Thursday, August 10, 2006

எங்க ஊரு பொழப்பு....

ஏலே முத்துப்பாண்டி!

ஊருக்குள்ள பணக்கார
பெருசு ஒண்ணு உசிர
விட்டுருச்சாம்

நம்ம பயலுகள
கூட்டியாடா!

கறிச்சோறு போடுவாக
காப்பித்தண்ணி ஊத்துவாக

பாடையில போகையில சில்லரை
அள்ளி எறிவாக...

சீக்கிரம் கூட்டியாடா...

இழவு வீட்டுலயாவது
நம்ம அரை வயிறு
முழுசா நிறையட்டும்...

கஞ்சி குடிக்க இழவு
வீடு தேடுற நம்ம
பொழப்பு நம்மோட
போகட்டும்...

0 comments: