Wednesday, June 11, 2008

சிலந்திகள்..

எப்பொழுதும் இல்லாத
பொழுதில் புலப்பட்டன
சில சிலந்திகள்...

வலையில் சிக்கிய
பூச்சியொன்றை தின்றபடி
சகிக்க இயலாத
சிரிப்பொலிகளை ஏற்படுத்தி
நடனமாடி மறைந்தன..

இரவில் தொலைத்ததை
பகலில் மீட்டெடுக்காமல்
அமிலம் வீசுகின்ற
இவர்களைவிட
சிலந்திகளின் பற்கள்
கூர்மையானவை அல்ல.

3 comments:

said...

"வலையில் சிக்கிய
பூச்சியொன்றை தின்றபடி
சகிக்க இயலாத
சிரிப்பொலிகளை ஏற்படுத்தி
நடனமாடி மறைந்தன.."

கவித்துவமான வெளிப்பாடு..

said...

Hai nila raseegan,
All your verses are very nice.If you have free time please visit this blog also.It is mine...

ravishna.blogspot.com

And give your comments to clear my mistakes.

said...

நன்றி சரவணா மற்றும் ரவிஷ்ணா.