்தனைச்சிறகுகள் விரியச்செய்தாய்.
உன் மனதை சாந்தப்படுத்திய தியானத்தை உன்
தோழர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து வெட்டிப்பேச்சினால் வாழ்ந்து கொண்டிருந்தவர்களுக்கு மெளனத்தின் புனிதம் கற்று
அவர்களை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தாய்.
உன் முன்னேற்றம் கண்டு ஒவ்வொருவருக்குள்ளும்
ஒரு தீப்பொறி கிளம்பியதை நானறிவேன்.
முயற்சித்தவன் தோற்றதில்லை என்பதை உன் மூலம்தான் நான் கற்றுக் கொண்டேன்.
எனக்கு வாசிக்கும் பழக்கத்தை கற்றுத் தந்தவனும் நீயே!
கவிதை வாசத்தை காட்டித் தந்தவனும் நீயே!
நீ படித்துப் போட்ட "சிறுவர்மலர்" நான் வாசித்த முதல் பாடபுத்தகமில்லாத புத்தகம்.
அதன் பிறகு சிறுவர்மலர் வந்தால் என் வாசிப்புக்கு பின்பே உன்னை வந்தடையும்...
நாட்கள் நகர நகர சிறுவன் நான் வளர்ந்து
பன்னிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு பொழுது
போகாமல் உன் அனுமதியின்றி உன் பெட்டியில் கிடந்த சில நாட்குறிப்புகளை படிக்க எடுக்கிறேன்.
அந்த நாள் இன்றும் என் நினைவில் பூத்து நிற்கிறது.
நம் வீட்டு மொட்டைமாடியில் கொய்யா மர நிழலில்
யாருக்கும் தெரியாமல் உன் நாட்குறிப்புகள் சிலவற்றை எடுத்து வந்து படிக்கத் துவங்குகிறேன்....
"அடுத்தவர் டைரியை அனுமதியின்றி படிப்பது மனச்சட்டப்படி குற்றம்" என்கிற உன் வாசகத்தையும்
மீறி அன்று உன் நாட்குறிப்புக்குள் என் விழிகளால் நடக்க ஆரம்பிக்கிறேன்.
அன்று என்னுள் ஏற்பட்ட மாற்றம்...
முதல் முதலில் காதலியின் உதடுகளால் "உன்னை நான் நேசிக்கிறேன்" என்று கேட்கையில் உடல் புல்லரித்துப் போகுமே அதை விட ஆயிரம் மடங்கு
ஆனந்த வெள்ளத்தில் தத்தளித்தேன்.
அன்றுதான் உன் கவிதைகளை முதல்முதலில் படித்தேன்.
உனக்கு இவ்வளவு அற்புதமான தமிழாற்றல் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டதும் அன்றுதான்.
அதுவரை எனக்கு அண்ணனாய் இருந்தவன் அன்றுதான் ஆசானாய் உயர்ந்தாய்!
எனக்குள் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கியது ,உனக்குத் தெரியாமலேயே நீ எனக்கு அறிமுகம் செய்து வைத்த என்னுடைய மற்றொரு முகம்-- கவிதை!
அதன்பின்பு நீ சேமித்த வைத்திருந்த கவிதைப் புத்தகங்கள் இன்றி நான் உண்டதில்லை,உறங்கியதில்லை...
இன்று என் பேனாவில் வழிகின்ற வார்த்தைகள் கவிதை நதியாய் மாறுவதற்கு நதிமூலமானவன் நீ.
உன்னிடம் கேட்க நினைத்த சில கேள்விகளை
இன்று கேட்கிறேன்...
ஆழ்கடலில் கிடக்கின்ற விலைமதிப்பில்லாத முத்துக்கள் மாதிரி வெளியில் தெரியாமல் கவிதை
நோட்டில் உன் கவிதைமலர்கள் ஓய்வெடுக்கும் காரணம் என்ன?
வாழ்க்கை உன் மீது சுமத்திய கடமைகளை நீ சுமந்து நடந்ததில் நசுங்கிப்போயினவோ உன்
கவிப்பூக்கள்?
உன் உணர்வுகளை இந்தச் சமூகம் புரிந்து கொள்ளாமல் காயப்படுத்திவிடும் என்கிற தவிப்பினால் நிறுத்திவிட்டாயோ கவிதையுடனான உன் பந்தத்தை?
இந்தக் கேள்விகளுக்கு என்னால் விடையளிக்க ஒரே ஒரு வகையில் முடியும் அண்ணா.
கவிதை நோட்டில் உறங்குகின்ற உன் கவிதைகளை
அச்சில் ஏற்றி உலகிற்கு நான் அறிமுகம் செய்து வைப்பேன்.
