
Saturday, May 06, 2006
அவரவர் வாழ்க்கை...
ரயிலின் வருகையைப் பற்றி
கவலைப்படாமல் தண்டவாளத்தில்
ஊறுகின்றன சில எறும்புகள் .
நெருங்குகின்ற ரயிலை
நிறுத்துவதெப்படி
என்று எண்ணித்
தோற்கிறேன்.
இரைச்சலோடு
கடந்து செல்கிறது
அந்த நீள ரயில்.
அப்போது எதிர்பாராமல்
பெய்த மழையில்
எறும்புகளுக்கு என்னவாயிற்று
என்கிற கவலை
மறந்து மழைக்கு
ஒதுங்க இடம் தேடி
அலைகிறது மனம்.
கவலைப்படாமல் தண்டவாளத்தில்
ஊறுகின்றன சில எறும்புகள் .
நெருங்குகின்ற ரயிலை
நிறுத்துவதெப்படி
என்று எண்ணித்
தோற்கிறேன்.
இரைச்சலோடு
கடந்து செல்கிறது
அந்த நீள ரயில்.
அப்போது எதிர்பாராமல்
பெய்த மழையில்
எறும்புகளுக்கு என்னவாயிற்று
என்கிற கவலை
மறந்து மழைக்கு
ஒதுங்க இடம் தேடி
அலைகிறது மனம்.
Labels:
கவிதைகள்
Subscribe to:
Posts (Atom)