Wednesday, October 24, 2007

உயிரிலே கலந்தவள்...




அதிகாலை எனை எழுப்ப
எனக்குப் பிடித்த பாடலை
காதோரம் பாடியபடி
என் தலைகோதுவாயே
அதைவிடவும்...

பிறந்தநாள் பரிசு
என்னவென்று ஆர்வமுடன்
நீ என்விழி நோக்க,
உன் நெற்றியில் ஒற்றைமுத்தம்தந்து
நான் உன்விழி நோக்க,
வெட்கத்தில் என் மார்பில்
புதைந்துகொண்டாயே
அதைவிடவும்...

என் உயிரை நீ
சுமந்தபோது இந்தப்பாதங்கள்
நடக்கவேண்டியது மண்மீது
அல்ல மலர்கள் மீது என்று
அறைமுழுவதும் மல்லிகைப்பூக்களை
பரப்பியிருந்ததைக் கண்டு
ஆனந்த அதிர்ச்சியில் அழுது
என் தோள்சேர்ந்தாயே
அதைவிடவும்...

பலநாட்கள் நம்மை
பிரித்த வெளிநாடு
பயணம் முடிந்து
வீடு வந்தவுடன் ஓடிவந்து
அணைத்துக்கொள்ளாமல்
உன்
மடிசாய்த்து தாலாட்டு பாடினாயே
அன்றுதான் உணர்ந்தேன்
என் தாயுமானவள் நீ என்று.

1 comments:

Anonymous said...

very good one, Ur poems are reflecting my feelings