Sunday, April 01, 2007

பயணங்கள்...

அடர்ந்த காட்டில்
தனியே பயணிக்கிறேன்..

உயர்ந்த மரமொன்றின்
உச்சியில் பெயர்தெரியா
பறவைகள் கூச்சலிடுகின்றன...

தூரத்தில் ஒரு யானையின்
பிளிறல் சத்தம் இதயத்துடிப்பை
அதிகமாக்குகிறது...

சூரியஒளியற்ற இருண்ட
பாதையில் மின்மினி
பூச்சிகளும் பயங்கரமாய்
தோன்றுகிறது...

புதைகுழியொன்றில்
தடுமாறி விழுகையில்
பக்கத்து மரத்தின் வேர்பற்றி
எனைக் காத்துக்கொள்கிறேன்...

மீண்டு(ம்) என் பயணம்
தொடர்கிறது வெளிச்சமற்ற
பாதையிலும் ஏதோ
ஒரு நம்பிக்கையில்...

என்னைப் போலவே
பலர் பயணிக்கிறார்கள்
தனியே பயணிப்பதாய்
இவ்வாழ்வில்.

1 comments:

Anonymous said...

அருமை!!!!