Sunday, February 15, 2009

ப்ரியாக்குட்டி நான்காம் வகுப்பு "ஏ" பிரிவு - சிறுகதை

http://nilaraseegansirukathaigal.blogspot.com/2009/02/blog-post.html

Saturday, February 07, 2009

துயர்மிகுந்த இரவு இதுவாகத்தானிருக்கும்

தொட்டில் குழந்தையொன்று
தவறி
விழுவதை காண நேர்கின்ற
தாயின் வலியைவிடவும்
அதிகமான வலியை இந்த இரவு
எனக்குத் தருகிறது.
ஒற்றை அறையில்
இறுக மூடிய சன்னலோரம்
கண்களில் வழிகின்ற நீருடன்
அமர்ந்திருக்கிறேன்.
துளிர்த்த அன்பிலும் தூசிகள்
படர்ந்துவிட்ட பின்
இது துயர்மிகுந்த இரவுதான்.

Friday, February 06, 2009

படித்ததில் பிடித்தது:

"அன்பு யார் மீதும் காட்டலாம்.ஆனால் கோபம் உயிருக்கு மேலான உரிமை உள்ளவர்கள் மீது மட்டுமே காட்டமுடியும்."

Wednesday, February 04, 2009

மனசை பற்றிய சில குறிப்புகளும்,கேள்விகளும்...


1.குரங்கின் பரிணாமம் மனிதனாக மாறியது.மனசை தவிர.
2.மனதிற்கு காயங்களை தந்துவிட்டு கண்ணீரை மட்டும் சிந்துகிறது விழிகள்.
3.உடலில் எங்கிருக்கிறது இந்த வெட்கம் கெட்ட மனசு?
4.ரசனைகளை நசுக்கும் கால்களின் பாதைகளிலும் பூக்கள் மலரவே வாழ்த்துகிற மனசை என்னசொல்லி திட்டுவது?
5.தவிர்த்தலை பரிசளிக்கும் இதயங்களை மறக்கும் மனசு எங்கே கிடைக்கும்?
6.ஊனத்தை முன்நிறுத்தி நிராகரித்த வலி மறக்க தேவை மனமா,பணமா?
7.உடைந்த கண்ணாடியில் ஓராயிரம் பிம்பங்கள். உடைந்த மனசில் ஒரே ஒரு பிம்பம்.