Sunday, April 01, 2007

சுயம்தேடி...

காயத்தின் வடுக்களில்
கரங்களுக்குள் புதைந்த
சில சத்தியங்கள்..

சூழ்நிலைக் கைதியானதில்
கண்களுக்குள் மரணித்த
சில கனவுகள்...

காலத்தின் தாலாட்டில்
இதயத்தினுள் உறங்கிய
சில உறவுகள்...

அவ்வப்போது
ஊசிபோல் உள்ளம்
தைக்கின்றன
முகமூடி அணிந்த
என் சுயத்தை.

1 comments:

said...

தங்கள் கவிதைகள் எல்லாமே நன்றாக உள்ளது.பாடல்களின் ராகமும் இருந்தால் நன்றாக இருக்குமே