Wednesday, July 25, 2007

சின்ன சின்ன பூக்கள்

*உனக்கென்று வாங்கும்போது ம‌ட்டும்
சிறு சிறு நிலாக்களாகிவிடுகின்றன‌
ரோஜாப் பூக்கள்.

*இந்த ஊரில் யாருக்கும்
இரக்கம் இல்லை.
உன் பாதச்சுவடுகளை
மிதிப்பவர்களைத்தான்
சொல்கிறேன்.


* புல்லாங்குழலின் இசை
உணர்கிறேன் இமைமூடி
உன்னை நினைக்கும்போதெல்லாம்.


* வாழ்க்கைப்பாதையில்
உன்னுடனான என் பயணம்
என்றும் தொடர்ந்துகொண்டே
இருக்கிறது
அருகில் நீ இல்லாமலே!

* என்னில் ஒரு சிறுகதை
எழுதிப்போனாய்
நீ.
உன் நினைவுகள்
என்றுமே தொடர்கதையாகி
போனது!

6 comments:

said...

சின்னதாய் சில அருமைகள்!!!

Anonymous said...

Aarugil iruppavargalai vida, pirindhu pooi uyir valiyai undakkum uravugalin pirivu eandrume mudiyatha thodar kathai than...

Kavithaigaludan,
Nila

said...

excellent kavithai. i like very much

said...

excellent kavithai. i like very much

Anonymous said...

சின்ன சின்ன பூக்கள் அல்ல சின்ன சின்ன உணர்வுகள்.. பூக்கள் போல மிக மென்மையான வரிகள்.. அருமை நிலா.

said...

நம் நேசத்துக்குரியவர்கள் நம்மை பிரிந்த பின் ஏற்படுதும் வலியையும்... அந்த வலியில் நாம் உணரும் இனிமையையும் அழகாய் வடித்துள்ளீர்.........

வாழ்த்துக்கள் நிலாரசிகன்.......

நின் பணி தொடர்க..............