அதன்பின்...
இந்தச் சமூகம் பூக்கள் தூவினால் உன் மீது
தூவ செய்வேன். முட்கள் எறிந்தால் உன் கேடயமாக நான் மாறுவேன்.
எனக்கு நிழல் தருகின்ற மரமாய் நீ இருக்கிறாய்.
உனக்கு மழை தருகின்ற மேகமாய் நானிருப்பேன் என்கிற அசைக்கமுடியாத நம்பிக்கையில்....
நன்றியுடன்+பாசமுடன்,
உன் தம்பி.
நிலாரசிகன்.
என் உடன் பிறந்தவன். பிறப்பால் அண்ணன்.
கவிதையால் குரு.
என் பாதையெல்லாம் பூக்கள் மலர, முட்கள் மிதித்துச் சென்றவன்.
தான் விரும்பியதெல்லாம் தன் தம்பி எனக்கு
கிடைக்க வழிசெய்தவன்.
பாசமானவனே! உன்னைப் பற்றி எழுதுவதற்கு
காரணம் என் மீதான உன் பாசம் மட்டுமல்ல.
ஒரு கிராமத்துச் சிறுவன் எந்த ஒரு பந்தங்களின்
ஏணிகளும் இல்லாமல் சிகரம் தொட்ட கதை இந்த உலகிற்கு சொல்லவே உன்னைப் பற்றி அதிகம் எழுத விரும்புகிறேன்.
நம் கிராமத்தில் கணிப்பொறி படித்த முதல் மாணவன் நீ.
இளநிலை முடித்து சென்னையில் முதுகலை படிக்க
வந்த முதல் கிராமத்துப்பறவை நீ.
சென்னை என்றாலே புருவம் உயர்த்தும் நம்மூர் மக்களுக்கு அமெரிக்கா சென்று வந்து
வியப்பில் ஆழ்த்தியவன் நீ.
இவையெல்லாம் ஒரே நாளில் நடந்து விட வில்லை.
இதற்குப்பின் உன் உழைப்பும்,அவமானங்களை மாற்றி
வெகுமானங்கள் வாங்கிய உன் தன்மானமும் உண்டு என்பதை சிறியவன் நான் சத்தமாகச் சொல்லுவேன்.
உனக்குத் தெரியாமலேயே நீ என்னவெல்லாம் மாற்றம் கொண்டு வந்தாய் என்று பட்டியலிடவா?
கோலிகுண்டு விளையாட அழைக்கும் தோழர்களுக்கு
சதுரங்கம் விளையாட கற்றுத் தந்து அவர்களின் சிந்தனைச்சிறகுகள் விரியச்செய்தாய்.
உன் மனதை சாந்தப்படுத்திய தியானத்தை உன்
தோழர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து வெட்டிப்பேச்சினால் வாழ்ந்து கொண்டிருந்தவர்களுக்கு மெளனத்தின் புனிதம் கற்று
அவர்களை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தாய்.
உன் முன்னேற்றம் கண்டு ஒவ்வொருவருக்குள்ளும்
ஒரு தீப்பொறி கிளம்பியதை நானறிவேன்.
முயற்சித்தவன் தோற்றதில்லை என்பதை உன் மூலம்தான் நான் கற்றுக் கொண்டேன்.
எனக்கு வாசிக்கும் பழக்கத்தை கற்றுத் தந்தவனும் நீயே!
கவிதை வாசத்தை காட்டித் தந்தவனும் நீயே!
நீ படித்துப் போட்ட "சிறுவர்மலர்" நான் வாசித்த முதல் பாடபுத்தகமில்லாத புத்தகம்.
அதன் பிறகு சிறுவர்மலர் வந்தால் என் வாசிப்புக்கு பின்பே உன்னை வந்தடையும்...
நாட்கள் நகர நகர சிறுவன் நான் வளர்ந்து
பன்னிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு பொழுது
போகாமல் உன் அனுமதியின்றி உன் பெட்டியில் கிடந்த சில நாட்குறிப்புகளை படிக்க எடுக்கிறேன்.
அந்த நாள் இன்றும் என் நினைவில் பூத்து நிற்கிறது.
நம் வீட்டு மொட்டைமாடியில் கொய்யா மர நிழலில்
யாருக்கும் தெரியாமல் உன் நாட்குறிப்புகள் சிலவற்றை எடுத்து வந்து படிக்கத் துவங்குகிறேன்....
"அடுத்தவர் டைரியை அனுமதியின்றி படிப்பது மனச்சட்டப்படி குற்றம்" என்கிற உன் வாசகத்தையும்
மீறி அன்று உன் நாட்குறிப்புக்குள் என் விழிகளால் நடக்க ஆரம்பிக்கிறேன்.
அன்று என்னுள் ஏற்பட்ட மாற்றம்...
முதல் முதலில் காதலியின் உதடுகளால் "உன்னை நான் நேசிக்கிறேன்" என்று கேட்கையில் உடல் புல்லரித்துப் போகுமே அதை விட ஆயிரம் மடங்கு
ஆனந்த வெள்ளத்தில் தத்தளித்தேன்.
அன்றுதான் உன் கவிதைகளை முதல்முதலில் படித்தேன்.
உனக்கு இவ்வளவு அற்புதமான தமிழாற்றல் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டதும் அன்றுதான்.
அதுவரை எனக்கு அண்ணனாய் இருந்தவன் அன்றுதான் ஆசானாய் உயர்ந்தாய்!
எனக்குள் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கியது ,உனக்குத் தெரியாமலேயே நீ எனக்கு அறிமுகம் செய்து வைத்த என்னுடைய மற்றொரு முகம்-- கவிதை!
அதன்பின்பு நீ சேமித்த வைத்திருந்த கவிதைப் புத்தகங்கள் இன்றி நான் உண்டதில்லை,உறங்கியதில்லை...
இன்று என் பேனாவில் வழிகின்ற வார்த்தைகள் கவிதை நதியாய் மாறுவதற்கு நதிமூலமானவன் நீ.
உன்னிடம் கேட்க நினைத்த சில கேள்விகளை
இன்று கேட்கிறேன்...
ஆழ்கடலில் கிடக்கின்ற விலைமதிப்பில்லாத முத்துக்கள் மாதிரி வெளியில் தெரியாமல் கவிதை
நோட்டில் உன் கவிதைமலர்கள் ஓய்வெடுக்கும் காரணம் என்ன?
வாழ்க்கை உன் மீது சுமத்திய கடமைகளை நீ சுமந்து நடந்ததில் நசுங்கிப்போயினவோ உன்
கவிப்பூக்கள்?
உன் உணர்வுகளை இந்தச் சமூகம் புரிந்து கொள்ளாமல் காயப்படுத்திவிடும் என்கிற தவிப்பினால் நிறுத்திவிட்டாயோ கவிதையுடனான உன் பந்தத்தை?
இந்தக் கேள்விகளுக்கு என்னால் விடையளிக்க ஒரே ஒரு வகையில் முடியும் அண்ணா.
கவிதை நோட்டில் உறங்குகின்ற உன் கவிதைகளை
அச்சில் ஏற்றி உலகிற்கு நான் அறிமுகம் செய்து வைப்பேன்.
அதன்பின்...
இந்தச் சமூகம் பூக்கள் தூவினால் உன் மீது
தூவ செய்வேன். முட்கள் எறிந்தால் உன் கேடயமாக நான் மாறுவேன்.
எனக்கு நிழல் தருகின்ற மரமாய் நீ இருக்கிறாய்.
உனக்கு மழை தருகின்ற மேகமாய் நானிருப்பேன் என்கிற அசைக்கமுடியாத நம்பிக்கையில்....
நன்றியுடன்+பாசமுடன்,
உன் தம்பி.
நிலாரசிகன்.
Labels:
கவிதைகள்
Monday, November 28, 2005
என் நினைவோடையில் நீந்துகின்ற மீன்கள்...
இது நான் கடந்து வந்த பாதையில் சந்தித்த மறக்க முடியாத சில இதயங்களைப் பற்றிய பதிவுகள்..
1.தொபரா டீச்சர்:-
என் விரல் பிடித்து அ,ஆ எழுத சொல்லித் தந்த என் முதல் வகுப்பு
ஆசிரியை இவர்.
தோளில் புத்தகப்பையுடன்,எண்ணெய் தேய்த்து வகிடெடுத்து சீவிய தலையுடன்
பள்ளிச் சென்று வந்த பசுமையான காலம் அது.
பள்ளிச் செல்ல மறுத்து அடம்பிடிக்கும் குழந்தைகள் பார்த்திருப்பீர்கள்.
பள்ளிச் செல்ல அடம்பிடிக்கும் குழந்தை கண்டதுண்டா?
நான் அடம்பிடித்திருக்கிறேன்...
எங்கள் கிராமத்தில் முதல் முதலில் துவக்கப்பட்ட ஆங்கிலப் பள்ளி அது.
அதில்தான் என்னைச் சேர்த்தார்கள்...
அது ஒரு பெரிய பங்களா. அதை பள்ளியாக மாற்றி இருந்தார்கள்.
