Saturday, April 21, 2007

கவிதையல்லாதவைகள்....

கன்னுக்குட்டியுடன்
நீ விளையாடுவது
கண்டு
குழம்புகிறது தாய்ப்பசு
எது தன் பிள்ளை
என்று!

0
பரிணாம வளர்ச்சியில்
பெண்ணிற்கு பின்
தேவதை என்பதற்கு
நீ
ஒருத்தியே சாட்சி.

0
கண்ணீரை மறைத்துக்கொண்டே
சிரிக்கவும்
புன்னகைத்துக்கொண்டே
அழவும் தோன்றியது
நீ காதல் சொன்ன
நிமிடங்களில்....
0

தன் சிறிய சிறகுகளால்
வானம் முழுவதும்
பறந்துவிட துடிக்கும்
பட்டாம்பூச்சி போல
மாறிவிடுகிறது என்
மனசு.
உன் மடியில்
தலைசாய்கின்ற
பொழுதுகளில்.

0
அடைமழையிலும் புன்னகைக்கும்
பூக்கள் போன்றது
கோபப்படும் நேரங்களிலும்
என்
விரல்பற்றி மென்மையாய்
நீ பேசும் தருணங்கள்

0

எத்தனை முயன்றும்
இருவருக்கும் தெரியவில்லை
எதனால் ஓர்
உயிரானோம் என்று.
நம் நிழல்களுக்கும்
இதே குழப்பம்.

0

செல்லமாய் நீ
என்னை அடிப்பது
குற்றாலச் சாரல்.
கோபமாய் நீ
என்னை பார்ப்பது
மார்கழித் தென்றல்.
காதலாய் நீ
என்னுடன் இருப்பது
தாய்மடிக் குழந்தை.
0

-நிலாரசிகன்.

2 comments:

Anonymous said...

//கண்ணீரை மறைத்துக்கொண்டே
சிரிக்கவும்
புன்னகைத்துக்கொண்டே
அழவும் தோன்றியது
நீ காதல் சொன்ன
நிமிடங்களில்....//

Wow nice keep it up

:)

said...

Priya kuripitta adhE varigal
enakkum miga pidithana.

- Karpagam Elangovan
(mannikkavum font illadhadhaal thamizh thattacha iyalavillai)