Saturday, January 17, 2009

புனைவின் நிஜமும் காமரூப கதை நாயகனும்

ஒரு படைப்பு என்னை வியப்பிலாழ்த்தியது/சிலிர்க்க வைத்தது/வசீகரித்தது/காறி உமிழ்ந்தது/அடித்து துவைத்து போட்டது/நீ எழுதறதெல்லாம் ஒரு எழுத்தா என கேள்விகேட்டது/தூக்கம் கெடுத்தது/துக்கம் கொடுத்தது/சிரிக்க வைத்தது/சிலிர்க்க செய்தது அந்த படைப்பின்,சிறுகதை தொகுப்பின் பெயர்

"புனைவின் நிழல்" எழுதியவர் மனோஜ்.உயிர்மை ப‌திப்ப‌க‌ம்

மாந்த்ரீக யதார்த்தத்தை முன்னிருந்திய நவீன படைப்புகளில் மிகச்சிறந்தது.(இல்லை இதைவிட‌ சிற‌ந்த‌ தொகுப்பும் இருக்கிற‌து என்ப‌வ‌ர்க‌ள் பின்னூட்ட‌த்தில் பெய‌ர் ம‌ட்டும் த‌ராம‌ல் ப‌திப்ப‌க‌த்தின் பெயரையும் த‌ந்து விடுங்க‌ள். )

கவிதைமீது காதலுற்று பலகாலம் கவிதைகளைவிட்டு வெளியே வராமல் இருந்தவன் என்பதால் சிறுகதை வாசிப்பு கடந்த 2007 வரை மிகக்குறைவாகவே இருந்தது. 2008ல் எனக்கென்ன ஆயிற்றோ தெரியவில்லை சிறுகதை பைத்தியமாகவே மாறிவிட்டேன். கிட்டத்தட்ட 3000 சிறுகதைகளுக்கு மேல் வாசித்திருப்பேன்.

புனைவின் நிழலை படிக்க எடுத்தவுடன் ஒரே மூச்சில் இதிலிருக்கும் 15 கதைகளையும் படித்துவிடவில்லை. காரணம் மற்ற எழுத்திலிருந்து மனோஜின் எழுத்து மாறுபட்டிருக்கிறது. யதார்த்தம் மீறிய கற்பனையும்,மர்ம முடிச்சுகளை அவிழ்த்தெறிய துடிக்கும் மனமும் இவருக்கு வாய்த்திருக்கிறது. அதுமட்டுமின்றி சிறுகதையில் வாசகனை கட்டிப்போடும் வித்தையும் பல இடங்களில் காண முடிகிறது.

குறிப்பாக நான்கு சிறுகதைகள் கச்சை,சர்ப்ப வாசனை,அட்சர ஆழி,பால்.
இந்த நான்கு சிறுகதைகளில்தான் மனோஜ் தனித்து நிற்கிறார்.

கச்சை மீது ஆவல்கொண்ட பெண்ணொருவளை கச்சை அணிய சம்மதிக்காத சமுதாயம் நிர்வாணப்படுத்தி அவமதிக்கிறது.அந்த அவமானம் தாளாமல் தூக்கில் தொங்குகிறாள்...இவை எப்போதோ நடந்ததாக சொல்லப்படுகிறது. அவள் தூக்கில் தொங்கிய புளிய மரத்தின் அருகிலிருக்கும் வீட்டில் கதையின் நாயகி வந்து தங்குகிறாள். அவள் அணியும் நவீன கச்சையை தூக்கில் தொங்கியவள் ஆர்வமோடு ஸ்பரிச்ச முயல்வதாக செல்கிறது கதை. இந்தக் கதைதான் இந்த தொகுப்பின் மிகச்சிறந்த கதை என்பேன்.

சர்ப்ப வாசனை கதையில் வனத்தை பற்றிய விவரணைகள் மிக நுட்பமாக அமைந்திருக்கிறது.

சரி இந்தப்பதிவின் தலைப்பிற்கு வருவோம்.

இந்த புனைவின் நிழலை எழுதிய மனோஜை இன்று புத்தக காட்சியில் உயிர்மை அரங்கில் சந்தித்தேன்.
எதிர்பாராத சந்திப்பில் நா எழவில்லை எனக்கு. அருகில் சென்று கரம்பற்றி புனைவில் நிழல் வாசித்தேன் ரொம்ப நன்றிங்க...அடுத்து எப்போ எழுதுவீங்க, என்றெல்லாம் பேசிக்கொண்டே போனேன் என் பெயரைக்கூட சொல்ல மறந்து. அவரது முகத்தில் அளவற்ற மகிழ்ச்சியின் ரேகைகள் படர்வதை உணர முடிந்தது. யாரோ ஒரு அந்நிய‌னின் அடிம‌ன‌திலிருந்து எழுகின்ற‌ பாராட்டை விட‌ சிற‌ந்த‌து எது?

