Tuesday, November 04, 2008

குழந்தைக்கவிதைகள் இரண்டு


1.அப்பாவும் அம்மாவும்
தராத அரவணைப்பை
பொம்மைக்கு தந்தபடி
உறங்கிக்கொண்டிருந்தது குழந்தை.
கனவில் தோன்றிய கடவுள்கள்
அச்சிறு குழந்தையின் அரவணைப்பை
வரமாய் கேட்டனர்.
வரிசையில் நின்றிருந்த
கடவுள்களுக்கு உறக்கப்புன்னகையை
தந்துவிட்டு பொம்மையை
இறுக்கி அணைத்துக்கொண்டதது.
பொம்மையாதலின் வழிமுறைகள்
அறியாமல் விழித்தபடிநின்றனர்
கடவுள்கள்.

2.
கதை சொல்ல நச்சரித்தது
குழந்தை.
பேய்க்கதை சொல்லத்துவங்கினேன்.
அனைவரும் உறங்கிவிட்ட
ஓர் இரவில் பேய்கள் என்னைமட்டும்
துரத்தி ஓடிவந்தன என்று
தொடங்கினேன்.
பேய்க்குத்தான் கால்கள் இல்லையே
பின்னெப்படி ஓடிவரும் என்றது
குழந்தை.
உறங்கிவிட்ட பாவனையில்
கண்மூடிக்கிடந்தேன் நான்.

(1வது கவிதை "மல்லிகை மகள்" மாத இதழில் இம்மாதம்(நவம்பர் 2008)வெளியாகி இருக்கிறது)

6 comments:

said...

அழகான கவிதை நிலா...வாழ்த்துக்கள்

said...

arumai....
bommaiyathalin valimuraigal
ariyamal vizthabadi ninranar
kadaulgal.

said...

அழகுக் கவிதைகள்.

Anonymous said...

kuzhandhai kavithaigal irandum miga arumai. i imagined my child in those two poems

said...

Nalla kavithaigal nilarasigare, kuzhanthaigalin ulagam arputhamanavai thaan.

said...

2-me remba remba remba.............pidichchirukku:))