Wednesday, August 16, 2006

செஞ்சோலை செல்லங்களுக்கு....

என்ன குற்றம் செய்தன
அந்த அறுபத்தி ஒன்று
பச்சிளம் குழந்தைகள்?


தாய்மொழி தமிழென்பது
குற்றமா?

இலங்கையில் பிறந்தது
குற்றமா?

பெற்றவர்களை இழந்தது
குற்றமா?

செஞ்சோலையில் வசித்தது
குற்றமா?

தாலாட்ட அன்னையில்லை
அறிவூட்ட தந்தையில்லை
சொந்தம் என்று எவரும்
இல்லை....
அதனால் கொன்று போட்டாலும்
கேட்பார் யாருமில்லை என்று
இந்த தண்டனையா?


அடே பிரம்மனே..

படைப்பின் இறைவனே
நெஞ்சில் ஈரமில்லாத,
உடலில் முதுகெலும்பில்லாத,
மனிதர்களை ஏனடா
படைத்தாய்?

அடே எமதர்மா!

எங்கள் பிள்ளைச்செடிகளை
வேரோடு சாய்த்த
மனிதக்கோடரிகள் மீது
எப்போது
உன் பாசக்கயிற்றை
வீசப்போகிறாய்?


இறைவா...

பூவியில் நரகத்தை
மட்டுமே கொடுத்த
எங்கள் செஞ்சோலை பிஞ்சுகளுக்கு
விண்ணிலாவது
சொர்க்கத்தைக் கொடு.


இனவெறி கொண்டவனே!

உனக்கு மட்டும்
இதயம் என்ன
கல்லாகவா இருக்கிறது?

உன் போன்றவர்களால்....

மனித இனத்தில்
பிறந்ததற்காக
முதல் முறையாக
வெட்கப்படுகிறேன்.


வேதனையுடன்,
நிலாரசிகன்.

3 comments:

Anonymous said...

I too feel in similar lines ...

Anonymous said...

உன் கண்ணீர் கவிதை கல் மனதையும் கலங்கவைக்கும். ஆனால் இந்த வெறியர்களுக்கு அது தெரியவில்லையே

Anonymous said...
This comment has been removed by a blog administrator.