Tuesday, July 08, 2008

ஒற்றைப் பறவை

காற்றைக் கிழித்தபடி

அரை வட்ட நிலையில்

உயரப்பறந்தது

பறவைக்கூட்டம்…

நீண்டு விரிந்திருக்கும்

விசும்பினை தன் சிறிய

இறக்கையினால் அடித்துக்கொண்டே

கூட்டம் தவிர்த்து தனியே

பறந்தது வெள்ளை நிற

பறவையொன்று.

மஞ்சள் வெயில்

படர்ந்த மரத்தின் கிளையிலமர்ந்து

மேலெழும்பிய அதன்

நீண்ட அலகில்

நெளிந்து கொண்டிருந்த

அரவத்தின் செங்குருதி காற்றில்

கலக்கையில் பிற பறவைகளுடன்

சேர்ந்து மறைந்தது அப்பறவை.

3 comments:

Anonymous said...

அருமையான கவிதை !

said...

அழகான கவிதை..

said...

Pala konangalil sinthikka vaikirathu intha kavithai. Vazhthukkal ungalukku.