Thursday, June 03, 2010

இடைவெளி


காற்றுப்புகாத கண்ணாடிச்சுவரின்
மறுபக்கத்தில்
கண்கள் மூடி அமர்ந்திருக்கிறார்
அவர்.

ஓர் இலையை இழுத்துக்கொண்டு
மரமேறிக்கொண்டிருக்கிறது
கட்டெறும்பு.

இறைக்கும் இயற்கைக்கும்
நடுவே
தங்கள் நிழலுடன் யுத்தமிட்டு
சரிகிறார்கள்
இந்த வழிப்போக்கர்கள்.

- நிலாரசிகன்.

3 comments:

said...

கவிதை நல்லாருக்கு...

பதிவுலக உள்குத்து போலிருந்தாலும் ..

said...

நச்!

said...

கவிதை வெகு இயல்பு...
பாராட்டுக்கள்.