Friday, May 30, 2008
ஐ.பி.எல் கிரிக்கெட் - அரையிறுதி போட்டிகள் ஒரு அலசல்
சென்னை சூப்பர் கிங்ஸ்:
தட்டுத்தடுமாறி அரை இறுதி போட்டிக்குள் நுழைந்திருக்கும் அணி. இவர்களுக்கு பதில் மும்பை வந்திருக்கலாமே என்று அனைவரையும் வெறுப்புடன் முணுமுணுக்க வைத்தனர் சென்னை வீரர்கள். பெங்களூரிடம் பெற்ற மோசமான தோல்வி,ராஜஸ்தானிடம் போராடி தோல்வி என தொடர்ச்சியான தோல்விகளில் துவண்டிருந்த
அணி,டெக்கான் சார்ஜர்ஸை வென்ற ஒரே நம்பிக்கையுடன் அரையிறுதிக்குள் காலடி எடுத்துவைக்கிறது.
அரையிறுதியில் பலம்வாய்ந்த பஞ்சாப் அணியுடன் மோதவேண்டும். லீக் ஆட்டங்களில் இருமுறை சென்னையிடம் தோற்றதால் இம்முறை பதிலடி கொடுக்க காத்திருக்கிறது யுவராஜ் அணி.
பலம்:
வெற்றியோ தோல்வியோ எதற்கும் கவலையில்லை என்கிற கேப்டன் கூல் தோனி.
பந்துவீச்சு,பேட்டிங் இரண்டிலும் கலக்கும் மார்கல்.
பீல்டிங்,பேட்டிங் இரண்டிலும் அசத்தும் ரெய்னா.
பலவீனம்:
நிட்னி,பாலாஜி என இருவீரர்கள் "ஹாட்ரிக்" சாதனை செய்தும் அணியின் பந்துவீச்சு சரியில்லை.
கோனியை தவிர மற்றவர்களின் பந்துவீச்சு சிறப்பாக எடுபடவில்லை.
பிளம்மிங்,பட்டீல் சிறந்த தொடக்கம் தருவதில்லை.(ஒரு சில போட்டிகளை தவிர்த்து)
வெற்றி வாய்ப்பு: 50%.
தில்லி டேர்டெவில்ஸ்:
குறைவான புள்ளிகளுடன் அரையிறுதிக்குள் நுழைந்தாலும் பலம் வாய்ந்த அணிகளில் இதுவும் ஒன்று.
லீக் போட்டிகளில் ராஜஸ்தானிடம் ஒருவெற்றி ஒரு தோல்வி.
ராஜஸ்தானுக்கு கடுமையான நெருக்கடி கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.சோஹித் தன்வீர்,ஷான் வார்னே ஆகியோரின் பந்துவீச்சை சமாளித்து ரன்களை குவித்தால் இறுதிபோட்டிக்குள் நுழையலாம்.
பலம்:
அதிரடி சேவாக்,ரன்மெஷின் காம்பீர்,சிறந்த பந்துவீச்சாளர் மெக்ராத் மற்றும் இளம்வீரர் தவானின் பேட்டிங் & பீல்டிங்.
பலவீனம்:
டீவில்லியர்ஸ்,மாலிக்கின் சொதப்பலான பேட்டிங்கால் முதல் மூன்று வீரர்களை மட்டுமே நம்பியிருக்கிறது.
வெற்றி வாய்ப்பு: 40%
கிங்ஸ் XI பஞ்சாப்:
கடைசி லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை ஓட ஓட விரட்டி அடித்து கம்பீரமாக வலம் வரும் அணி.
ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்ற துடிக்கும் இளம் அணி. சென்னையை பழிதீர்க்க பசியுடன் காத்திருக்கிறார் யுவராஜ். ஆரஞ்சு தொப்பியை காம்பீரிடமிருந்து தட்டிப்பறித்த மார்ஷ் எதிரணிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்குகிறார். ராஜஸ்தானுக்கு எதிராக சதமடித்த திருப்தியில் அரையிறுதிக்குள் நுழைகிறார்.
பலம்:
மார்ஷ்,ஹோப்ஸ்,யுவராஜ்,சங்காக்கரா,ஜெயவர்தனே என்று பலம்பொருந்திய பேட்டிங் ஆர்டர்.
ஸ்ரீசாந்த்,பதான்,சாவ்லா என்று பலம்பொருந்திய பவுலிங்.
பலவீனம்:
Over confidence & வி.ஆர்.வி சிங்
வெற்றி வாய்ப்பு: 90%
ராஜஸ்தான் ராயல்ஸ்:
இந்த ஐ.பி.எல் போட்டிகளின் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய அணி.முதல் லீக் போட்டியில் தோற்றபோது யாரும் நினைக்கவில்லை இந்த அணி அரையிறுதிக்கு தகுதிபெறுமென்று. வார்னேயின் சிறப்பான கேப்டன்சியில் வீறு நடை போடுகிறது. தொட்டதெல்லாம் பொன் என்பதுபோல வார்னே செய்கின்ற புதுப்புது முயற்சிகள் அனைத்தும் வெற்றி கிடைத்திருக்கிறது. ஐ.பி.எல் கோப்பையை நெருங்குகிறார்கள் ராயல்ஸ் அணியினர்.
பலம்:
வார்னே,யூசூப் பதான்,ஸ்மித்,தன்வீர்,வாட்சன் (கிட்டதட்ட மொத்த அணியும்:)
பலவீனம்:
சிறப்பான தொடக்கத்தை ஸ்மித் தர தவறினால் நிறைய ரன்களை குவிக்குமா என்பது சந்தேகமே.
வெற்றி வாய்ப்பு: 95%
சென்னை அணி வெற்றி பெற என் வாழ்த்துக்கள் :)
Friday, May 23, 2008
குறுங்கவிதைகள் - பாகம் -5
1.குழாயடி சண்டை
தாகத்தில் தவித்தன
வரிசைக் குடங்கள்.
2.கிராமத்து வீட்டின்
நீரில்லா கிணற்றுக்குள்
தளும்புகிறது
பால்யத்தில் தொலைத்த
பந்துகளின் நினைவுகள்.
3.கல்நெஞ்சு மாமியார்
கண்ணீர் வடிக்கிறாள்
நெடுந்தொடருக்கு நன்றி.
4.தூண்டில்புழுவுக்காக அழுதது
மனம்
மீனைச் சுவைத்தபடி.
5.கொளுத்தும் வெயிலில்
விளையாடுகிறது நிலா
குழந்தையுருவில்.
6.உதிர்கின்ற பூக்களை
நிழல்கொண்டு தாங்குகிறது
மரம்.
7.இலவச தண்ணீர்பந்தலில்
விற்றுக்கொண்டிருந்தார்கள்
கட்சியை.
Tuesday, May 20, 2008
உயிரின் விசும்பல்...
விரல்பற்றிய இதயபகிர்வுகள்
ஏதுமற்ற என்னுலகை
பொய்மை நிறைந்த
உன் சொற்களால் நிரப்புகிறாய்.
விசும்புகின்ற உயிரின்
சத்தம் கேட்டபின்பும்
அலட்சிய பார்வையொன்றில்
தவிர்த்து
பிரிந்துசெல்கிறாய்.
என் கண்ணீர்த்துளி
பெருகி காலநதி
பெருவெள்ளமென ஓடுகிறது
தூரத்தில் எங்கோ
ஒரு மலர் உதிரும்
சப்தம் சன்னமாக கேட்க
துவங்குகையில் இருள்கிறது
என் வானம்.
Monday, May 19, 2008
குட்டிக் கவிதைகள் - பாகம் -4
1.உண்டியலில் விழுகின்றன
சில்லறைகள்.
பசியுடன் திருவோடு.
2. திருமணவீட்டில்
சரசரக்கும் பட்டுப்புடவைகளால்
பேசுகிறார்கள் பெண்கள்.
3.தோழன் அந்நியனானான்
கொலுசுகள் விலங்கானது
பாவாடை தாவணியானதால்.
Friday, May 16, 2008
கல்லூரித்தோழி..
கல்லூரிக்காலத்தில்
எப்போதும் என்னுடனிருந்தாய்..
தேர்வுகளில் நான் தேர்ச்சிபெற
கோயில்களில் தவமிருந்தாய்...
