Friday, March 20, 2009

காதலின்றி வேறில்லை - சில காதல் கவிதைகள்


0

பட்டாம்பூச்சியின்
வண்ணச்சிறகில்
கைகள் கோர்த்து
அமர்ந்திருக்கிறோம்
நாம்.
வானமெங்கும் சுற்றித்திரிந்த
பட்டாம்பூச்சி
பூவொன்றின் இதழ்களில்
உன்னை இறக்கிவிடுகிறது.
பூவுக்குள் ஓடி மறைகிறாய்
நீ.
பூக்களின் பெயர்க்காரணத்தை
உலகிற்கு அறிவிக்கிறேன்
நான்!

0

ஓடிவந்து என்
கழுத்தைக் கட்டிக்கொண்டு
உன் கன்னம் உரச
நீ பேசும்பொழுதெல்லாம்
விதவித வண்ணங்களாய்
என்னுள் பெய்கிறது மழை.

0

உனக்கு பிடித்த மண்வாசத்தில்
நீயும்
எனக்கு பிடித்த உன்வாசத்தில்
நானும்
ஒற்றை குடைக்குள்
விரல்கள் கோர்த்து
மெளனித்து நடக்கிறோம்.
விரல்களின் ஸ்பரிசத்தில்
வலுக்கிறது காதல்மழை.

0

சிப்பிக்குள் ஒளிந்திருக்கும்
முத்தைப்போல்
உன் கன்னக்குழிக்குள்
ஒளிந்திருக்கிறது
எனக்கான காதல்புன்னகை!

0

24 comments:

said...

உங்கள் கவிதைகள் அனைத்துமே மிகவும் அருமையக உள்ளது
இப்பதிவும் என்னை மிகவும் ஈர்த்து


//பூவுக்குள் ஓடி மறைகிறாய்
நீ.பூக்களின் பெயர்க்காரணத்தை
உலகிற்கு அறிவிக்கிறேன்
நான்!//



//ஓடிவந்து என்
கழுத்தைக் கட்டிக்கொண்டு
உன் கன்னம் உரச
நீ பேசும்பொழுதெல்லாம்
விதவித வண்ணங்களாய்
என்னுள் பெய்கிறது மழை//

அருமை அருமை

said...

//உனக்கு பிடித்த மண்வாசத்தில்
நீயும்
எனக்கு பிடித்த உன்வாசத்தில்
நானும்
ஒற்றை குடைக்குள்
விரல்கள் கோர்த்து
மெளனித்து நடக்கிறோம்.
விரல்களின் ஸ்பரிசத்தில்
வலுக்கிறது காதல்மழை...//

அருமை நண்பா..

said...

மிக மிக அழகாய் காதல்...

எனக்குள்ளும் வந்து விட்டு போகிறது...

மிக அருமை... வாழ்த்துகள்

Anonymous said...

உனக்கு பிடித்த மண்வாசத்தில்
நீயும்
எனக்கு பிடித்த உன்வாசத்தில்
நானும்
ஒற்றை குடைக்குள்

அருமை

said...

பூவுக்குள் ஓடி மறைகிறாய்
நீ.
பூக்களின் பெயர்க்காரணத்தை
உலகிற்கு அறிவிக்கிறேன்
நான்!

உனக்கு பிடித்த மண்வாசத்தில்
நீயும்
எனக்கு பிடித்த உன்வாசத்தில்
நானும்
ஒற்றை குடைக்குள்
விரல்கள் கோர்த்து
மெளனித்து நடக்கிறோம்.
விரல்களின் ஸ்பரிசத்தில்
வலுக்கிறது காதல்மழை.

ஓடிவந்து என்
கழுத்தைக் கட்டிக்கொண்டு
உன் கன்னம் உரச
நீ பேசும்பொழுதெல்லாம்
விதவித வண்ணங்களாய்
என்னுள் பெய்கிறது மழை.

உங்கள் கவிதையே காதலாய்
கவிதை அருமை

Anonymous said...

முதல் கவிதை அழகு!

வாழ்த்துக்கள் நண்பரே!

said...

romba nalla iruku

said...

அன்பின் நிலாரசிகன்,

அழகான, அர்த்த பொதிந்த படமு, அதற்கேற்ற அற்புதமான கவிதையு. இத்தகைய படைப்பு நிலாரசிகனிடமிருந்துதான் வரும்.

>> உனக்கு பிடித்த மண்வாசத்தில்
நீயும்
எனக்கு பிடித்த உன்வாசத்தில்
நானும்
ஒற்றை குடைக்குள்
விரல்கள் கோர்த்து
மெளனித்து நடக்கிறோம்.
விரல்களின் ஸ்பரிசத்தில்
வலுக்கிறது காதல்மழை. >>

அன்புடன்
சக்தி

said...

