Monday, December 26, 2005

சுனாமி கவிதை...

(சுனாமி பேரலையில் தன் பேரனை பலி கொடுக்கிறாள் ஏழை
மூதாட்டி ஒருவள்...



அவனை இழந்து ஒரு வருடம் கழித்து அவனது கல்லறையில்
அவள் உதிர்க்கும் கண்ணீர்த்துளிகளை கவிதையாய் மொழிபெயர்த்திருக்கிறேன்.)







பிரசவத்தோடு ஆத்தா போக
கட்டினவ நினப்போடு அப்பன் போக
அறுவது வயசுல எங்கையில்
வந்து விழுந்த மரிக்கொழுந்தே!

மகன் வயித்து பேரன்
உன்ன
மகனப்போல வளர்த்து
வந்தேன்.

கடலக் காமிச்சு
அம்மா இவ கும்பிட்டுக்கன்னு
சொல்லி வந்தேன்.

நர விழுந்த கிழடு
கட்டைகள விழுங்காம
கரயோடு வெளயாண்ட
புள்ள உன்ன
நுரகொண்டு
போயிடுச்சே!

தரயில மீனப்போட்டா
செத்துப்போகுமேன்னு
நா(ன்) யாவாரத்துக்கு
புடிச்சி வந்த மீன
கடல்ல கொண்டு போடுவியே
எந்தங்க மகராசா
இப்ப எந்த மீனு
வயித்துக்குள்ள இருக்கியோ
தெரியலயே!


கடலம்மா..
அரசாங்கம் தந்த காசெல்லாம்
கடல்ல தூக்கி போடுறேனம்மா..
காச எடுத்துக்கிட்டு
எம் பேரன கொடுத்திடம்மா!


நீ வளர்க்கும் மீனெல்லாம்
நா(ன்) புடிச்சிப் போறேன்னு
நா வளர்த்த எம் பேரன
பிடிச்சுப் போயிட்டியா தாயே!


அலையோடு போன
பேரப் புள்ளய நாந்தேடி
திரிஞ்ச நாளுல,

அப்பனாத்தா இல்லாம
அழுத ஒரு ஒத்தப் பிள்ள
இப்போ என் கூரவீட்டு
தொட்டில்ல சத்தமில்லாம
உறங்கி கிடக்கு.

குலமே அழிஞ்ச பின்னால
இந்தக் கிழவி உசுர
அந்தப் பச்சப்புள்ள சிரிப்பு
இழுத்துப் பிடிச்சிருக்கு.

மண்ணுக்குள்ள பேரன
பொதச்சுட்டு,
நெஞ்சுக்குள்ள புதுப்புள்ளய
நினைச்சுக்கிட்டு
தள்ளாடி நான் போறேன்
வீடு நோக்கி.


கலங்கிய இதயத்துடன்,
நிலாரசிகன்.

5 comments:

Anonymous said...

i CANT READ UR BLOG AS I NEED TO INSTALL FONT. WHICH ONE SHOULD I INSTALL IN MY SYSTEM TO READ UR BLOG. MAIL ACROSS am_karthik@rediffmail.com
thanks & keep it up
Karthik.P

Anonymous said...

Really Nice Heart Melting one...

said...

ennavendru solluvadhu indha kavithaiyai...
ali peralaiyai en manadhai surutiya indha kanner anjali kandu en kangal sindhiya thuligal unaku sollum nilarasigane...nee oru mahakavi endru..
nan orupodhum unnai pugalchikaga pugzhala matten... en manadhiil thondriya indha kanner anjali kavithai ennai vittu neenga siridhu kalam agum nanbanare...

ungaludaya parama rasigan nenjam..

Harisudhan(sharisudhan41@gmail.com)

said...

anthap paattiyin valiyai
ungal varikal appadiye solliyullathu..

niranjana said...

manam baaramaagivitathu..marupadiyum tsunami ninaivugal en nenjukkul

niranjana