Monday, June 25, 2007

நானே என்னைப் பற்றி . . .

1. தென் மாவ‌ட்ட‌த்தில் இருந்து சென்னை நோக்கி ப‌ற‌ந்து வ‌ந்த சிட்டுக்குருவி நான். இக்கால‌ இளைஞ‌ர்க‌ள் போல‌வே க‌ணிப்பொறிக்குள்
சிக்கிய‌ தேன்சிட்டு :)

2.க‌ல்லூரியில் க‌விதைக‌ள் அறிமுக‌ம்.கல்லூரிநாட்களில் ஒரு ஜ‌ன்ன‌லோர‌ இருக்கையும் கையில் ஒரு க‌விதைபுத்த‌க‌மும் கிடைத்துவிட்டால்,நான் த‌மிழுக்கு அடிமை.க‌விதைக்கே என் முழுமை.கால‌மாற்ற‌த்தில் என‌க்குள் ஏற்ப‌டும் உண‌ர்வுக‌ளை அவ்வ‌ப்போது எழுதுகிறேன்.

3. ஆறாம் வ‌குப்பில் த‌மிழில் இர‌ண்டாவ‌து மாண‌வ‌னாக‌ தேர்ச்சி பெற்றேன். அத‌ற்கு ப‌ரிசாக‌ என் ப‌ள்ளி என‌க்கு வ‌ழ‌ங்கிய‌ புத்த‌க‌ம் "ஒற்றைச் சில‌ம்பு". த‌மிழ் என‌க்குள் ஆர்வ‌ம் ஏற்ப‌டுத்திய‌து அப்போதிலிருந்துதான்.

4.சிறுவ‌ய‌தில் நிறைய‌ வேட்டையாடி இருக்கிறேன்.. சிட்டுக்குருவி,அணில்,குயில்,ப‌ட்டாம்பூச்சி இப்ப‌டியாக‌ என் வில்லுக்கு(க‌வுட்டை,குருவிவார்...என்று ப‌ல‌பெய‌ர் உண்டு ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பெய‌ர்) இரையான‌ உயிர்க‌ளுக்கு அஞ்ச‌லியாக‌ இப்போது என் க‌விதைளை ச‌ம‌ர்ப்பிக்கின்றேன்.

5. நில‌வின் மெள‌ன‌ம் அதிக‌ம் பிடிக்கும். த‌னித்திருக்கும் நில‌விற்கு துணையாக‌ கால‌மெல்லாம் விழித்திருந்து க‌விதைக‌ள் எழுதும் வ‌ர‌மே
நான் தின‌ம் வேண்டுவ‌து.

6. ந‌ட்புக்குள் பொய்க‌ள் கூடாது என்ப‌து என் பிடிவாத‌மான‌ கொள்கை. இத‌னால் இழ‌ந்த‌ ந‌ண்ப‌ர்க‌ள் ஏராள‌ம். இது ச‌ரியா த‌வ‌றா என்ப‌தை கால‌ம்தான் ப‌தில் சொல்ல‌ வேண்டும்.

7. கடவுள் என் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டால்,இரு வரம் கேட்பேன் 1. எத்தனை பிறவி எடுத்தாலும் என் அம்மாவிற்கே நான் பிள்ளையாக பிறக்கவேண்டும் 2. முதல் வரத்தையே மீண்டுமொருமுறை கேட்பேன் :)

8. என்னைப் பற்றி சொல்ல வேறொன்றும் இல்லை. தற்சமயம் பணிநிமித்தமாக இருமாத பயணமாக அமெரிக்கா வந்திருக்கிறேன்.
இரவுக்குளிரை ரசித்தபடி விண்ணில் என் வெண்ணிலாவை தேடியபடி
தொடர்கிறது என் பயணம்.:)

என்னைப் பற்றி எட்டு விசயங்கள் எழுத அழைத்த விழியனுக்கு நன்றி.
நான் அழைக்கும் எட்டு நபர்கள்

1. யோசிப்பவர்
2. மற்றவர்கள் யாரென்று நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்..:)..வலைப்பதிவில் அவ்வளவாக என்னை ஈடுபடுத்திக்கொள்ளாததின் விளைவு இது :))

அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.

15 comments:

Anonymous said...

Superb...

said...

அட..

said...

really superb....
arbaatmillatha azhakana vivaripu...


keeps rocking...

said...

great man.. keep it up

said...

வருக நிலா ரசிகன் ..இந்த நாட்டில் உங்கள் அனுபவங்களை எழுதுங்கள் ;)

Anonymous said...

nice, being in IT industry spending time on tamil writing. get going ..all the best

said...

Nice man....

Anonymous said...

no words to explain.............
simply superb!

Anonymous said...

no words to explain........
simple and superb!

said...

En anbu nila rasiganukku,

Ungal Kavithaikalai nan kadantha oru varudathirkum melaha vasithu varukiren. Anaithu kavithaikalum muthukkal.

Ungal Varavu Thamilukku nal varavu.

Valzha Tamil Valzha nilarasigan.

Vanakkam
ippadikku,
Ramasamy

Anonymous said...

neengal iraivanidam ketta varam ....really nice

said...

superrrrrrrrrrrr!

said...

Impressive..!!!

said...

Wish u get ur boons in the next birth.... :-)

Anonymous said...

Nilavin mounama.. Nilavu neraiya pesumee.. Naan aadigam pesi irukkeren nilavudan. Neengal pesiyathu illaya..


Kavithaigaludan,
Nila