Monday, February 12, 2007

நிழல் தேடும் மரங்கள்- பாகம் 1.

* அடிக்கின்ற அலையின்
சத்தத்தில் என்றுமே வெளியில்
கேட்பதில்லை கரையின் முனகல்
சப்தங்கள்..


* சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகிறது
திருமணம்.
வாழ்க்கை மட்டும்
நரகத்துடன்.

*மழைத்துளிகளை ஒவ்வொன்றாய்
எண்ணினேன்.
சிரித்தாள் அம்மா.
கண்ணீர்த்துளிகளை ஒவ்வொன்றாய்
எண்ணுகிறேன்.
சிரிக்கிறாள் அத்தை.

*பவுர்ணமி நிலா
இரவு மழை
ஜன்னலோர செம்பருத்தி.
எதுவும் ரசிக்கமுடிவதில்லை
தேவை முடிந்தவுடன்
கேட்கின்ற குறட்டை
சத்தத்தில்…

*இதமான அரவணைப்பு
நெற்றிமீது ஒற்றை முத்தம்
கண்பேசும் வார்த்தைகள்
எப்போதும்
திரைப்பட தாம்பத்தியம்
அழகானதாகவே இருக்கிறது.

*கரண்டி பிடிக்கும்
கைகளின் வலி
மறக்கச் செய்கிறது
கடந்த கால கண்ணாடி
வளையல்களின் சிணுங்கல்
சத்தம்.

1 comments:

Anonymous said...

சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகிறது
திருமணம்.
வாழ்க்கை மட்டும்
நரகத்துடன்.

I like this lines very much. It shows the natural and the actual things to be happening in life

By
Mangai