அறையெங்கும் ஒலி நிரப்பும்
தாரிச்சிட்டிலிருந்து
உதிர்கின்ற சொற்கள் சிறகு முளைத்து
காற்றில் அலைந்து திரிகின்றன.
பிரபஞ்சத்தின் முடிவுறா இருளில்
அவை ஒலிவடிவ பறவையாக
பறந்து பறந்து களிப்படைந்து,
சொற்களற்ற மெளனத்துடன்
என் தோளில் வந்தமர்கின்றன.
ஆத்மார்த்த பேரன்புடன் அதனுடன்
உரையாட துவங்குகிறேன்.
ரகசியமான தருணமொன்றில்
அதன் சுதந்திரத்தின் சிறகுகளை
நான் கத்தரித்துவிட்டதை
அறியாமல் தினம்
தொடர்கிறது மொழியற்ற
உரையாடல்.
[இவ்வார கல்கியில் வெளியான கவிதை]
[வீட்டிற்கு புதிதாய் வந்துள்ள செல்லப்பறவைகள் செம்பருத்தி,செம்பரிதி இருவருக்கும்]
-நிலாரசிகன்.