Saturday, December 02, 2006

என் தோழனே....

சோகமெனில் உன்தோளில்
சாய்ந்து
அழுது தீர்த்துக்கொள்வேன்...

மகிழ்ச்சியெனில் உன்
விரல்கோர்த்து உயிர் மலர சிரித்துக்கொள்வேன்...

உன்னுடனிருக்கும்
ஒவ்வொருநிமிடங்களும்
தாய்மடியில்நிம்மதியாய்
உறங்கும்குழந்தையாய்
நானிருந்தேன்..

தங்கத்தில் வேலியொன்று
என் கழுத்தில் ஏறியதால்
உன்னைப் பிரிந்து இன்று
வெளியூர் செல்கிறேன்...

வழியனுப்ப வந்த
சொந்தங்களின் நடுவே
தோழி என்னை
பிரியவும்மனமில்லாமல்
வேறுவழியும் தெரியாமல்
தவிப்புடன் கன்னம்நனைக்கும்
கண்ணீரைமறைத்தபடியே
மெளனித்துகையசைக்கிறாய் நீ..

உன்னைவிட்டு
நகரத்துவங்குகிறது
இந்த இரயிலும்
என்வாழ்க்கையும்...

3 comments:

said...

பிரிவின் வலி சுமந்த வரிகள்... அருமை!

said...

அது எப்படி ஒரு பெண்ணில் இடத்தில இருந்து பார்க்க முடியுது! சூப்பர்

said...

இனம் புரியாத ஒரு உணர்வு வந்து ஒட்டிக்கொண்டது இந்த வரிகள் படிக்கும் போது., அதிலும் கடைசி வரி .. விவரிக்கமுடியாத வலி