(இன்று அதை மாற்றி ஒரு கணிப்பொறி மையம் வந்துவிட்டது...அந்த இடத்தை
கடக்கும் போதெல்லாம் மனம் கனமாகி விழியோரம் வழிந்துவிடும்)
எங்கள் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை இருந்தது.
எங்கள் வகுப்புக்கு பலர் ஆசிரியர்களாக வந்துச் சென்றனர்...ஆனால் இந்தச் சிறிய
இதயத்தின் மிகப்பெரிய சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர் தொபரா டீச்சர் மட்டும்தான்.
அம்மா நியாபகம் வந்து அழுகின்ற குழந்தைகளை அன்போடு அணைத்து,கண்ணீர் துடைத்து நேசத்துடன் பாடம் நடத்துகின்ற ஒரு ஜீவன் சிறுவகுப்பு ஆசிரியர்கள்
மட்டும்தானே?
எத்தனையோ குழந்தைகள் பள்ளி என்று மறந்து "அம்மா" என்று அழைப்பதெல்லாம் அந்த அன்பான ஜீவன்களைப் பார்த்துதான்.
செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள்...
தெய்வமே செய்கின்ற தொழில்தானோ ஆசிரிப்பணி?
எங்கள் தொபரா டீச்சர் அன்பானவர்.
அவரைப் போலவே அவரது கையெழுத்தும் மிகவும் அழகாய் இருக்கும்.
மற்றவர்களை விட அவர் என்னிடம் மிகவும் பாசமாக இருந்ததாக பட்டதுஅந்த புரியாத வயதில்.
என்னால் என்றுமே மறக்க முடியாத நிகழ்வு ஒன்று நடந்தது.
டீச்சர் உங்களுக்கு நினைவிருக்கிறதா?
எளிதில் கோபப்படாத நீங்கள் ஒருநாள் என்னைத் திட்டிவிட்டீர்கள்.
பனித்துளி விழுந்தால் பூக்கள் தாங்கிக்கொள்ளும். ஆனால் இந்தச் சின்னப்பூவின் மேல் பாறை அல்லவா விழுந்தது...
உடைந்து போன நான் வகுப்பு நடக்கும்போதே வீட்டிற்கு ஓடிவிடுகிறேன்.
எல்லோரிடமும் நீங்கள் என்னைத் திட்டியதைச் சொல்லி அழுகிறேன்.
அதன் பின் என் வீட்டினர் என்னை சமாதானப்படுத்தி பள்ளிக்கு அழைத்துவந்து விட்டுச் சென்றனர்...
அப்போது மதியவேளை....கொண்டுவந்த சாப்பாடு பாத்திரம் திறந்துவரிசையாய் எல்லோருடனும் அமர்ந்து சாப்பிட ஆரம்பிக்கிறேன்...
அங்கே நீங்கள் வந்தீர்கள்....
செதுக்குகின்ற சிற்பத்திற்கு வலிக்கும் என்று உளிக்கு தெரியாதா என்ன!
அன்றுதான் முதல் முதலில் உங்கள்கண்கள் கலங்கியதை கண்டேன்....(இந்த நிமிடமும்..இதை எழுதுகின்றஇந்த நொடியிலும் என் விழியோரம் நீர்த்துளிகள்...)
என்னை அன்போடு அணைத்துக்கொண்டீர்கள்...எனக்கு அந்த நேசத்தின்அணைப்பை வார்த்தைகளில் எழுத தெரியவில்லை டீச்சர்.
அதுநாள் வரை எனக்கு அறிவூட்டியவர்கள் அன்று எனக்குஉணவூட்டி உயிர்மலரச்செய்தீர்கள்.
நாட்கள் நதியாய் நகரத் தொடங்கியதில் நான் உயர்நிலைப்பள்ளிக்குமாறினேன்....
புது நண்பர்கள்...புது பள்ளி....என்று வந்த மாற்றத்தில் உங்களை நான்மறந்து போனேன்....
அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்...
என் தோழன் ஒருவன் வந்து என் கையில் ஒரு திருமண பத்திரிக்கைதிணித்துச் சென்றான்...
பிரித்துப் பார்த்தேன்....உங்கள் திருமண அழைப்பிதழ் அது....
ஏறக்குறைய ஏழுவருடங்களாக என் நினைவில் இருந்தே மறைந்து விட்ட உங்கள் பெயரை அன்று அந்த பத்திரிக்கையில் பார்த்தேன்.
என்னை மறக்காமல் நீங்கள் பத்திரிக்கை அனுப்பி இருந்தது கண்டு சில நிமிடங்கள் என்னால் பேச முடியவில்லை டீச்சர்.
