Tuesday, August 26, 2008

நதிக்கரையில் சில பொழுதுகள்..



ஒரு நாள் மாலைநேரம் நதிக்கரையோரம் நடந்து சென்றோம். சலசலத்தோடும் நதியில் உன் விழிமீன்கள் நீந்திக்கொண்டே வந்தன. ஓடிச் சென்று நதி நீரில் உன் உன் விரல்களால் கோலமிட்டாய். தலைகோத விரல்கள் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் துள்ளி ஓடியது அந்நதி.

என்மீது நீர் தெளித்து விளையாட ஆரம்பித்தாய். உன் பட்டுக்கைகளில் ஏந்திய நீர் விடைபெற்று என் மீது விழுகையில் மலர்களாய் மாறியிருந்தது. சட்டென்று என்னுள் வசந்தகாலம் ஒன்று உருவானது.
நதியில் உன் முகம் பார்த்து சிலிர்த்தாய். உன் முகம் பார்த்த சிலிர்ப்பில் நதியலை ஒன்று ஆனந்தமாய் கரையை முத்தமிட்டது.

தெளிந்த நதி நீரில் கூழாங்கற்கள் உருண்டுச் செல்வது சரித்திரக்கதைகளில் வருகின்ற தேர்ச்சக்கரத்தை நினைவூட்டுகிறது என்றாய் குறுநகை புரிந்துகொண்டு. உன்னை அள்ளியெடுத்து என் நெஞ்சோடு அணைத்துக்கொண்டேன்.

என்னிலிருந்து விலகி மீண்டும் நதி நோக்கி ஓடினாய். நதி என்னைப்பார்த்து பரிகாசபுன்னகையொன்றை சிந்தியது. நதியில் மிதந்து வந்த செவ்வந்தி பூவைக் கண்டவுடன் ஆனந்தமாய் ஏதோவொரு பாடலை பாடுகிறாய். உன் குரலைக் கேட்டவுடன் தலையசைத்துக்கொண்டே மிதந்துச்செல்கிறது அந்தப் பூ.

உறங்க செல்லும் நேரம் கடந்துவிட்ட பின்னரும் உன்னழகை ரசித்தக்கொண்டு மேற்கே நின்றது மாலைச்சூரியன்.
சற்றுநேரம் ரசித்துவிட்டு இனி கனவில் உன் பொன்முகம் காணலாம் என்று நினைத்துக்கொண்டு உறங்கிப்போனது.
இருள் படரத்தொடங்கியபின்னர் என் விரல்களை இறுக்கமாய் பிடித்துக்கொண்டாய் நீ.

நதியைவிட்டு நாம் விலகி நடக்க ஆரம்பித்தோம். உன் பிரிவெண்ணி கவலையில் மெளனமாய் அழுதபடி தன்னில் விழுகின்ற நிலவை துரத்திக்கொண்டிருந்தது நதி.

என் தோளில் உன்னை சுமந்துகொண்டு நம் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அப்பாவாகிய நான்.


16 comments:

said...

Simply superb...

Anonymous said...

This is really superb. Hats off to you my dear friend.

said...

Its Good.. Keep it up...

Anonymous said...

Superb.

Anonymous said...

very nice. i lost my dad. but this brought back his memories along with it tears. thanks ma.

said...

வாழ்த்திய அன்பர்களுக்கு என் நன்றி.

Anonymous said...

You are really awesome...

Anonymous said...

andha nathikarai pozhudhugalil ennai marandhen.keep it up my friend

said...

very nice

Anonymous said...

Its really nice and last few lines are simply suberb...

Anonymous said...

its awesome handoff to u r kavithaigal

said...

Very very nice

said...

Nadhiyil nadantha en natkalai ninaiththu parkiren, ungal varthaigalil keatkirathu en appavin kural.

Anonymous said...

Simply superb....

said...

உங்களது வார்த்தை பிராவகம் மிகவும் அருமை...

நட்புடன் ..
மோகன் தாஸ்

said...

:)