ம‌ன‌ம் க‌வ‌ர்ந்த‌ எழுத்தாளரை ச‌ந்தித்த‌ ம‌கிழ்ச்சியில் திளைத்திருந்த‌போது அருகில் வ‌ந்து நின்றார் ஒருவ‌ர்.அது சாரு நிவேதிதா.

சாருவை ப‌ல‌ முறை பார்த்திருக்கிறேன் ஆனால் பேசிய‌தில்லை. ஏனெனில் அவ‌ரை ப‌ற்றி வ‌ருகின்ற‌ செய்திக‌ளும் வ‌த‌ந்திக‌ளும் அவ‌ர‌து ராச‌லீலாவின் ப‌க்க‌ங்க‌ளையே மிஞ்சிவிடும்.

"அந்தாளா,அவ‌ருகிட்ட‌ எவ‌ன் டா பேசுவான்...இப்போ பேசினா நாளை என் ம‌ன‌ உளைச்ச‌லுக்கு கார‌ண‌ம் நேற்று என்னோடு பேசிய‌வ‌ர்னு வெப்சைட்டுல‌ எழுதுவாரு.."

"அவ‌ரு ஒரு மாதிரி"

"சீ..ஸெக்ஸை த‌விர‌ அவ‌ருக்கு என்ன‌ தெரியும்"

"போதையில‌ இருப்பாருடா...ஜாக்கிர‌தை"

இதுபோன்ற‌ ப‌ல‌ விச‌ய‌ங்க‌ளை கேள்விப‌ட்ட‌தால் வ‌ழ‌க்க‌மான‌ தமிழ‌ன் போல‌ "ந‌ம‌க்கேன் வம்பு" என்று பேச நினைத்தும் பேசாம‌ல் வ‌ந்துவிடுவேன்(க‌ட‌ந்த‌ 2008ம் ஆண்டு புத்த‌க‌ க‌ண்காட்சியிலும் பார்த்துவிட்டு பேச‌மால‌ வீடு திரும்பினேன்)

சாரு எங்க‌ள் அருகில் வ‌ந்த‌தும்,கைகொடுத்து ந‌ல‌ம் விசாரித்தேன். என் பெயர் நிலார‌சிக‌ன் உங்க‌ள‌து இணைய‌த‌ள‌ம் தொட‌ர்ந்து வாசிப்ப‌வர்க‌ளில் நானும் ஒருவ‌ன் என்றேன்.ஆஸாதி புத்த‌க‌ம் வாங்க‌ வ‌ந்தேன் என்றேன்.

இத‌ற்கெல்லாம் சாரு எப்ப‌டி ம‌றுமொழி பேசியிருப்பார்?

நிலார‌சிக‌ன்: சார்,ந‌ல‌மா?

சாரு: ந‌ல்லா இல்ல‌ன்னுதான‌ பேங்க் அக்க‌வுண்ட் கொடுத்திருக்கேன் பார்க்க‌லையா?

நிலார‌சிக‌ன்: உங்க‌ 108 க‌தையும் நெட்ல‌ ப‌டிச்சேன்.

சாரு: "காம‌ரூப‌ க‌தைக‌ள்" வாங்க‌ மாட்டேன்னு இன் டைர‌க்டா சொல்றீயா?


நிலார‌சிக‌ன்: ஆசாதி புத்த‌க‌ம் அமெரிக்க‌ ந‌ண்ப‌ரொருவ‌ர் கேட்டிருந்தார்.வாங்கி அனுப்ப‌லாம்னு வ‌ந்தேன்.

சாரு: அப்ப‌டியே என் பேங்க் அக்க‌வுண்ட்டையும் கொடுத்துடு ராஜா.