தோற்றபோதெல்லாம் தோள்தந்து
உற்சாகமூட்டும் தென்றலாயிருந்தாய்...
கல்லூரியின் கடைசிநாளில்
உணவருந்தாமல் கண்ணீர்சிந்தும்
சிலையாகியிருந்தாய்...
வருடங்கள் பல கடந்துவிட்டபின்
ஒரு ரயில்நிலையத்தில்
உன்னைச்சந்திக்கிறேன்...
என் நலம் விசாரித்து,
கைக் குழந்தையுடன்
கணவன் பின் செல்கிறாய்.
நகர்கின்ற ரயிலை
நோக்கி விரைந்தோடுகிறேன்
என் கல்லூரித்தோழியை
உன்னில் காணாத
கண்ணீருடன்.
Thursday, May 15, 2008
Aphorism - ஒரு முயற்சி
- படிக்கட்டில் உருண்டு இறந்த குழந்தையை நினைவூட்டுகிறது இலையில் இறங்கும் பனித்துளி..
- மலையுச்சியில் நின்று இவ்வுலகமே என் காலடியில் என்றேன்.சிரித்துக்கொண்டே நகர்ந்தன மேகங்கள்.
- தவறவிட்ட கண்ணாடியின் சில்லுகளை பொறுக்கினேன். முகம் காண்பித்தன சில. ரத்தம் கேட்டன சில.
- அம்மாவின் கண்ணீர்த்துளிக்குள் ஒளிந்திருக்கிறது அப்பாவின் முரட்டுத்தனமும் பிள்ளைகளின் இயலாமையும்.
- முட்டிக்காயத்தில் துடிக்கும் பிள்ளைக்கு மருந்திட ஓடும் தாயின் காதுகளுக்கு கேட்பதில்லை பசித்தழும் குழந்தையின் அழுகை சத்தம்.
Wednesday, May 14, 2008
ஐ.பி.எல். அணிகள் - ஒரு பார்வை.
இரவு எட்டுமணிக்கெல்லாம் வீட்டுக்குள் அடைந்துவிடுகிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள்.
சாலையில் போக்குவரத்துகூட குறைந்துவிட்டதாக சொல்கிறார்கள்.
எட்டு மணிக்கு "கனாக்காணும் காலங்கள்" பார்த்த காலமெல்லாம் பறந்தோடிவிட்டது.
காரணம் - ஐ.பி.எல்!! (Indian Premier League)
தினம் தினம் திருவிழா போல் நடந்துகொண்டிருக்கும் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள்
கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
மொத்தம் எட்டு அணிகள். 59 போட்டிகள். 44 நாட்கள்.
ஒவ்வொரு அணிகளை பற்றிய எனது பார்வையே இப்பதிவு.
ராயல் சேலன் ஜர்ஸ்:
ஏர்லைன்ஸ்/பீர் புகழ் விஜய் மல்லையாவின் அணி. $111 மில்லியன் செலவிட்டு இந்த அணியை வாங்கியதற்கு
இன்னும் சில விமானங்களை வாங்கியிருக்கலாம்.
இருபது ஓவர்கள் கொண்ட போட்டியில் அதிரடி வீரர்களை வாங்கியவர்கள் மத்தியில் "டெஸ்ட்" வீரர்களை
வாங்கி அடிவாங்கிகொண்ட அணி இது.
டிராவிட்,ஜாபர்,காலிஸ் போன்ற டெஸ்ட் வீரர்களை வைத்துக்கொண்டு இந்தப்போட்டியில் ஜெயிக்க நினைத்தது தவறு என்று மல்லையாவிற்கு தாமதமாக புரிந்திருக்கிறது.
இதன் CEO சாரு சர்மாவை நீக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த அணி விளையாடும் போட்டியை பார்ப்பதற்கு பதில் மெகாதொடரில் சிறிது நேரம் அழலாம்.
சிறந்த வீரர்: மார்க் பவுச்சர்
சிறந்த சொதப்பல்: காலிஸ்/திராவிட்
சிறந்த புதுமுக வீரர் :Virat Kohli.
டெக்கான் சார்ஜர்ஸ:
மிகவும் பலமான அணி;பல அதிரடி ஆட்டக்காரர்களை கொண்ட அணி, என்றெல்லாம்
வர்ணிக்கப்பட்டு பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி "டக் அவுட்" ஆன அணி இந்த டெக்கான் சார்ஜர்ஸ்.
