Monday, February 14, 2011

364 நாட்களுடன் வசிப்பவன்



முடிவற்று நீளும் இரவுகளிலும்
நின்று கொண்டே உறங்கும் புரவிகளின்
நிழல்களில் ஊர்ந்து செல்லும் எறும்புத்தடத்திலும்
தியானப்பெருவெளியின் வறண்ட நதியோரத்தில்
தலை குனிந்து மரணத்தின் முதல் படியில்
நிற்கும் ஒற்றை பூச்செடியிலும்
இன்னும்
அறியப்படாத வண்ணத்துப்பூச்சிகளின்
சிறகு வர்ணத்திலும்
உரையாடும் இலைகள் கொண்ட
வனமொன்றின் நடுவிலும்
இருண்ட கனவுகளில் கரையும்
சிவப்பு நிற மெழுகின் பாதங்களிலும்
தேடி
தேடி
களைத்து 
இக்கவிதையில் வீழ்ந்தேன்.
ஒரு ரயில் நிலைய சந்திப்பில்
ஆயிரம் யுகங்களுக்கும் மீள இயலாமல்
என்னைக் களவாடி ஓடி மறைந்த
இரண்டாம் மாதத்தின்
பதினான்காம் நாளை.

-நிலாரசிகன்.

11 comments:

said...

ஆயிரம் யுகங்களுக்கும் மீள இயலாமல்
என்னைக் களவாடி ஓடி மறைந்த...


மிக மிக அருமையான வரிகள்.. :)

said...

ஆயிரம் யுகங்களுக்கும் மீள இயலாமல்
என்னைக் களவாடி ஓடி மறைந்த....


மிக மிக அருமையான வரிகள்.. :)

said...

கவிதையில் வீழ்ந்தவனைக் களவாடிய நாளின்..

கவிதை

மிக அருமை:)!

said...

அருமையான வரிகள்.

said...

மிக அருமை

said...

அருமை

Anonymous said...

அதீதமான சுவை...!
எங்கிருந்து ஒய் பிடிக்கிறீர் வார்த்தைகளை...!

உம் சொற்சுவையை என் ஒவ்வொரு திசுவும் சுவைக்கிறது..!

said...

எனக்கு இந்த கவிதை...அப்புறம் அந்த மாடர்ன் ஆர்ட் ஓவியம் எல்லாமே ரொம்ப பிடிச்சது...something different..

said...

பூங்கொத்து!

said...

அருமை.

said...

nallaayirukku....