இப்ப‌டியெல்லாம் நீங்க‌ள் நினைத்தால் அத‌ற்கு நானும்,சாருவும் பொறுப்ப‌ல்ல‌ :)

மிக‌ மென்மையான‌ புன்முறுவ‌லுட‌ன் கேட்கின்ற‌ கேள்விக‌ளுக்கு மிக‌ நேர்த்தியான‌ ப‌திலை த‌ந்தார்.
சாருவா இது என்று ஆயிர‌ம் முறை ம‌ன‌ம் கேட்டுக்கொண்ட‌து. சாரு மீது நான் கொண்டிருந்த ‍‍நெகட்டிவ் பிம்பம் உடைந்து நொறுங்கியது.எழுத்தில் எப்ப‌டியும் இருந்துவிட்டு போக‌ட்டும்.யாரை ப‌ற்றிய‌ ப‌ய‌முமின்றி எதைவேண்டுமானாலும் எழுத‌ட்டும்.But,He is a Gem இவ்வ‌ளவு ப‌டித்தவ‌ர்,எழுத்தில் சூர‌ர்,க‌லைக‌ள் ப‌ல‌ க‌ற்ற‌வ‌ர் ஆயினும் Down to earth.
இது புக‌ழ்ச்சி என்பவ‌ர்க‌ள் சாருவுட‌ன் ப‌ழ‌கும் ந‌ண்ப‌ர்க‌ளை கேட்டு தெரிந்துகொள்ளுங்க‌ள்.

என் ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் சொன்ன‌து நினைவுக்கு வ‌ருகிற‌து.

அசோக‌மித்திர‌ன்,சுஜாதாவிற்கு அடுத்த‌ப‌டி எதைப்ப‌ற்றியும் பேச‌/எழுத‌ முடிகிற‌ எழுத்தாள‌ர் சாரு ம‌ட்டும்தான்.

சாருவின் ப‌டைப்புக‌ள் அனைத்தையும் நான் வாசித்த‌தில்லை. ஆனால் அவ‌ர் எழுத்தின் வேக‌ம் பிர‌மிக்க‌ வைக்கிற‌து. அல‌சி ஆராய்ந்து எழுதுகின்ற திரைவிம‌ர்ச‌ன‌ங்க‌ள் விய‌க்க‌ வைக்கிற‌து(சமீபத்திய உதார‌ணம்: சுப்பிர‌ம‌ணிய‌புர‌ம் ப‌ற்றிய‌ பார்வை,உயிர்மை இத‌ழில் வெளிவ‌ந்த‌து)

So, ஒருவ‌ருடைய‌ எழுத்தை வைத்து அவ‌ரை எடைபோடாதீர்க‌ள் அவ‌ருட‌ன் ப‌ழ‌கிய‌ பின்ன‌ர் அவ‌ர் ப‌ற்றி பேசுங்க‌ள் என்கிற‌ ப‌ழைய‌ ப‌ஞ்சாங்க‌த்தை பாட‌விரும்பாம‌ல் இந்த‌ ப‌திவுக்கு முற்றுப்புள்ளி இடுகிறேன்.Have a great week ahead guys! :)

8 comments:

said...

உண்மையாகவா?!
சாரு பற்றிய உண்மை விளக்கங்களை மேலும் மெருகூட்டியதற்கு நன்றி.

said...

பழகாமலே விலகி நிற்பவர்கள் பலர் இருக்கிறார்கள் ...

said...

நானும் சாருவை பார்த்தேன் உயிர்மையில்.

ஏனோ, அவரைப் பற்றிய பொய் பிம்பங்களையே அதிகம் கேள்விப்பட்டதால் அவரின் புத்தகத்தை வாங்கவேண்டும் என்ற எண்ண்மே எழவில்லை.

வாங்கவேண்டும்.
பிம்பத்தை உடைத்ததற்கு நன்றி

said...

Hi,

Naanum indha negative comments yoda than book fair la parthuttu pesama irunthuten, avara parkanum nnu than andha stall ku poitu parthutu vanthuten. Nenga sollum pothu na enaku miss pannittomo nnu iruku.... But again next year surea poven parka chance iruntha pesuven endra nambikaiyoda mudikaren.

Uma. S

said...

thank U for telling ur experience with Chaaru. I too wanted to meet him one day. But, I'm afraid I may not.

"Unmai endrum maraikka mudiyadhadu"

said...

நிரம்ப உண்மை....எழுத்தையும் தனிமனித குணமும் ஒன்றாக இருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை...
அன்புடன் அருணா

Anonymous said...

Have you tried 'Rajan Magal' buy Pa.Venkatesan. (Kalachuvadu). That is also a good collection of magic realistic stories/novellas though some of them seem to be written in the impact of latin american writers.

said...

naamai santhikkum yaavaraiyum naamum sinthikka vaiththaal nalam!!!!