Saturday, May 06, 2006

அவரவர் வாழ்க்கை...

ரயிலின் வருகையைப் பற்றி
கவலைப்படாமல் தண்டவாளத்தில்
ஊறுகின்றன சில எறும்புகள் .

நெருங்குகின்ற ரயிலை
நிறுத்துவதெப்படி
என்று எண்ணித்
தோற்கிறேன்.

இரைச்சலோடு
கடந்து செல்கிறது
அந்த நீள ரயில்.

அப்போது எதிர்பாராமல்
பெய்த மழையில்
எறும்புகளுக்கு என்னவாயிற்று
என்கிற கவலை
மறந்து மழைக்கு
ஒதுங்க இடம் தேடி
அலைகிறது மனம்.

3 comments:

said...

Beautiful!

Anonymous said...

Hello..

ur posts are all interesting and realli beautiful.

however i am having lotsa difficulty trying to read the tamil .. not cos i dnt knw hw to read them bt i guess its the font..

anyways, gd werk :)

said...

எதார்த்தத்தின் அழகிய வெளிப்பாடு..

ஏனோ "அவரவர் வாழ்க்கை"... என்பதை விட "எதார்த்தம்
' என்ற தலைப்பு சரியென படுகிறது.

மனிதன் சுயநலமாய் இல்லாமல் .. எறும்பை காப்பாற்ற யோசித்துள்ளான். .. ரயில் கடந்து சென்ற பின் .. எறும்பின் இறப்பின் படிப்பினையாக தன்னை மழையில் இருந்து காத்துக்கொள்கிறான்.