Monday, December 07, 2009

சாளரம்



பெருந்துயரத்தின் வலியோடும்
நிராகரிக்கப்பட்ட சொற்களின் வெம்மையாலும்
என்னிலிருந்து முழுவதுமாய்
நீங்கிச் செல்கிறாய்.
காற்றின் தீராப்பாடலெங்கும் நிறைத்திருக்கும்
நம் ப்ரியங்களின் உடைதலை
தூசி படர்ந்த சாளரத்தின் வழியே
பார்க்கிறேன்



உயிரிலிருந்து உலர்ந்து விழும்

கடைசி முத்தத்துடன்.


9 comments:

said...

தமிழ்மணத்துல சாளரம் என்ற தலைப்பை பார்த்து பயந்துட்டேன் வந்தேன் :))

said...

//உயிரிலிருந்து உலர்ந்து விழும்

கடைசி முத்தத்துடன்.

//

அசத்தல் வரிகள் பாஸ்.உணர்வை மொத்தமாய் இந்த வரிகள் சொல்லி விடுகிறது.

said...

காற்றின் தீராப்பாடலெங்கும் நிறைத்திருக்கும்

நம் ப்ரியங்களின்........... azhagana varigal

said...

ஏதோ ஒரு வலியினை மனதினுள் விதைத்து செல்கிறது வரிகள்.

said...

Pirithalin rasanaiyana kavithai..

said...

நன்றி நண்பர்களே..

said...

pidichchirukku.....

vazhththukal nila:)

Anonymous said...

//பெருந்துயரத்தின் வலியோடும்
நிராகரிக்கப்பட்ட சொற்களின் வெம்மையாலும்
என்னிலிருந்து முழுவதுமாய்
நீங்கிச் செல்கிறாய்.//
இந்த வலிகளை வார்த்தை படுத்துவது அவ்வளவு எளிதல்ல நிலா. கவிதைக்கு வாழ்த்துசொல்வது வலியை இன்னும் அதிகப்படுத்துவதாக இருக்கும் அதனால் வரிகளுக்கு வாழ்த்துக்கள்.

said...

Beautifully narrated words...

உயிரிலிருந்து உலர்ந்து விழும்

கடைசி முத்தத்துடன்.

idha vida pirivai veru varthaikal solla mudiyadhu....

Awesome !!!