Tuesday, May 20, 2008

உயிரின் விசும்பல்...




விரல்பற்றிய இதயபகிர்வுகள்
ஏதுமற்ற என்னுலகை
பொய்மை நிறைந்த
உன் சொற்களால் நிரப்புகிறாய்.

விசும்புகின்ற உயிரின்
சத்தம் கேட்டபின்பும்
அலட்சிய பார்வையொன்றில்
தவிர்த்து
பிரிந்துசெல்கிறாய்.

என் கண்ணீர்த்துளி
பெருகி காலநதி
பெருவெள்ளமென ஓடுகிறது

தூரத்தில் எங்கோ
ஒரு மலர் உதிரும்
சப்தம் சன்னமாக கேட்க
துவங்குகையில் இருள்கிறது
என் வானம்.

4 comments:

said...

//** விசும்புகின்ற உயிரின்
சத்தம் கேட்டபின்பும்
அலட்சிய பார்வையொன்றில்
தவிர்த்து
பிரிந்துசெல்கிறாய். **//

நிதர்சனமான உண்மை
நிலாரசிகரே......

said...

//** விசும்புகின்ற உயிரின்
சத்தம் கேட்டபின்பும்
அலட்சிய பார்வையொன்றில்
தவிர்த்து
பிரிந்துசெல்கிறாய் **/

நிதர்சனமான உண்மை
நிலாரசிகரே...

said...

"" விரல்பற்றிய இதயபகிர்வுகள்
ஏதுமற்ற என்னுலகை
பொய்மை நிறைந்த
உன் சொற்களால் நிரப்புகிறாய்.

விசும்புகின்ற உயிரின்
சத்தம் கேட்டபின்பும்
அலட்சிய பார்வையொன்றில்
தவிர்த்து
பிரிந்துசெல்கிறாய்.

என் கண்ணீர்த்துளி
பெருகி காலநதி
பெருவெள்ளமென ஓடுகிறது

தூரத்தில் எங்கோ
ஒரு மலர் உதிரும்
சப்தம் சன்னமாக கேட்க
துவங்குகையில் இருள்கிறது
என் வானம். ""

மிக மிக மிக அருமை..
நிச்சயமான உண்மை..
வலிக்கிறது...

said...

விசும்புகின்ற உயிரின்
சத்தம் கேட்டபின்பும்
அலட்சிய பார்வையொன்றில்
தவிர்த்து
பிரிந்துசெல்கிறாய்

Reality ........nice