Sunday, April 01, 2007

உன்னில் விழுந்த பூவொன்று...

பூவொன்று காம்பிலிருந்து
உதிரப்போகும் நொடிக்காக
வெகு நேரம் காத்திருந்தேன்...

தன் காலடியில் விழப்போகும்
பூமகளுக்காக கண்ணீர் சிந்துமோ
அந்த பன்னீர்மரம் என்று
தவித்திருந்தேன்...

வேகமாய் வீசும் காற்றிலோ
இல்லை
மெதுவாய் வீசும் தென்றலிலோ
உதிரப்போகிறது அந்த ஒற்றைப்பூ
என்றெண்ணியிருந்தேன்...

பறவையொன்று அமர்ந்த
கிளையின் அதிர்வில்
உதிருமோ என்று
அதிர்ந்திருந்தேன்..

வெகுநேரம் கழிந்தபின்
எவ்வித அழுத்தமுமின்றி
இயல்பாய் மெதுவாய்
காம்பிலிருந்து விடுபட்டு
வீழ்ந்தது அந்தப்பூ.

விழுகையில் உணர்த்தியது
எவ்வித கட்டாயமுமின்றி
இயல்பாய் உன்னில்
விழுந்துவிட்ட என் மனதை...

2 comments:

said...

அருமையான கவிதை.

Anonymous said...

unga ella kavidhagalai pugazha vendumaanal, naanum oru kavizhan aaga vendum...
I hav no different words... good one