Friday, July 11, 2008

முத்தக்கவிதைகள் மூன்று

1.மெல்லிதழில் மென்மையாய்

முத்தமிட்டு வெட்கப்புன்னகையுடன்

நெஞ்சில் நீ புதைகின்ற

செளந்தர்யத்தில்,

தூவல் கொண்டெழுதிடும்

கவிதைகள் தோற்றுப்போகின்றன


2. முத்தம் பெற முரண்டுபிடித்து

முடியாமல் உறங்கச்செல்கின்ற

எனக்குத் தெரியும்

உறக்கத்தில் இதழ்களை ஈரமாக்கும்

உன் முத்தவித்தை.


3. இறுக பற்றியிருந்த

விரல்கள் தளர்த்தி

நெற்றிமீது ஒற்றைமுத்தமிட்டு

எனை பிரிந்து செல்கிறாய்.

உன் ப்ரியங்களுடன்

வீடுவருகிறேன்

உயிரின்றி.

4 comments:

said...

"முத்தம் பெற முரண்டுபிடித்து முடியாமல் உறங்கச்செல்கின்ற எனக்குத் தெரியும் உறக்கத்தில் இதழ்களை ஈரமாக்கும் உன் முத்தவித்தை."

அருமையான முத்தக் கவிதைகள்.. :)

said...

Arumaiya irukku rendavathu kavithai.

Anonymous said...

முத்தம் பெற முரண்டுபிடித்து

முடியாமல் உறங்கச்செல்கின்ற

எனக்குத் தெரியும்

உறக்கத்தில் இதழ்களை ஈரமாக்கும்

உன் முத்தவித்தை.

naan rasithu suvAitha varigal.. vaazhga valamudan

said...

இரண்டாம் கவிதை சூப்பர் :))