"கில்லி" கில்கிறிஸ்ட், "Bang Bang" அப்ரிதி,"சிக்ஸர்" சைமண்ட்ஸ்,"மொட்டைபாஸ்" கிப்ஸ், "Very Very Special/Stylish" இலச்சுமணன், "இளம்புயல்" ரோஹித் சர்மா, நியுசிலாந்தின் "ஸ்டைரிஸ்", ஆர்.பி.சிங்,சமிந்தா வாஸ் என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இருந்தும் டெக்கான் தோல்விகளை அதிகம் கண்டுள்ளது.
ஐ.பி.எல் வரலாற்றின் மிக வேகமாக சதமடித்த கில்லியாலும்(42 பந்தில்) இந்த அணியை கரைசேர்க்க இயலவில்லை. காரணம் என்னவென்று யோசித்துபார்த்தால் ஒவ்வொருவரும் தனித்தனியே சிறந்த வீரர்களாக இருந்தும் ஒரு குழுவாக சேர்ந்து ஜெயிக்க இவர்களால் முடியவில்லை.
அரை இறுதி போட்டிக்கு தேர்வாகும் கனவு கனவாகவே போய்விட்டது.
சிறந்த வீரர் : ரோகித் சர்மா.
சிறந்த சொதப்பல்: அப்ரிதி.
சிறந்தா புதுமுக வீரர் :ஓஜ்ஹா(Ojha)
மும்பை இந்தியன்ஸ்:
"தல"சச்சின் இல்லாமல் விளையாடி வருகின்ற அணி.முதல் ஏழு போட்டிகள் முடிவடைந்த நிலையில் மூன்றில் மட்டுமே வெற்றி பெற்று தள்ளாடி வருகிறது.
சச்சின் இல்லாதது பெரும் இழப்பு.
ஜெயசூர்யா,போலாக்,உத்தப்பா இவர்களை நம்பியே களம் இறங்கும் அணி.
ஹர்பஜன்சிங்கின் வெளியேற்றம் பந்துவீச்சில் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.
அரை இறுதிக்கு முன்னேற ஏதேனும் அற்புதம் நிகழ வேண்டும்.
சிறந்த வீரர்: போலாக்
சிறந்த சொதப்பல் :ஜெயசூர்யா(ஒரு போட்டியை தவிர்த்து)
சிறந்த புதுமுக வீரர் : அபிசேக் நாயர்
தில்லி டேர்டெவில்ஸ்:
சேவாக்கின் அதிரடி,காம்பீரின் ரன்குவிப்பு,மெக்ராத்தின் மேஜிக் பெளலிங்,தவானின் திறமை,
திவாரியின் பீல்டிங் என்று கலக்கினாலும் ஆடிய ஒன்பது போட்டிகளில் நான்கில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது.
சேவாக் அடித்தால் வெற்றி. சேவாக் அவுட்டானால் தோல்வி என்கிற நிலை இருப்பதால் இந்த
அணி அரையிறுதிக்கு தகுதி பெறுமா என்பது சந்தேகமே.
குழுவாக செயல்பட்டால் மற்ற அணிகளை தூக்கி சாப்பிட்டுவிடுவார்கள் இந்த "டெவில்ஸ்" என்பதில் சந்தேகமில்லை.
சிறந்த வீரர்: காம்பீர்
சிறந்த சொதப்பல்: தினேஷ் கார்த்திக்
சிறந்த புதுமுக வீரர் :தவான்/திவாரி.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ்:
பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் அணி. ஒவ்வொரு போட்டிக்கும் மைதானம் வந்து உற்சாகப்படுத்தும் ஷாருக்கின் செயல் அணிக்கு மிகப்பெரிய "பூஸ்ட்".