அன்று விழுந்த உங்கள் அன்பு நினைவுவிதை விருட்சமாக வளர்ந்து இன்னும் பூக்கள் சிந்திக்கொண்டிருக்கிறது என் இதயத்தில்.
உங்களை சந்தித்து பதினாறு வருடங்களுக்கு மேலாகிவிட்டது....நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள் என்றுகூட எனக்குத் தெரியாது.
எனக்கு ஒரே ஒரு ஆசை இருக்கிறது டீச்சர்.
என்றாவது உங்களை சந்திக்க நேர்ந்தால்...
எனக்கு தமிழை அறிமுகப்படுத்திய உங்களிடம் என் கவிதைகளை எல்லாம்படித்துக் காண்பிக்க வேண்டும்..
படித்து முடித்த பின் மலருகின்ற உங்கள் விழிகளில் என் உயிர்கரைய வேண்டும்.
என்றாவது இதைப் படித்து என் பெயர் கண்டு எனை நினைவுகூர்ந்து நீங்கள் கண்டுபிடித்தால் அதுபோதும் எனக்கு.
கொஞ்சம் அழுவேண்டும் இப்போது நான்...இது கவலைக்கண்ணீரோ ஆனந்தக் கண்ணீரோ அல்ல.
ஒரு பெயர்தெரியாத பாசத்தின் வெளிப்பாடு...
பழைய பாசநினைவில் மூழ்கியபடி...
நிலாரசிகன்.
1.தொபரா டீச்சர்:-
என் விரல் பிடித்து அ,ஆ எழுத சொல்லித் தந்த என் முதல் வகுப்பு
ஆசிரியை இவர்.
தோளில் புத்தகப்பையுடன்,எண்ணெய் தேய்த்து வகிடெடுத்து சீவிய தலையுடன்
பள்ளிச் சென்று வந்த பசுமையான காலம் அது.
பள்ளிச் செல்ல மறுத்து அடம்பிடிக்கும் குழந்தைகள் பார்த்திருப்பீர்கள்.
பள்ளிச் செல்ல அடம்பிடிக்கும் குழந்தை கண்டதுண்டா?
நான் அடம்பிடித்திருக்கிறேன்...
எங்கள் கிராமத்தில் முதல் முதலில் துவக்கப்பட்ட ஆங்கிலப் பள்ளி அது.
அதில்தான் என்னைச் சேர்த்தார்கள்...
அது ஒரு பெரிய பங்களா. அதை பள்ளியாக மாற்றி இருந்தார்கள்.
(இன்று அதை மாற்றி ஒரு கணிப்பொறி மையம் வந்துவிட்டது...அந்த இடத்தை
கடக்கும் போதெல்லாம் மனம் கனமாகி விழியோரம் வழிந்துவிடும்)
எங்கள் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை இருந்தது.
எங்கள் வகுப்புக்கு பலர் ஆசிரியர்களாக வந்துச் சென்றனர்...ஆனால் இந்தச் சிறிய
இதயத்தின் மிகப்பெரிய சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர் தொபரா டீச்சர் மட்டும்தான்.
அம்மா நியாபகம் வந்து அழுகின்ற குழந்தைகளை அன்போடு அணைத்து,கண்ணீர் துடைத்து நேசத்துடன் பாடம் நடத்துகின்ற ஒரு ஜீவன் சிறுவகுப்பு ஆசிரியர்கள்
மட்டும்தானே?
எத்தனையோ குழந்தைகள் பள்ளி என்று மறந்து "அம்மா" என்று அழைப்பதெல்லாம் அந்த அன்பான ஜீவன்களைப் பார்த்துதான்.
செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள்...
தெய்வமே செய்கின்ற தொழில்தானோ ஆசிரிப்பணி?
எங்கள் தொபரா டீச்சர் அன்பானவர்.
அவரைப் போலவே அவரது கையெழுத்தும் மிகவும் அழகாய் இருக்கும்.
மற்றவர்களை விட அவர் என்னிடம் மிகவும் பாசமாக இருந்ததாக பட்டதுஅந்த புரியாத வயதில்.
என்னால் என்றுமே மறக்க முடியாத நிகழ்வு ஒன்று நடந்தது.
டீச்சர் உங்களுக்கு நினைவிருக்கிறதா?
எளிதில் கோபப்படாத நீங்கள் ஒருநாள் என்னைத் திட்டிவிட்டீர்கள்.
பனித்துளி விழுந்தால் பூக்கள் தாங்கிக்கொள்ளும். ஆனால் இந்தச் சின்னப்பூவின் மேல் பாறை அல்லவா விழுந்தது...
உடைந்து போன நான் வகுப்பு நடக்கும்போதே வீட்டிற்கு ஓடிவிடுகிறேன்.
