பூவொன்றின் மரணத்திற்கான
கடைசி துளி கண்ணீரில்
நானொரு பாடல் எழுதுகிறேன்.
எவருக்கும் புரிந்துவிடாத அப்பாடலின்
வரிகள் செந்நீரில் எழுதுப்படுகின்றன.
காற்றின் காதுகளை அவை
தீண்டும் பின்னிரவில்
சடலங்களை பிரசவிக்கும்
மேகத்துடன் ஆரம்பமாகிறது
ஓர் ஊமையின் உரையாடல்.
-நிலாரசிகன்.