பிரண்டன் மெக்கலம் முதல் போட்டியில் 73 பந்துகளில் அடித்த 158* ரன்கள் இருபதுஒவர் போட்டிகளில் ஒரு மிகச்சிறந்த சாதனை. (13 இமாலய சிக்ஸரும் இதிலடங்கும்)
கேப்டன் "தாதா" கங்குலி,ரிக்கி பாண்டிங்,உயர்ந்த மனிதன் இசாந்த் சர்மா,டேவிட் ஹஸ்ஸி,தாமதமாக அணியில் சேர்ந்து தான் விளையாடிய முதல்போட்டியிலேயே கலக்கிய "ராவல்பிண்டி எக்ஸ்பரஸ்" அக்தர் என்று நட்சத்திர வீரர்களின் பட்டியல் நீள்கிறது.
இனிவரும் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடினால் அரையிறுதிக்கு தகுதி பெறலாம்.
சிறந்த வீரர்:டேவிட் ஹஸ்ஸி
சிறந்த சொதப்பல்:முரளி கார்த்திக்
சிறந்த புதுமுகவீரர் :சாஹா/திண்டா.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
6 கோடி தோனி, "Hulk" ஹெயிடன்,மிஸ்டர் கிரிக்கெட் ஹஸ்ஸி,இளம்புயல் ரெய்னா,"இறுதி ஓவர் ஸ்பெசலிஸ்ட்" ஜோகிந்தர் சர்மா, சென்னைசிங்கம் பத்ரிநாத்,கோனி,"ஹாட்ரிக்" பாலாஜி என்று நட்சத்திர பட்டாளங்களுடன் களம் இறங்கி இருக்கும் அணி.
ஆடிய முதல் நான்கு போட்டிகளில் தொடர்ச்சியான வெற்றி.
அதன்பிறகு தொடர்ச்சியாக மூன்று தோல்வி.
பின் சுதாரித்து தொடர்ந்து இரண்டு வெற்றி என்று யூகிக்க முடியாத அதேசமயம் பலம்வாய்ந்த அணிகளுள் ஒன்றாக பவனி வருகிறது சென்னை அணி.
டிரம்ஸ் சிவமணி ஒவ்வொரு போட்டிக்கும் மைதானம் வந்து டிரம்ஸ் அடித்து தூள் கிளப்புக்கிறார்.
விஜய்,நயன் தாரா என சினிமா நட்சத்திரங்களும் கலந்துகொண்டு ஊக்கப்படுத்துகிறார்கள்.
கேப்டன் கூல் தோனியின் சிறப்பான வழிநடத்துதலால் இந்த அணிக்கு வெற்றிக்கான வாய்ப்பு அதிகம் எனலாம்.
சிறந்த வீரர்: தோனி/பாலாஜி
சிறந்த சொதப்பல்:பிளம்மிங்
சிறந்த புதுமுக வீரர்: கோனி.
கிங்ஸ் XI பஞ்சாப்:
ஆறுபந்தில் ஆறு சிக்ஸர் அடித்து தூள்பறத்திய யுவராஜ் சிங் கேப்டனாக உள்ள அணி.
துல்லியமான ஸ்விங் பத்துவீச்சால் எதிரணி வீரர்களில் ஸ்டம்புகளை பறக்க செய்யும் பதான் அணிக்கு மிகப்பெரிய பலம்.
"அழுமூஞ்சி" என்றாலும் பந்துவீச்சில் சிடுமூஞ்சியாக வலம்வரும் ஸ்ரீசாந்,
ரன் மெஷின் குமார சங்காக்கரா, புகழ்பெற்ற ஆஸ்திரேலிய வீரர் மார்ஷின் மகன் ஷான் மார்ஷின் அதிரடி
ஒவ்வொரு போட்டிக்கும் மைதானம் வந்து வீரர்களை உற்சாகப்படுத்தும் ப்ரீதி ஜிந்தாவின் கன்னக்குழி புன்னகை
என பஞ்சாப் அணி எதிரணிகளை பஞ்சாக ஊதித்தள்ளுகிறது.
வெற்றிபெரும் என எதிர்பார்க்கப்படும் அணிகளில் பஞ்சாப் முக்கியமான அணி.
சிறந்த வீரர்: ஷான் மார்ஷ்
சிறந்த சொதப்பல்: ஜெயவர்த்தனே
சிறந்த புதுமுக வீரர் :பியூஷ் சாவ்லா.
