Monday, March 19, 2007

நீயின்றி அமையாது என்னுலகு...

பஞ்சபூதங்களையும் கவிதையாக்க முயன்றேன்..இதோ அவ்வரிகள்..



நீச்சல் அறியாத
இந்த‌நிலவு உன்னில்
விழுந்து த‌த்த‌ளிக்கிற‌து..
காத‌ல்ந‌தி நீ.

என்னை க‌ட‌ந்து
செல்கையில்
ஏதேதோ ராக‌ம்
என்னுள்..
ச‌ங்கீத‌க்காற்று நீ.

சந்திக்கும் ஒவ்வொரு
முறையும்
வெவ்வேறு
பார்வை ஒளிவீசும்
அழகியதீபம் நீ.

மழை நான்
காத்திருக்கும்
நேசநிலம் நீ.

என் நினைவுமேகம்
நீந்துகின்ற
கனவுவானம் நீ.

-நிலாரசிகன்.

1 comments:

Anonymous said...

Simply super NilaRaseegan. Comments ealutha vaarthaigal thedikkondu irukkeren...


Kavithaigaludan,
Nila.