....it literally created a visual image of beautiful things in my head....tamil vazhga!

said...

......ah! really nice.....it was more than poetry , it was a visual treat of beautiful images in my head....Tamil Vazhaga!

Anonymous said...

பூக்களின் பெயர்க்காரணத்தை
உலகிற்கு அறிவிக்கிறேன்
நான்!


roja, malligai... ithellam unga kaathali(kal) peyara??

said...

காதல் சொட்ட சொட்ட ஒரு காதல் கவிதை...அருமை

said...

பூக்களின் பெயர்க்காரணம் - மிக அருமை!

said...

உனக்கு பிடித்த மண்வாசத்தில்
நீயும்
எனக்கு பிடித்த உன்வாசத்தில்
நானும்
ஒற்றை குடைக்குள்
விரல்கள் கோர்த்து
மெளனித்து நடக்கிறோம்.
விரல்களின் ஸ்பரிசத்தில்
வலுக்கிறது காதல்மழை.

Really i like n love very much this kavithai,really pretty gr8,thanks alot sir keep on like tht.....

Anonymous said...

உனக்கு பிடித்த மண்வாசத்தில்
நீயும்
எனக்கு பிடித்த உன்வாசத்தில்
நானும்
ஒற்றை குடைக்குள்
விரல்கள் கோர்த்து
மெளனித்து நடக்கிறோம்.
விரல்களின் ஸ்பரிசத்தில்
வலுக்கிறது காதல்மழை.

I love this kavithai nilla...

said...

உனக்கு பிடித்த மண்வாசத்தில்
நீயும்
எனக்கு பிடித்த உன்வாசத்தில்
நானும்
ஒற்றை குடைக்குள்
விரல்கள் கோர்த்து
மெளனித்து நடக்கிறோம்.
விரல்களின் ஸ்பரிசத்தில்
வலுக்கிறது காதல்மழை

Nice lines, Nila ...

--Chellz

said...

Beautifull.....

said...

yenadhu kanngal vertha kavidhaigal umadhu

said...

//உனக்கு பிடித்த மண்வாசத்தில்
நீயும்
எனக்கு பிடித்த உன்வாசத்தில்
நானும்
ஒற்றை குடைக்குள்
விரல்கள் கோர்த்து
மெளனித்து நடக்கிறோம்.
விரல்களின் ஸ்பரிசத்தில்
வலுக்கிறது காதல்மழை.//

மிக அழகிய கவிதை...

said...

Ella kavithaigalum arumai, romba natkalukku piragu sila vithayasamana kaathal kavithaigalai vaasikka nertha unarvu.

said...

Amazing:))


\உனக்கு பிடித்த மண்வாசத்தில்
நீயும்
எனக்கு பிடித்த உன்வாசத்தில்
நானும்
ஒற்றை குடைக்குள்
விரல்கள் கோர்த்து
மெளனித்து நடக்கிறோம்.
விரல்களின் ஸ்பரிசத்தில்
வலுக்கிறது காதல்மழை.\

beautiful lines.......!

Anonymous said...

நண்பா........காதல் செய்வதால் கவிதைகள் வரும் -
உங்கள் கவிதைகள் படித்தால் அதன் மீதல்லவா காதல் வருகிறது!!?

உங்கள் கவிதைகள் ஓவொன்றும் என் இதயத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஏதோ ஒரு நினைவை காற்றில் பறக்க விடுகின்றன.

உங்கள் கவிதைகள் படித்த பின்பு என் காதலியை விட காதலை ரசிக்க துவங்கி விட்டேன். தங்கள் காதல் கவிதைகள் நிலைத்து வளரட்டும். என் இனிய வாழுத்துக்கள்.

- ஜீவா

Jeeva said...

நண்பா........காதல் செய்வதால் கவிதைகள் வரும் -
உங்கள் கவிதைகள் படித்தால் கவிதை மீதல்லவா காதல் வருகிறது!!?

உங்கள் கவிதைகள் ஒவ்வொன்றும் என் இதயத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஏதோ ஒரு நினைவை காற்றில் பறக்க விடுகின்றன.

உங்கள் கவிதைகள் படித்த பின்பு என் காதலியை விட காதலை ரசிக்க துவங்கி விட்டேன். தங்கள் காதல் கவிதைகள் நிலைத்து வளரட்டும். என் இனிய வாழுத்துக்கள்.

- ஜீவா

said...

உனக்கு பிடித்த மண்வாசத்தில்
நீயும்
எனக்கு பிடித்த உன்வாசத்தில்
நானும்
ஒற்றை குடைக்குள்

அருமை