ராஜஸ்தான் ராயல்ஸ்:
கிரிக்கெட்டில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு இந்த அணி ஒரு மிகச்சிறந்த உதாரணம். Underdogs ஆக
அறியப்பட்ட அணி இன்று ஏழு வெற்றிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.
காரணம் - ஷான் வார்னே.
இளம் வீரர்களின் திறமை அறிந்து,அவர்களை தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தி வெற்றிக்கனிகளை சுவைக்க மிக முக்கிய காரணம் வார்னேயின் கேப்டன்ஸி.
முதல் போட்டியில் தோற்று பின் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வெற்றி பெற்ற அணி.
டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 17 ரன்கள் அடித்து அணி வெற்றி பெற
காரணமாக இருந்தவரும் வார்னேதான்.
யூசுப் பதானின் அதிரடி,கைப்பின் அசத்தல் பீல்டிங்,வார்னேவின் துல்லிய பந்துவீச்சு,வாட்சனின் ஆல்ரவுண்ட் திறமை,ஸ்மித்தின் அடித்தளம் அமைக்கும் பேட்டிங் போன்றவற்றால் ராஜஸ்தான் ராயல்ஸ் மிகச்சிறந்த
அணியாக விளங்குகிறது.
சிறந்த வீரர்: வார்னே/பதான்
சிறந்த சொதப்பல்: கம்ரான் அக்மல்
சிறந்த புதுமுக வீரர் :ஜடேஜா.
அடுத்த பதிவு அரையிறுதி போட்டிகளுக்கு முன் எழுதுகிறேன்
-நிலாரசிகன்.
Tuesday, May 13, 2008
கவிதை நூல் வெளியீடு (ஒரு பட்டாம்பூச்சியின் கனவுகள்)
#52C Basement
North Usman Road
T. Nagar
Chennai - 600017
Landmark: Opp ARR Complex,Near Panagal Park
Phone: 044-28158171, 28156006
2.Hikkin Bothams
3.AnyIndian Book shop,T.nagar
4.New Century book shop
5.Wisdom Educational Service
10/8, Dr.Nammalvar Street,
Triplicane,
Chennai-600005
Phone:044-28447476
Mobile:9382181319,9841162927
Email:wisdomedu2003@yahoo.co.in
LIST OF NEW CENTURY BOOK HOUSE (P) LTD., BRANCHES:
- NEW CENTURY BOOK HOUSE (P) LTD.,
NO.156/786, ANNA SALAI,
CHENNAI – 600 002.
PHONE: 044 – 2852 8351.
CONTACT PERSON: MR.A.AVUDAIAPPAN
MANAGER / 94449 08351.
- NEW CENTURY BOOK HOUSE (P) LTD.,
NO.25-26, MARUDEESWARAR
THIRUVANMIYUR, CHENNAI – 600 041.
PHONE: 044 – 2440 4873.
CONTACT PERSON: MR.N.GOPINATHAN
SR.MANAGER / 94440 14162.
- NEW CENTURY BOOK HOUSE (P) LTD.,
79-80,
PHONES: 0452 – 2344 106 / 2350 271.
CONTACT PERSON: MR.A.KRISHNAMURTHY
ZONAL MANGER / 94430 44106.
- NEW CENTURY BOOK HOUSE (P) LTD.,
NO.4, PERIYAR BUS STAND,
BHARATHI STATUE (SOUTH SIDE),
TIRUNELVELI – 627 003.
PHONE: 0462 – 2323 990.
CONTACT PERSON: MR.A.MURUGESAN
MANGER / 94434 96955
- NEW CENTURY BOOK HOUSE (P) LTD.,
NO.35,
DINDIGUL – 624 001.
PHONE: 0451 – 2432 172.
CONTACT PERSON: MR.KRISHNAKUMAR
MANGER / 94427 63247
- NEW CENTURY BOOK HOUSE (P) LTD.,
NOS.3 & 4, NEHRU STADIUM, V.O.C.PARK,
COMBATORE – 641 018.
PHONE: 0422 – 2380 554.
CONTACT PERSON: MR.N.A.AZEES
MANGER / 94423 44708
- NEW CENTURY BOOK HOUSE (P) LTD.,
NO.165/A,
PHONE: 0427 – 2450 817.
CONTACT PERSON: MR.A.GANESAN
MANAGER / 94433 24508.
- NEW CENTURY BOOK HOUSE (P) LTD.,
OLD BUS STAND (NEAR SELECT HOTEL),
HOSUR – 635 109.
PHONE: 04344 – 245726.
CONTACT PERSON: MR.KUMAR / INCHARGE.
- NEW CENTURY BOOK HOUE (P) LTD.,
OOTY – 643 001.
PHONE: 0423 – 2441 743.
CONTACT PERSON: MR.N.A.AZEES / MANAGER.
- NEW CENTURY BOOK HOUSE (P) LTD.,
NO.42/7, SINGARATHOPPU,
TRICHY – 620 008.
PHONE: 0431 – 2700 885.
CONTACT PERSON: MR.S.SARAVANAN
ZONAL MANGER / 94433 31371.
- NEW CENTURY BOOK HOUSE (P) LTD.,
NO.66,
C.P.I.SHOPPING COMPLEX,
MUDALIYARPET,
PHONE: 0413-2357 403.
CONTACT PERSON: MR.P.V.SUNDAR
MANAGER / 94433 22387.
- NEW CENTURY BOOK HOUSE (P) LTD.,
SHOP NOS.1 & 43, MUNICIPAL NEW SHOPPING COMPLEX,
PHONE: 0416 – 2234 495.
CONTACT PERSON: MR.ESURAJ / 94433 54495.
LANDMARK LIMITED BRANCHES IN CHENNAI :
NO.3,
CHENNAI – 600 034.
2. LANDMARK LIMITED,
MOUNT ROAD,
CHENNAI – 600 002.
3. LANDMARK LIMITED,
CHENNAI CITI CENTRE,
NO.3 & 4, DR.RADHAKRISHNAN SALAI,
MYLAPORE, CHENNAI – 600 004.
தமிழகத்தில் உள்ள அனைத்து ஹிக்கிங் பாதம்ஸ் மற்றும் நியூ சென்சுரி புக் ஹவுஸிலும் கிடைக்கும்.
உங்களது மேலான விமர்சனங்களுக்காக காத்திருக்கிறேன்.
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
Monday, May 12, 2008
ஒற்றைச் சிறகு..
வளர்த்துவந்த பிரியங்களை
வீதியில் வீசிவிட்டு
முகமில்லாமல்
திரும்பிச் செல்கிறாய்...
பின்னரும் உன் கையசைப்புக்காக
காத்திருக்கிறது
பழக்கப்பட்ட இதயம்.
பிரிகின்ற பொழுதின்
கனம் அதிகமானதாகவே இருக்கிறது
எப்போதும்.
நான் கொணர்ந்த குங்குமம்
அந்தி மழையில் கரைய,
வீடு நோக்கி நடக்கின்றன
உணர்வற்ற என் கால்கள்.
Wednesday, May 07, 2008
நேயா பெண்கள் மாத இதழில் என் கவிதைகள்.
நேயா பெண்கள் மாத இதழில்(மே 08 இதழ்) என்னுடைய மூன்று கவிதைகள் வெளியாகியுள்ளன.
Tuesday, May 06, 2008
குட்டிக் கவிதைகள் - பாகம் 3
குளக்கரை படிக்கட்டில்
கால்வழுக்கிய தடம்.
4.முல்லை மலர்ந்தும்
வரவில்லை மல்லிகை
வாடியது மலர்.
Friday, May 02, 2008
மொழியில்லாத் தருணங்கள்...
தளர்ந்த விரல்பிடியை நடுநிசியில்
இறுக்கிக்கொள்ளும் குழந்தையில்..
வெகுநாட்கள் கழித்து வீடுதிரும்புகையில்
கால்சுற்றும் நாய்க்குட்டியின் பார்வையில்..
தேங்கிய மழைநீரில் மிதக்கின்ற
வாடிய மல்லிகைப்பூக்களில்...
தொலைதூர பயணத்தின் வழியனுப்புதலில்
வழிகின்ற கண்ணீர்த்துளியில்...
புணர்ந்த களைப்பில் நெஞ்சிலுறங்கும்
துணையின் மூச்சுக்காற்றில்...
மொழியில்லாத் தருணங்களிலும்
பிறக்கத்தான் செய்கின்றன
கவிதைகள்..