Saturday, April 21, 2007

பாடல் 1:

என் ஜீவன் உன்னைக் கண்டுகொண்டேனே
பெண்ஜீவனாய் என் முன் நிற்க கண்டேனே

பூவில் செய்த சிலையோ நீ?
புல்லின்மேல் பனித்துளியோ நீ?

தேவதை உன் கண்களிலே ஒருவித
சோகம் வழிவதைக் காண்கிறேன்

கோதை உனை மடிசாய்த்து உன்
சோகம் பகிர்ந்திட துடிக்கிறேன்

உன் தேகம் என்ன கறுப்பு வைரமா?
அழகே நீ என்ன காதலின் சிகரமா?

(என் ஜீவன் உன்னைக் கண்டுகொண்டேனே
பெண்ஜீவனாய் என் முன் நிற்க கண்டேனே
)
இரவுக்கு ஒளிதரும் மின்மின்கள் போலவே
இருண்ட என் இதயத்திற்கு ஒளிதரும் கருநிலவும் நீயே!

நாத்திகன் எனக்கு காதல் மதம்
பிடிக்க வைத்தாய்
ஆத்திகன் போலவே தேவசிலை
உன்னை சுற்ற வைத்தாய்

உன் காயம் ஆற்றவே மருத்துவம் போதுமடி
காதல் காயம் கண்ட என் நெஞ்சுக்கு மருந்தாவாய் நீயுமடி!

(என் ஜீவன் உன்னைக் கண்டுகொண்டேனே
பெண்ஜீவனாய் என் முன் நிற்க கண்டேனே
)

-நிலாரசிகன்.

1 comments:

Anonymous said...

this is very super. 3rd 2 lines is exellent.........