Tuesday, January 20, 2015

ஜூலியட்சி விமர்சனம் 2:



அமைதியையும் இருளின் கருமையையும் போதும்போதுமெனுமளவு உடலெலாம் பூசிக்கொண்ட ஓரிரவில், பல்லாயிரக் கணக்கான கால்கள் முளைத்து ஊர்ந்துகொண்டிருந்த சிந்தனைகளின் மீதேறி பயணித்துக் கொண்டிருந்தது புக்குப்பூச்சி.

அப்போது, நிசப்தத்தையே பேரிரைச்சலாகவும், இருளையே வெளிச்சமாகவும் தெரியவைக்கும் வகையில் ஒரு சிறு கனவுத்துண்டைக் கண்டது. அந்தக்கனவைப் பிரித்தால், அதற்குள் பல்வேறு உலகங்கள் உலாத்திக்கொண்டிருந்தன.

ஓருலகத்திலிருந்து மறு உலகத்திற்கும், மறு உலகத்திலிருந்து மற்றோர் உலகத்திற்கும் அலைந்து கொண்டிருந்தன சில பைசாசங்கள்.

அது ஒரு விசித்திரமான உலகம். ரத்தம் வெள்ளையாயிருக்கும், நெருப்புமிழும் டிராகன் பூனைபோல் மடியிலுறங்கும், நகரமே சர்ப்பமாகும். அந்த உலகத்தைக் கேட்க, இரைச்சல்களைக் கழித்து, நிசப்தத்தைக் கேட்கும் காதுகள் வேண்டும். நிறங்களைக் கழித்து நிறமின்மையைப் பார்க்கும் காதுகள் வேண்டும். சலனங்களை ஒதுக்கி, சலனமின்மையை உணரும் புலன் வேண்டும்.

இவை எதுவுமே இல்லையென்றால், அதைப்படித்து, அந்த அனுபவங்களைப்பெற Nilaraseegan - நிலாரசிகன் எழுதிய ஜூலி யட்சி வேண்டும்.

வித்யாஸமான சிறுகதைத் தொகுப்பு.

ஒவ்வொரு கதையும் ஓர் அனுபவம். வெவ்வேறு களத்தில், உலகத்தில், வயதில், நோக்கத்தில் அவை இயங்கினாலும் இறுதிக்கதையில் அவை ஒரு புள்ளியில் இணைந்து, இணை அண்டங்கள் ஓரண்டமாய் ஒழுங்குபடுகின்றன.

இந்தக்கதையில் இன்னது புரிந்தது என்பதைவிட, இன்ன மாதிரியான உணர்வைத்தந்தது எனும் வகையான புக்.

மிகவும் மெல்லிய, ஆனால் கனமான புக். நேரம்காலம் பார்க்காமல் மழைபார்த்தலோ மலைபார்த்தலோ பிடிக்கும் என்போர் படிக்க வேண்டிய புக். அவற்றைப் பார்த்ததில்லை என்போர் இப்புக்கைப் படித்தால் இனி பார்க்கப்பிடிக்கும்.

பு/கடிச்சுதா? புடிச்சது....இல்ல, அதுக்கும் மேல...

புக்குப்பெயர் : ஜூலி யட்சி
வகை: சிறுகதைத் தொகுப்பு

பதிவிட்ட சுட்டி:  https://www.facebook.com/bookpoochi/posts/1552115728375894?fref=nf

To buy Julie Yatchi click here : http://tinyurl.com/JYatchi

0 comments: