Saturday, April 21, 2007

ஒரு முதிர்கன்னியின் பாடல்...

ஏதோ ஒரு ராகம் பாடுகிறேன்
ஏனோ உயிர்வேக நான் வாழுகிறேன்
காற்றோடு கலந்துவிட துடிக்கிறேன்
கானல்நீராய் வாழ்வதுகண்டு எனைநானே வெறுக்கிறேன்

வழி மீது விழி வைத்து காத்திருக்கும் பாவை இவள்
சரி எது பிழை எது புரியாத அப்பாவி இவள்

கடிதம் வருமென காத்திருந்தாள்
மடியில்முகம் புதைத்து அழுதிருந்தாள்

கடிதமும் வரலையே கன்னி இவளுக்கு
மணயோகமும் இல்லையே!

(
ஏதோ ஒரு ராகம் பாடுகிறேன்
ஏனோ உயிர்வேக நான் வாழுகிறேன்
காற்றோடு கலந்துவிட துடிக்கிறேன்
கானல்நீராய் வாழ்வதுகண்டு எனைநானே வெறுக்கிறேன்
)

முப்பது வயசாச்சு கண்ணாடி அலுத்தாச்சு
தெப்பத்து கோயில முண்ணூறு தரம் சுத்தியாச்சு

மூணுமுடிச்சு மட்டும் கிடைக்கலையே
ஊர்பேச்சு கேட்டும் உயிர்மூச்சு நிற்கலையே

பூவுக்குள் பூகம்பம் நிகழ்வது பூவுக்குமட்டுமே தெரியும்
பூவையிவளுக்கு ஒருஇதயம் உண்டென்பது யாருக்கு புரியும்?

0 comments: