Monday, September 17, 2007

இருநிமிடக் கதைகள் - என்னுரை

கவிதை வானில் சிறகடித்துப் பறப்பது எனக்கு எப்போதும் பிடித்த ஒன்று. ரசனைகளையும் கற்பனைகளையும் கவிதையாய் வடிக்கையில் ஏற்படும் ஒரு உணர்வு வார்த்தைகளால் விவரிக்க இயலாதது.
கவிதைகளை விட்டு முதல்முறையாக சிறுகதை உலகிற்குள் அடியெடுத்து வைக்கிறேன். கதை என்று வரும்பொழுது முகத்திலடிக்கும் நிஜங்களும், நிகழ்வதை பதிவு செய்கின்ற விதமும் கதைக்கும் கவிதைக்கும் பல வேறுபாட்டினை எனக்கு உணர்த்தியது.
எழுதுகின்ற களம் வேறுபடும் பொழுது, எழுதுகின்ற வார்த்தைகளும்,வரிகளும் எனக்கே வித்தியாசமாகபட்டது.
இதை எழுதியது நானா என்கிற கேள்வியும் என்னுள் எழுந்தது.
அதற்கு பதிலாக நான் உணர்ந்து என்னவெனில், படைப்பாளி என்பவன்
பலதரபட்ட முகம்கொண்டவனாக இருத்தல் வேண்டும். அதுவே அவனுக்கும் அவன் மொழிக்கும் வளம் சேர்க்கும்.
இக்கதைகளில் நான் எழுதியிருக்கும் சில வார்த்தைகள் உங்களுக்கு அதை உணர்த்தலாம்.
என் கவிதைகளையும், கதைகளையும் ஒப்பீடு செய்யாமல் படிக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.
இங்கே என் சிறுகதைகளை படிக்கலாம் --> http://nilaraseegansirukathaigal.blogspot.com/ உங்களது மேலான விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்.

0 comments: