Monday, May 19, 2008

குட்டிக் கவிதைகள் - பாகம் -4




1.உண்டியலில் விழுகின்றன
சில்லறைகள்.
பசியுடன் திருவோடு.

2. திருமணவீட்டில்
சரசரக்கும் பட்டுப்புடவைகளால்
பேசுகிறார்கள் பெண்கள்.

3.தோழன் அந்நியனானான்
கொலுசுகள் விலங்கானது
பாவாடை தாவணியானதால்.

11 comments:

said...

/1.உண்டியலில் விழுகின்றன
சில்லறைகள்.
பசியுடன் திருவோடு./

அழகான வரிகள்

said...

யதார்த்தமான வரிகள்...
அருமையான கவிதைகள்..


Sen22,
Bangalore

said...

//தோழன் அந்நியனானான்
கொலுசுகள் விலங்கானது
பாவாடை தாவணியானதால்//

கொலுசும்,தாவணியும் இப்படியுமா அந்நியப் படுத்தும்??
அன்புடன் அருணா

said...

//கொலுசும்,தாவணியும் இப்படியுமா அந்நியப் படுத்தும்??//

அருணா,

இந்தக் கவிதையின் பொருள் உங்களுக்கு புரியவில்லையெனில் சொல்லுங்கள் விளக்குகிறேன்.

நன்றி திகழ்மிளிர்,சென்.

said...

//தோழன் அந்நியனானான்
கொலுசுகள் விலங்கானது
பாவாடை தாவணியானதால்.//

ஒரு பெண் பருவமடையும் போது அந்நியப்படும் உறவுகளையும், உணர்வுகளையும் சொன்ன விதம் அருமை.

Anonymous said...

//தோழன் அந்நியனானான்
கொலுசுகள் விலங்கானது
பாவாடை தாவணியானதால்//

நன்றாக இருக்கிறது கவிதை.

said...

அச்சச்சோ நல்லாவே புரியுது......அது ஒரு வருத்ததுலே கேட்டது....
அன்புடன் அருணா

said...

நன்றி சேவியர்,அருணா,சகாரா

said...

//தோழன் அந்நியனானான்
கொலுசுகள் விலங்கானது
பாவாடை தாவணியானதால்//


Best kavidhai uncle,,,, 3cheers :)

said...

ந‌ன்று நிலா :)

said...

//தோழன் அந்நியனானான்
கொலுசுகள் விலங்கானது
பாவாடை தாவணியானதால்.//

சரியா சொன்னீங்க....