எல்லோரிடமும் நீங்கள் என்னைத் திட்டியதைச் சொல்லி அழுகிறேன்.
அதன் பின் என் வீட்டினர் என்னை சமாதானப்படுத்தி பள்ளிக்கு அழைத்துவந்து விட்டுச் சென்றனர்...
அப்போது மதியவேளை....கொண்டுவந்த சாப்பாடு பாத்திரம் திறந்துவரிசையாய் எல்லோருடனும் அமர்ந்து சாப்பிட ஆரம்பிக்கிறேன்...
அங்கே நீங்கள் வந்தீர்கள்....
செதுக்குகின்ற சிற்பத்திற்கு வலிக்கும் என்று உளிக்கு தெரியாதா என்ன!
அன்றுதான் முதல் முதலில் உங்கள்கண்கள் கலங்கியதை கண்டேன்....(இந்த நிமிடமும்..இதை எழுதுகின்றஇந்த நொடியிலும் என் விழியோரம் நீர்த்துளிகள்...)
என்னை அன்போடு அணைத்துக்கொண்டீர்கள்...எனக்கு அந்த நேசத்தின்அணைப்பை வார்த்தைகளில் எழுத தெரியவில்லை டீச்சர்.
அதுநாள் வரை எனக்கு அறிவூட்டியவர்கள் அன்று எனக்குஉணவூட்டி உயிர்மலரச்செய்தீர்கள்.
நாட்கள் நதியாய் நகரத் தொடங்கியதில் நான் உயர்நிலைப்பள்ளிக்குமாறினேன்....
புது நண்பர்கள்...புது பள்ளி....என்று வந்த மாற்றத்தில் உங்களை நான்மறந்து போனேன்....
அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்...
என் தோழன் ஒருவன் வந்து என் கையில் ஒரு திருமண பத்திரிக்கைதிணித்துச் சென்றான்...
பிரித்துப் பார்த்தேன்....உங்கள் திருமண அழைப்பிதழ் அது....
ஏறக்குறைய ஏழுவருடங்களாக என் நினைவில் இருந்தே மறைந்து விட்ட உங்கள் பெயரை அன்று அந்த பத்திரிக்கையில் பார்த்தேன்.
என்னை மறக்காமல் நீங்கள் பத்திரிக்கை அனுப்பி இருந்தது கண்டு சில நிமிடங்கள் என்னால் பேச முடியவில்லை டீச்சர்.
அன்று விழுந்த உங்கள் அன்பு நினைவுவிதை விருட்சமாக வளர்ந்து இன்னும் பூக்கள் சிந்திக்கொண்டிருக்கிறது என் இதயத்தில்.
உங்களை சந்தித்து பதினாறு வருடங்களுக்கு மேலாகிவிட்டது....நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள் என்றுகூட எனக்குத் தெரியாது.
எனக்கு ஒரே ஒரு ஆசை இருக்கிறது டீச்சர்.
என்றாவது உங்களை சந்திக்க நேர்ந்தால்...
எனக்கு தமிழை அறிமுகப்படுத்திய உங்களிடம் என் கவிதைகளை எல்லாம்படித்துக் காண்பிக்க வேண்டும்..
படித்து முடித்த பின் மலருகின்ற உங்கள் விழிகளில் என் உயிர்கரைய வேண்டும்.
என்றாவது இதைப் படித்து என் பெயர் கண்டு எனை நினைவுகூர்ந்து நீங்கள் கண்டுபிடித்தால் அதுபோதும் எனக்கு.
கொஞ்சம் அழுவேண்டும் இப்போது நான்...இது கவலைக்கண்ணீரோ ஆனந்தக் கண்ணீரோ அல்ல.
ஒரு பெயர்தெரியாத பாசத்தின் வெளிப்பாடு...
பழைய பாசநினைவில் மூழ்கியபடி...
நிலாரசிகன்.
Labels:
கவிதைகள்
Thursday, November 10, 2005
பெண்
பருவம்-1.
ரெட்டை ஜடை,
பட்டுப்பாவாடை,
கண்ணாடி வளையல்,
நாய்க்குட்டியின் சினேகிதி.
பருவம் -2.
மார்கழிக் கோலம்,
தாவணிக் கனவுகள்,
குனிந்த பார்வை,
சத்தமில்லாத சிரிப்பு,
கண்ணாடியின் சினேகிதி.
பருவம்-3.
இடுப்பில் குழந்தை,
நெஞ்சில் கணவன்,
தலைமீது மாமியார்,
சம்பளமில்லா வேலைக்காரி,
சமையலறையின் சினேகிதி.
பருவம்-4.
பிள்ளைக்காக பிராத்தனை,
சாய்வு நாற்காலி,
பழைய நினைவுகள்,
தோட்டத்துச் செடியின் சினேகிதி.
ஜன கண மன...
ரெட்டை ஜடை,
பட்டுப்பாவாடை,
கண்ணாடி வளையல்,
நாய்க்குட்டியின் சினேகிதி.
பருவம் -2.
மார்கழிக் கோலம்,
தாவணிக் கனவுகள்,
குனிந்த பார்வை,
சத்தமில்லாத சிரிப்பு,
கண்ணாடியின் சினேகிதி.
பருவம்-3.
இடுப்பில் குழந்தை,
நெஞ்சில் கணவன்,
தலைமீது மாமியார்,
சம்பளமில்லா வேலைக்காரி,
சமையலறையின் சினேகிதி.
பருவம்-4.
பிள்ளைக்காக பிராத்தனை,
சாய்வு நாற்காலி,
பழைய நினைவுகள்,
தோட்டத்துச் செடியின் சினேகிதி.
ஜன கண மன...
Labels:
கவிதைகள்
நான் பெத்த மகளே...
நீ பொறந்தநாலு மாசத்துல
காது குத்த போகையில
கண்ணு கலங்கி கோயில்
தூணுக்கு பின்னாலகாணாம
போனவுக....
சிலேட்டு குச்சிதிங்குற
வயசுல வேகாதவெயிலுல
அஞ்சுமையிலு அலைஞ்சி
அய்யனாரு கடையில
நோட்டுப் புத்தகம்
வாங்கியார போனவுக...
அம்மன் கோவில் திருவிழாவுல
பலூனுவாங்க போன புள்ள
அரைமணி கழிச்சுவந்த நாளுல
என்னாச்சோ ஏதாச்சோன்னு
சிங்கத்துக்கு பயப்படாத
எம் மகராசா சின்னபுள்ள
உனக்காக பயந்து போனவுக....
ரெட்ட ஜடை போடுறவயசுல
பொட்ட புள்ளஉனக்குபட்டுத்
தாவணிவாங்கியார நடந்தே
பட்டணம்போனவுக...
வாசல்லகோலம் போடபோன
புள்ளமனசுல கோலம்போட்டு
போனானே ஒரு வெளங்காத பய..
சடங்கான சேதியஆத்தாக்கிட்ட
சொல்லாம அப்பங்கிட்ட
சொன்னபாசங்கெட்ட புள்ள,
காதலிச்ச கருமத்தயாருகிட்டயும்
சொல்லாமபோனியே!
வேற சாதி பையனாஇருந்தாலும்
பெத்தபுள்ள உம்பட்டு
மனசுபட்டுருக்கூடாதுன்னு
எம் மகராசாசம்மதிச்சிருப்பாகளே….
அவசரப்பட்டு போயிட்டியே..
உன்னப் பார்க்கஅவசரப்பட்டு
எட்டரை மாசத்துல
நா பெத்தமரிக்கொழுந்தே!
ஊரெல்லாம் ஒண்ணுக்கூடிசிரிக்க,
ஓடிப்போன உன்னால உத்திரத்துல
தொங்கிஎம் பொட்டு அழிச்சிபோனவுக...
நாப்பது வருசம்நாயா
அலைஞ்சுஎறும்பா சேர்த்துவச்ச
நாப்பது காணிநிலத்தசாகப்போற
நேரத்துலபொறக்க போறஉம் புள்ளைக்கு
எழுதிவைச்சுபுட்டு போனவுக...
அப்பஞ் சாவுக்குவராத
வெக்கம் கெட்டபுள்ள..
ஆத்தா நா நிம்மதியாபாடையில
போக...
பத்திரம் தொலையும்முன்னே
பத்திரமா வந்திடடி…
காது குத்த போகையில
கண்ணு கலங்கி கோயில்
தூணுக்கு பின்னாலகாணாம
போனவுக....
சிலேட்டு குச்சிதிங்குற
வயசுல வேகாதவெயிலுல
அஞ்சுமையிலு அலைஞ்சி
அய்யனாரு கடையில
நோட்டுப் புத்தகம்
வாங்கியார போனவுக...
அம்மன் கோவில் திருவிழாவுல
பலூனுவாங்க போன புள்ள
அரைமணி கழிச்சுவந்த நாளுல
என்னாச்சோ ஏதாச்சோன்னு
சிங்கத்துக்கு பயப்படாத
எம் மகராசா சின்னபுள்ள
உனக்காக பயந்து போனவுக....
ரெட்ட ஜடை போடுறவயசுல
பொட்ட புள்ளஉனக்குபட்டுத்
தாவணிவாங்கியார நடந்தே
பட்டணம்போனவுக...
