Saturday, April 21, 2007

முன் பாடல் சுருக்கம்:-

(வடமாநில கிளி அவள். வேலைக்காக தமிழகம் வருகிறாள்.வந்த இடத்தில்
அவளை கண்டவுடன் அவளுடன் வேலை பார்க்கும் நம் கதாநாயகன் காதல் கொள்கிறான். அவளிடம் காதலை சொல்ல போகும் தருணம்தான் தெரிகிறது அவள் வேறு ஒருவனை நேசிப்பது. அதனால் சொல்லாமல் வந்து விடுகிறான். சில மாதங்கள் கழித்து அவளது காதல் முறிந்த சேதி இவனுக்கு தெரிகிறது. இப்பொழுதாவது தன் காதலை சொல்லலாம் என்றெண்ணி அவளிடம் செல்கிறான். அவளோ தமிழகத்தை விட்டே போகிறாள்.....)

பெண்ணே பசும்பொன்னே எனை
பிரிவதேன் சொல் கண்ணே
நெஞ்சே என் நெஞ்சே எனை
மறந்ததேன் சொல் நெஞ்சே


மாநிலம் கடந்து வந்த தென்றலும் நீயே
என் மனக்கோலம் அழித்துச்சென்ற புயலும் நீயே

என் தாய்மொழி புரிந்துகொண்டவளும் நீயே
என் விழிமொழி புரியாமல்சென்றவளும் நீயே

என் காதல் சொல்ல உன் வாசல் வந்தேன்
உன் காதல்கதை கேட்டு எனைநானே நொந்தேன்


பெண்ணே பசும்பொன்னே எனை
பிரிவதேன் சொல் கண்ணே
நெஞ்சே என் நெஞ்சே எனை
மறந்ததேன் சொல் நெஞ்சே


சொல்லாத காதலால் தனிமையில் நானும் வெந்தேனடி
உன் காதல்தோற்க, தனிமரமாய் நீயும் நின்றாயடி...

மனசுக்குள் மறைத்த பூவொன்றை உனக்குத்தர
ஓடோடி வந்தேன்.
சொந்த ஊர் நீ திரும்பும் சேதிகேட்டு
ஊமையாகி நின்றேன்.

மெதுவாக கடக்கிறது நீ செல்லும் ரயில்
முகாரி இசைக்கிறது தூரத்தில் ஒரு குயில்

-நிலாரசிகன்.

0 comments: