Saturday, February 07, 2009

துயர்மிகுந்த இரவு இதுவாகத்தானிருக்கும்

தொட்டில் குழந்தையொன்று
தவறி
விழுவதை காண நேர்கின்ற
தாயின் வலியைவிடவும்
அதிகமான வலியை இந்த இரவு
எனக்குத் தருகிறது.
ஒற்றை அறையில்
இறுக மூடிய சன்னலோரம்
கண்களில் வழிகின்ற நீருடன்
அமர்ந்திருக்கிறேன்.
துளிர்த்த அன்பிலும் தூசிகள்
படர்ந்துவிட்ட பின்
இது துயர்மிகுந்த இரவுதான்.

6 comments:

said...

ஒற்றை அறையில்
இறுக மூடிய சன்னலோரம்
கண்களில் வழிகின்ற நீருடன்
அமர்ந்திருக்கிறேன்.
துளிர்த்த அன்பிலும் தூசிகள்
படர்ந்துவிட்ட பின்
இது துயர்மிகுந்த இரவுதான்

அருமையான வரிகள்
வாழ்த்துக்கள் நிலாரசிகன்...

said...

நல்ல வரிகள் நண்பரே
எதேட்சையாக இந்தப் பக்கம் வந்ததில், பார்த்தேன்.

//துளிர்த்த அன்பிலும் தூசிகள்
படர்ந்துவிட்ட பின்
இது துயர்மிகுந்த இரவுதான்.//

காலங்கள் தீர்மானிபதாயிருக்கிறது, அன்பின் நீட்சி

வாழ்த்துக்களோடு
ப.அருள்நேசன்

said...

//தாயின் வலியைவிடவும்
அதிகமான வலியை இந்த இரவு
எனக்குத் தருகிறது.//
அருமையான வரிகள்,வாழ்த்துகள்.

Anonymous said...

paditha pinbu manathu kannakirathu...

Arumai..

ippadikku,
Saran

said...

Excellent Nila,

said...

துயர்மிகுந்த கவிதையும் இதுவாகத்தான் இருக்கக்கூடும்...

வரிகள் அருமை !!