Tuesday, June 05, 2007

தென்றலே தென்றலே....

காதலில் பிரிவு மிகவும் வருத்தம் தருவது.
தன் காதலியை பிரிந்த ஒரு காதலனின் வரிகளாக
என் வரிகள் இதோ...


தென்றலே தென்றலே கொஞ்சம் என்னோடு பேசவா
ரகசியமாய் ரகசியமாய் ஒரு உண்மை சொல்கிறேன் வா
காதலுக்கு பாலமாக நீ வேண்டும் தென்றலே
காலமது ஓடுமுன்னே அவளிடம் செல்வாயா தென்றலே?

காதல் என்னும் பாதையிலே நாங்கள்
ஒன்றாய் பயணித்தோம்

பிரிதல் என்னும் வேதனையிலே
திசைமாறி பிரிந்து விட்டோம்

என் வானில் இப்போது நிலவும் இல்லை
பெண்மான் அவளின்றி உயிரும் இல்லை

தனிமைக்கு துணையாக அவள் நினைவு
பெண்மைக்கு சுகமாகுமா என் பிரிவு?

தென்றலே தென்றலே கொஞ்சம் என்னோடு பேசவா
ரகசியமாய் ரகசியமாய் ஒரு உண்மை சொல்கிறேன் வா
காதலுக்கு பாலமாக நீ வேண்டும் தென்றலே
காலமது ஓடுமுன்னே அவளிடம் செல்வாயா தென்றலே?


துள்ளி ஓடும் வெள்ளை நதியே, எனை
எண்ணி வாடும் கறுப்பு மதியே...

சேர்ந்திடும் நாள் விரைவில் வந்திடும் பெண்ணே!
வாழ்ந்திடும் வாழ்க்கை உனக்காகத்தான் கண்ணே!

காலங்கள் ஓடிவிடும் வருந்தாதே பொன்மணி
காதலோடு காத்திருக்கிறேன் ஓடோடிவா என்கண்மணி..

4 comments:

said...

Wat a deep thinking ,nice sir ...i cant express my wishes in words , i wish you all success in your life ...Kalpana

Anonymous said...

Wat a deep thinking ,nice lines ,i cant say my feelings in words ..i wish you all success in your life..kalpana

said...

wonderful da

said...

I like ur all kavithai very much. your thoughts are very wonderful ..........