வாசல்லகோலம் போடபோன
புள்ளமனசுல கோலம்போட்டு
போனானே ஒரு வெளங்காத பய..
சடங்கான சேதியஆத்தாக்கிட்ட
சொல்லாம அப்பங்கிட்ட
சொன்னபாசங்கெட்ட புள்ள,
காதலிச்ச கருமத்தயாருகிட்டயும்
சொல்லாமபோனியே!
வேற சாதி பையனாஇருந்தாலும்
பெத்தபுள்ள உம்பட்டு
மனசுபட்டுருக்கூடாதுன்னு
எம் மகராசாசம்மதிச்சிருப்பாகளே….
அவசரப்பட்டு போயிட்டியே..
உன்னப் பார்க்கஅவசரப்பட்டு
எட்டரை மாசத்துல
நா பெத்தமரிக்கொழுந்தே!
ஊரெல்லாம் ஒண்ணுக்கூடிசிரிக்க,
ஓடிப்போன உன்னால உத்திரத்துல
தொங்கிஎம் பொட்டு அழிச்சிபோனவுக...
நாப்பது வருசம்நாயா
அலைஞ்சுஎறும்பா சேர்த்துவச்ச
நாப்பது காணிநிலத்தசாகப்போற
நேரத்துலபொறக்க போறஉம் புள்ளைக்கு
எழுதிவைச்சுபுட்டு போனவுக...
அப்பஞ் சாவுக்குவராத
வெக்கம் கெட்டபுள்ள..
ஆத்தா நா நிம்மதியாபாடையில
போக...
பத்திரம் தொலையும்முன்னே
பத்திரமா வந்திடடி…
Labels:
கவிதைகள்
Thursday, May 12, 2005
அம்மா..
என் விரலில் பட்ட
காயத்திற்கு
மருந்துவைத்து கட்டும்போது
தெரிகிறது...
அம்மாவின் முகத்தில்
வலி.
காயத்திற்கு
மருந்துவைத்து கட்டும்போது
தெரிகிறது...
அம்மாவின் முகத்தில்
வலி.
Labels:
கவிதைகள்
புல்தரையும் நானும்..
x
சிறிய வயதில்சினிமாவில்தான்
முதன்முதலில்புல்தரையை
பார்த்து வியந்தேன்..
ஒரு நாளாவது புல்தரையில்
அமரவேண்டும் என்கிற என்
ஆசை அரசியல்வாதியின்
நாற்காலி ஆசையைவிட
அதிகமாகிப்போனது..
உயர்கல்விக்காக நகரம்வந்தபோது
நண்பர்கூட்டத்தின்கிண்டலுக்கு
நடுவிலும்பூங்கா
ஒன்றில் புல்தரையைக்கண்டவுடன்
அம்மாவின் மடியில்
உட்காரஓடும் குழந்தையாய்ஓடிச்
சென்று அமர்ந்தேன்..
புற்களின் கிரீடமாய்
இருந்தபனித்துளியிடம் நலம்விசாரித்தேன்..
இப்படியாக,
எவ்வளவுதான்புல்தரையை
நேசித்தாலும் வராத
காதலிக்காக ஒரு
மணிநேரமாக காத்திருக்கையில்
புற்களைபிய்த்து
எறிந்ததில்மறந்தேபோனது
புல்லின்புனிதம்!
சிறிய வயதில்சினிமாவில்தான்
முதன்முதலில்புல்தரையை
பார்த்து வியந்தேன்..
ஒரு நாளாவது புல்தரையில்
அமரவேண்டும் என்கிற என்
ஆசை அரசியல்வாதியின்
நாற்காலி ஆசையைவிட
அதிகமாகிப்போனது..
உயர்கல்விக்காக நகரம்வந்தபோது
நண்பர்கூட்டத்தின்கிண்டலுக்கு
நடுவிலும்பூங்கா
ஒன்றில் புல்தரையைக்கண்டவுடன்
அம்மாவின் மடியில்
உட்காரஓடும் குழந்தையாய்ஓடிச்
சென்று அமர்ந்தேன்..
புற்களின் கிரீடமாய்
இருந்தபனித்துளியிடம் நலம்விசாரித்தேன்..
இப்படியாக,
எவ்வளவுதான்புல்தரையை
நேசித்தாலும் வராத
காதலிக்காக ஒரு
மணிநேரமாக காத்திருக்கையில்
புற்களைபிய்த்து
எறிந்ததில்மறந்தேபோனது
புல்லின்புனிதம்!
Labels:
கவிதைகள்
Subscribe to:
Posts (Atom)