Thursday, May 12, 2005

புல்தரையும் நானும்..

x

சிறிய வயதில்சினிமாவில்தான்
முதன்முதலில்புல்தரையை
பார்த்து வியந்தேன்..
ஒரு நாளாவது புல்தரையில்
அமரவேண்டும் என்கிற என்
ஆசை அரசியல்வாதியின்
நாற்காலி ஆசையைவிட
அதிகமாகிப்போனது..
உயர்கல்விக்காக நகரம்வந்தபோது
நண்பர்கூட்டத்தின்கிண்டலுக்கு
நடுவிலும்பூங்கா
ஒன்றில் புல்தரையைக்கண்டவுடன்
அம்மாவின் மடியில்
உட்காரஓடும் குழந்தையாய்ஓடிச்
சென்று அமர்ந்தேன்..
புற்களின் கிரீடமாய்
இருந்தபனித்துளியிடம் நலம்விசாரித்தேன்..
இப்படியாக,
எவ்வளவுதான்புல்தரையை
நேசித்தாலும் வராத
காதலிக்காக ஒரு
மணிநேரமாக காத்திருக்கையில்
புற்களைபிய்த்து
எறிந்ததில்மறந்தேபோனது
புல்லின்புனிதம்!

2 comments:

Anonymous said...

en piriya kavinjar vairamuthu
atharku karanam en nila raseegan

endrum anbudan

un thozhi

kasturi frm malaysia

said...

Font color - மாத்துங்க. வெள்ளை நிறத்தில இருக்கு. பதிவு தெரியல.